Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 092/104 : வேங்கடமே நத்துக்கு இ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 092/104 : வேங்கடமே நத்துக்கு இ




    போதா இரு சுடரும் போதுதற்கும் , ஓதுதற்கும் ,
    வேதாவினால் முடியா வேங்கடமே - மாதாவின்
    வீங்குதனத்துக்கினியான் விம்மி அழாது ஆட்கொண்டான்
    தாங்குதனத்துக்கினியான் சார்பு







    போதா இரு சுடரும் கற்ப காலம் வரை அழியாத சூரிய சந்திரர்கள்

    வே தாவினால் மூங்கில் மிகுதியாக வளர்வதால்
    போதுதற்கும் முடியா வானவெளியில் செல்லமுடியாத இடமும் ,
    வேதாவினால் பிரம்மாவினால்
    ஓதுதற்கும் முடியா தங்கள் மகிமையை சொல்வதற்கு முடியாத இடமுமான
    வேங்கடமே திரு வேங்கட மலையே
    மாதாவின் வீங்கு தனத்துக்கு தாயின் பெருத்த தனத்திற்கு
    இனி யான் விம்மி அழாது இனிமேல் நான் அழாமல் இருக்கும்படி
    ஆட்கொண்டான் என்னை அடிமையாகக் கொண்டவரும் ,
    தாங்கு தன் நத்துக்கு இனியான் சங்கத்தை இனிமையாக வைத்திருப்பவனுமான திருமால்
    சார்பு இருக்கும் இடமாகும்


    V.Sridhar
    Last edited by sridharv1946; 12-02-14, 21:10.
Working...
X