Announcement

Collapse
No announcement yet.

5. திருவரங்கத்து மாலை - 99/114 : சயனத் திருக்கோலம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 5. திருவரங்கத்து மாலை - 99/114 : சயனத் திருக்கோலம்

    5. திருவரங்கத்து மாலை - 99/114 : சயனத் திருக்கோலம்

    ஞாலத் திகிரி பகல் இரவு ஆக நடத்தும் இந்தக்-
    காலத் திகிரி நடக்க அற்றோ - வெங்கனல் உமிழ் வாய்
    ஆலப் பணி அணி மீதே , அரங்கத்து அமர்ந்து , உறையும்
    நீலக் கடல் கண் விழித்து உறங்காவிடின் , நிச்சமுமே

    பதவுரை :

    அரங்கத்து திரு அரங்கத்தில்
    வெங்கனல் உமிழ் வாய் கொடிய நெருப்பை உமிழும் வாயையும்
    ஆலப் பணி அணி மீதே அமர்ந்து நஞ்சையும் உடைய ஆதி சேஷன் மேல் இருந்து
    உறையும் நீலக் கடல் வாழும் நீலக் கடல் போன்ற நம் பெருமாள்
    நிச்சமுமே கண் விழித்து நாள் தோறும் கண் விழித்து
    உறங்காவிடின்யோக நித்திரை செய்யா விட்டால்
    ஞாலத் திகிரி பூமிச் சக்கரத்தை
    பகல் இரவு ஆக நடத்தும் பகலும் இரவுமாக நடத்துகின்ற
    இந்தக் காலத் திகிரி இந்தக் காலச் சக்கரம்
    நடக்க அற்றோ நடப்பதற்கு முடியுமோ ?

    V.Sridhar

Working...
X