Announcement

Collapse
No announcement yet.

தெய்வத்தின் குரல்-15

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தெய்வத்தின் குரல்-15

    யஸ்ய தேவே பராபக்திர்-யதா தேவே ததா குரெள
    தஸ்யைதே கதிதாஹ்யர்த்த்தா: ப்ரகாசந்தே மஹாத்மந:
    என்று ச்வேதாத்வதர உபநிஷத் சொல்லுகிறது.





    பிரகாசிக்கும் என்றால் உள்ளர்த்தங்கள் மூளைக்குப் புரியும் என்று அர்த்தம் செய்து கொள்வதோடு முடிவதில்லை. மூளைக்குப் புரியும்படியாக ரஹஸ்யார்த்தங்களை குருவே சொல்லிவிடுகிறார். பக்தியினால்தான் இந்த மூளைக் கார்ய்த்தைப் பண்ணிக் கொள்ளவேண்டும் என்றில்லை. பின்னே என்ன அர்த்தம் என்றால், உபதேசத்தின்ஸாரமாக எந்த அநுபவம் இருக்கிறதோ, அது சிஷ்யனின் ஹ்ருதயத்தில் பிரகாசிக்கும். ஈச்வர க்ருபையில், குரு க்ருபையில் மறைபொருளை, சிக்கலான விஷயத்தை ஸ்பஷ்டமாகப் புரிந்துகொண்டு விடுகிற திறமை பெறக் கூடும்தான். ஆனால் இன்னும் சற்று ஆலோசித்துப் பார்த்தால், இப்படி மூளையின் சாதிப்போடு விஷயத்தைமுடித்துவிட்டால் அது பிரயோஜனமில்லை என்று தெரியும். அத்யாத்மக உபதேசம் எதற்கு இருக்கிறது?, மூளையின் த்ருப்திக்கா?, இல்லையே?. மூளையின் த்ருப்தி அஹங்காரம் சேர்ப்பதல்லவா?. அத்யாத்மக உபதேசமோ அஹங்காரம் அழிவதற்கல்லவா. ஆகையினால் மூளை ரீதியான ப்ரகாசத்தில் எதையோ தெளிவு செய்வதென்றுவைத்துக் கொண்டால் கூட, அதுவும் பிரத்யக்ஷமாக சிஷ்யனுக்கு அனுபவத்தில் வரவேண்டும். ஸ்வாநுபூதி என்பது இப்படி ஒருவர் நேராகத் தானே அனுபவிப்பதுதான். ஸ்வாநுபூதி என்பதை அபரோக்ஷாநுபூதி என்றும் சொல்வார்கள். அபரோக்ஷாநுபூதி என்ற பெயரிலேயே ஆசார்யாள் ஒரு க்ரந்தம் எழுதியிருக்கிறார்.


    notice

    Notice

    பரோக்ஷம், அபரோக்ஷம் என்று இரண்டு. பரோக்ஷம் என்பது நமக்குத் தெரியாமல் ஒளிந்து கொண்டிருப்பது, ரஹஸ்யமாக இருப்பது. அபரோக்ஷம் என்பது பரோக்ஷம் என்பதற்கு ஆப்போஸிட், நமக்கு நன்றாகத் தெரிவது. கேள்வியறிவு பரோக்ஷம், அநுபவ அறிவு என்பது அபரோக்ஷம். அநுபவத்திற்கு வராதவரையில் ஒன்றைப் பற்றியஅறிவு அதன் பிரயோஜனமான ஆனந்தத்தை நமக்குக் காட்டாமல் ரஹஸ்யமாக வைத்துக் கொண்டு இருக்கிறது என்று அர்த்தம். ஆத்மாவுக்கான ஸமாசாரங்களை டன் டன்னாக புஸ்தகத்தில் படித்தும், நெட்டுருப் போட்டும், கோட் (quote) பண்ணியும் ப்ரயோஜனமில்லை. குருவே உபதேசம் செய்தாலும், அது காதுக்குள்ளும், காது வழியாகமூளைக்குள்ளும் போனாலுங்கூட, ப்ரயோஜனமில்லை. அதுவரையில் கூட அது பரோக்ஷம்தான். ஆத்மாவிலேயே அது அநுபவமகாக்ப் பேசணும். அப்போதுதான் அது அபரோக்ஷம்.





    ஒரு ஸித்தாந்தமென்றால் அது ச்ருதி, யுக்தி, அனுபவம் என்ற மூன்றுக்கும் பொருந்துவதாக, மூன்றுக்கும் ஏற்புடையதாக இருக்கவேண்டுமென்ற கருத்தையே எல்லா ஆசார்யர்களும் பின்பற்றியிருக்கிறார்கள். ச்ருதி சொல்கிற விஷயங்களை அப்படியே ஏற்க வேண்டும். அதற்கு விரோதமில்லாமலும், அதன் முடிவுக்கே கொண்டு விடுவதாகவும்,அல்லது அதில் குறிப்பு மட்டும் காட்டியிருப்பதை நன்றாக விளக்கியும், அதில் சொல்லாமல் விட்ட் விஷயங்களை நன்றாக ஆராய்ச்சி பண்ணியும் புத்திவாதம் செய்வதுதான் யுக்தி. முடிவிலே ச்ருதியும் யுக்தியும் அநுபவத்தில் கொண்டுவிட்டால்தான் ப்ரயோஜனம். அந்த அநுபவம் ஹ்ருதயம் என்பதான உயிருக்குள்ளேயே ஏற்படுவது. ஆகவே ஈச்வர பக்தி இருப்பவனுக்கே, அதோடுகூட அந்த ஈச்வர பக்திக்கு இணையான குருபக்தி உள்ள்வனுக்கே தத்வார்த்தமெல்லாம் பிரகாசிக்கும் என்று சொல்கிறபோது அந்த ப்ரகாசம் என்பது இந்த அநுபூதிதான். ப்ரகாசம் என்பதை அப்படியே மொழி பெயர்த்த மேல்நாட்டினர் அதை enlightenment என்றும் illumniation என்று சொல்கிறார்கள்.


    நன்றி: தெய்வத்தின் குரல் பாகம் - 5; பக்கம் 89-91
Working...
X