Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 026/104 : வேங்கடமே கம் பத்தானை 

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 026/104 : வேங்கடமே கம் பத்தானை 

    6. திரு வேங்கட மாலை 026/104 : வேங்கடமே கம் பத்தானை கடுத்தார் காப்பு !

    ஒண் கொம்பின் தேன் இறால் ஊர் பிறைக் கோட்டால் உடைந்து
    விண் கும்ப வாய் நிறைக்கும் வேங்கடமே - வண் கும்ப
    கம்பத்தானைக்கடுத்தார் கார் அரக்கர் போர் மாளக்-
    கம்பத்தானைக்கடுத்தார் காப்பு

    பதவுரை :

    கம்பத்தானைக்கடுத்தார் - கம்பத்து + ஆனைக்கு + அடுத்தார்
    கம்பத்தானைக்கடுத்தார் - கம் + பத்தானை + கடுத்தார்

    ஒண் கொம்பின் ஓங்கி விளங்கும் மரக் கொம்புகளில் கட்டப்பட்ட
    தேன் இறால் தேன் கூண்டு
    ஊர் பிறை வானத்தில் செல்லும் பிறைச் சந்திரனுடைய
    கோட்டால் உடைந்து வளைந்த கொம்பு படுதலால் உடைந்து
    விண் கும்ப வானத்தில் இருக்கும் குட வடிவமான கும்ப ராசியின்
    வாய் நிறைக்கும் வாய் அளவு நிறைக்கும் இடமான
    வேங்கடமே திரு வேங்கட மலையே
    வண் கும்ப வலிவான மத்தகத்தை உடைய
    கம்பத்து ஆனைக்கு முதலை காலைக் கௌவியதால் நடுங்கும் கஜேந்திரனுக்கு
    அடுத்தார் அருகில் வந்து அபயம் அளித்தவரும்
    கார் அரக்கர் போர் மாள கரிய அரக்கர்கள் போரில் இறக்க
    கம் பத்தானை தலைகள் பத்து உடைய ராவணனை
    கடுத்தார் காப்பு கோபித்து அழித்தவரும் ஆன திருமால்
    காப்பு உயிர்களைப் பாதுகாக்கும் இடம் ஆகும்

    V.Sridhar

Working...
X