Announcement

Collapse
No announcement yet.

தெய்வத்தின் குரல்-6

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தெய்வத்தின் குரல்-6

    ஸதாசாரம் என்பதற்கு லக்ஷணம் சொல்லுகிற போதே அது ச்ருதி-ஸ்மிருதிகளின் மூல ரூல்களுக்கு விரோதமில்லாமல் இருக்க வேண்டும் என்று தெளிவாகச் சொல்லியிருக்கிறது,
    யஸ்மிந் தேசே யத் ஆசார: பாரம்பர்ய: க்ரமாகத:
    ச்ருதி-ஸ்ம்ருத்-யவிரோதேந ஸதாசாரஸ்-ஸ உச்யதே
    பரம்பரையாக, அநேக ஸ்த்துக்கள் வெவ்வேறு தேசங்களிலோ, அல்லது ஒரு தேசத்தின் வெவ்வேறு சீமைகளிலும் எவ்வாறு வாழ்ந்திருக்கிறார்களோஅந்த முறைக்கு ஸதாசாரம் என்று லக்ஷணம் கொடுக்கப் பட்டிருக்கிறது. இவ்வாறு சொல்லும்போது, நம் தேசத்தில் எந்த சீமையானாலும், ஆசாரங்கள் ச்ருதி-ஸ்மிருதிகளுக்கு விரோதமாக அதாவது, ஆசாரம் என்பது வேத மற்றும் மூல தர்ம சாஸ்திரங்களுக்கு விரோதமாக போகாதவையாக இருக்க வேண்டும் என்று நிபந்தனை போட்டிருக்கிறது.

    சாஸ்திரங்களில் அது போடுகிற விதிக்கு மாறாக அதுவே விலக்கு தருகிற இடத்தில் மட்டுந்தான் நாமும் விலகிப் போகலாம். மற்றபடி மூலத்தின்படி செய்ய வேண்டும். செய்வது என்பது தற்போதைய வாழ்கை முறையில் ஸாத்யமோ இல்லையோ, மனசளவிலாவது மூல சாஸ்திர ரூல்தான் அதாரிடி என்ற எண்ணம் வேண்டும். அந்தப்படி பண்ணத்தான் நம்மால் முடிந்த அளவு முயல வேண்டும்.
    நன்றி: தெய்வத்தின் குரல் பக்கம் 523-524
Working...
X