Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 53/114 : ஸ்ரீ கிருஷ்ண அவதார

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 53/114 : ஸ்ரீ கிருஷ்ண அவதார

    5. திருவரங்கத்து மாலை - 53/114 : ஸ்ரீ கிருஷ்ண அவதார வைபவம் 3/25

    கடிக்கும் காளியன் மேல்
    நடிக்கும் கண்ணன்
    குடிக்கும் களவுக்கு
    அடிக்கும் கோபி !
    துடிக்கும் காசினி !

    கடிக்கும் கரளப் பிறை வாள் எயிற்று வெம் காளியன் மேல்
    நடிக்கும் பெரிய பெருமாள் , அரங்கர் , நறை கமழ் பால்
    குடிக்கும் களவுக்கு மாறு கொண்டே , ஒரு கோபி பற்றி
    அடிக்கும் பொழுதில் , பதினால் உலகமும் அடிபட்டவே !

    பதவுரை :

    கடிக்கும் கரளப் பிறை கடிக்கின்ற நஞ்சை உடைய பிறையையும்
    வாள் எயிற்று வாளைப் போன்ற கூரிய பற்களையும் உடைய
    வெம் காளியன் மேல் நடிக்கும் கொடிய காளியன் எனும் பாம்பின் மேல் கூத்தாடிய
    பெரிய பெருமாள் அரங்கர் பெரிய பெருமாள் ஆகிய அரங்க நாதர்
    நறை கமழ் பால் சிறு கிருஷ்ணனாய் மணம் கமழும் பாலை
    குடிக்கும் களவுக்கு யாரும் அறியாதபடி குடித்த திருட்டுக்கு
    மாறு கொண்டே ஒரு கோபி கோபம் கொண்டு ஒரு இடைச்சி
    பற்றி அடிக்கும் பொழுதில் கண்ணனைப் பிடித்தது அடிக்கும் போது
    பதினால் உலகமும் எல்லா உலகங்களில் உள்ள சராசரங்களும்
    அடிபட்டவே ! அடி பட்டன

    அடுத்து வருவது : ஸ்ரீ கிருஷ்ண அவதார வைபவம் 4/25


    V.Sridhar

    Last edited by sridharv1946; 06-12-13, 21:17.
Working...
X