Announcement

Collapse
No announcement yet.

சப்தஸ்வரங்களின் சாவி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • சப்தஸ்வரங்களின் சாவி

    சப்தஸ்வரங்களின் சாவி

    information

    Information

    மங்கள இசை என்று அழைக்கப்படும் நாதஸ்வரம் வாசிக்க 2 முக்கியமான அம்சங்கள் தேவை . அதில் ஒன்று நதஸ்வரத்தில் 7 விதமான ராகங்கள் ( சப்தஸ்வரம் ) வெளிப்படுத்தக் கூடிய துவாரங்கள் . மற்றொன்று நாதஸ்வர வித்வான் வாசிக்க பயன்படுத்தப்படுத்தும் சீவாளி








    முற்றிய தட்டைகளை அறுவடை செய்து கொண்டு வந்து தோகைகளை நீக்கிவிட்டு தட்டையை மட்டும் காய வைக்கின்றனர் . பின்னர் , தேவையான அளவில் சிறிது சிறிதாக வெட்டி உலர்த்தி , தண்ணீரில் நனைத்து அதற்குரிய இயந்திரத்தை கொண்டு பக்குவப்படுத்தி நுணுக்கமாக தயாரிக்கின்றனர் .
    சீவாளி இறுக்கமாக இருப்பதற்கு செம்பிலான நீள உருண்டை தயாரித்து அதற்குள் பொருத்தி , நூலால் இணைத்து தயாரிக்கின்றனர் . ஒரு மாதத்திற்கு 500 சிவாளிகள் தயாரிக்கப்படுகின்றன .
    தமிழகத்தில் திருவாவடுதுறை , பண்ருட்டி , திருவீழிமிழலை ஆகிய 3 இடங்களில் மட்டும் தான் நாதஸ்வரத்திற்கான சீவாளி தயரிக்கப்படுகிறது


    ஒரு டன் ரூபாய் ஆயிரம் வரை விற்கப்படுகிறது . சீவாளி செருக பயன்படுத்தும் செப்பி குழலை முன்பு நாங்களே தயாரித்தோம் . இப்போது வேலை அதிகமாகி விட்டதால் மற்றவர்களிடமிருந்து வாங்குகிறோம்


    சராசரியாக 6 மாதம்தான் சீவாளி பயன்படும் என்பதால் அடிக்கடி நாதஸ்வர கலைஞர்கள் வாங்குகின்றனர் . கோடை காலத்தில் அறுவடை செய்து , நெல்லுடன் சேர்த்து அவித்து , நீராகாரத்தில் (சாதம் ஊற வைத்த தண்ணீர் தான் ) ஊறவைத்து , கிட்டி பனையில் சொருகி , நெருக்கி கட்டி முடிச்சு போட்டால் சீவாளி ரெடி

    --- முத்துராமன் , சீவாளி தயாரிப்பாளர் . திருவாவடுதுறை . தினமலர் , 18 - 05 - 2009 .
Working...
X