Announcement

Collapse
No announcement yet.

நியாயக்களஞ்சியம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • நியாயக்களஞ்சியம்

    நியாயக்களஞ்சியம்



    கழுதைக் குரல் ( ராய பருத நியாயம் ) :
    கழுதையின் குரல் தொடக்கத்தில் பெரிதாகவே தொடங்கி உச்சத்துக்குச் சென்று பின் இறங்கி மத்யமமாகிப் படிப்படியே இறங்கி அடங்கிவிடும் . கீழோர் அன்பும் பெரிதாகவே தொடங்கி வளர்ந்து பின் படிப்படியாய்த் தேய்ந்து பின் இல்லயாகும்



    கற்பகத்தின் பழம் உடனே பயன்படுகின்றது என்னும் நியாயம் :
    கற்பக மரத்தின் காய் தோன்றியவுடனே பழுத்துவிடுமாம் . ஏனைய மரங்களின் காய்கள் தோன்றிப் பன்னாளைக்குப் பின்னர் மலர்வது போல அன்று . அதுபோலவே புண்ணியவான் விருப்பம் உடனே இறைவேறும் . ( கர்பக மரமும் பருவத்தில்தான் பழந்தருமெனில் ஏனைய மரங்களைவிட அதற்கு என்ன சிறப்பு உள்ளது )


    --- கவியரசு கு. நடேசகவுண்டர் .

    எவ்வெச் சமயத்தில் பெண்டிரைப் பிறர் காண்பது குற்றமாகாது : நியாயம் .
    இராமன் , சீதை இலக்குமணனுடன் காட்டிற்குச் செல்ல அயோத்தி வீதியில் நடக்கும்போது , நகர மக்கள் நீர் பொழியும் கண்ணீனராய் வழியை அடைத்து நின்றனர் . அப்போது இராமன் சீதையை நோக்கி , " மைதிலி உன் முக்காட்டினை நீக்குக " என்று பணித்தான் . அவளும் அங்ஙனமே செய்தாள் . பின் , நகர மக்களை நோக்கிப் , " பெருமக்களே என் மனைவியை , நீர் நிறைந்த உமது விழிகளால் தடையின்றிப் பார்த்துக் கொள்ளுங்கள் ; மகளிரை வேள்வியிலும் , திருமணத்திலும் , ஆபத்திலும் , காட்டிலும் பார்ப்பது குற்றமாகாது " என்றான் .
Working...
X