Announcement

Collapse
No announcement yet.

மனிதனின் இயலாமை !

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மனிதனின் இயலாமை !

    ஆங்கிலக் கவிதை ஒன்று . யார் எழுதியது என்று தெரியவில்லை


    நான் சிறுவனாக இருந்தபோது
    இந்த உலகை மாற்ற ஆசைப்பட்டேன்
    நடக்கவில்லை .
    இளைஞன் ஆனபோது ஊரைத்
    திருத்த முனைந்தேன்
    முடியவில்லை
    குடும்பத் தலைவன் ஆனபோது
    குடும்பத்தையாவது திருத்த விழைந்தேன்
    இயலவில்லை .
    தந்தை ஆனபோது
    பிள்ளைகளை மாற்றிவிட வேண்டும்
    என்று துடித்தேன்
    அவர்கள் என் பேச்சைக் கேட்கவில்லை




    இந்தக் கவிதை ஒரு மனிதனின் இயலாமையைச் சொல்வதுபோல் இருந்தாலும் , இந்த உலகில் சில விஷயங்களை மாற்றி அமைப்பது நம் சக்திக்கு உட்பட்டதாக இல்லை என்ற உண்மையை உணர்த்துகிறது .
    சமூக மாற்றங்களை ஏற்படுத்த வேண்டும் என்ற அக்கறையில் நாம் எடுக்கிற பல்வேறு முயற்சிகளும் பாராட்டுக்கு உரியது . ஆனால் , நானும் எனது நிலைப்பாடுகளும்தான் சரி . அதற்கேற்ப இந்த உலகம் தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்ற மனோபாவம்தான் பிரச்னை


    ---. நீயும் நானும் ! தொடரில் . கோபிநாத் . ஆனந்தவிகடன் 8 / 9 / 2010 .
Working...
X