Announcement

Collapse
No announcement yet.

தவஸத்தின் போது பிராமணாளுக்கு வஸ்திரம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தவஸத்தின் போது பிராமணாளுக்கு வஸ்திரம்

    திரு bmbc/mr soundarajan anna/திரு கோபாலன் அண்ணா,

    please advise me. எனது தந்தையார் தவறி 12 வருடங்களும் தாயார் தவறி 3 வருடங்களும் ஆகின்றன. இது நாள் வரை எனது தந்தையார் காலத்தில் இருந்தே அவர் தம்முடைய தாய் தந்தையர்க்கு தவசம் செய்த காலத்தில் இருந்தே தவசத்திற்கு வரும் 2 பிராமணாளுக்கும் வஸ்திரம் கொடுத்தது இல்லை. இந்த வருடத்தில் இருந்து நான் ஆரம்பிக்க வேண்டும். வஸ்திரம் கொடுக்க வேண்டும் என நினைக்கிறேன். கொடுக்கலாமா? அப்படி கொடுக்கும்போது செய்து வைக்கும் வாத்யாருக்கும் கொடுக்க வேண்டுமா? கொடுக்கலாம் என்று சொன்னால் அவர்க்கும் கொடுக்கிறேன். ஆத்து வாத்யாரிடமே இந்த இஷயத்தை கேட்க சற்று தயக்கமாக இருப்பதால் தங்களை சிரமப்படுத்திவிட்டேன். தயவுசெய்து விபரம் கூறவும். சிரமத்திற்கு மன்னிக்கவும்.
    thanks
    radhakrishnan

  • #2
    Re: தவஸத்தின் போது பிராமணாளுக்கு வஸ்திரம்

    ஶ்ரீ:
    எந்த வழிபாட்டிலும் (பூஜையிலும்) செய்யப்படும் உபசாரங்கள் 16 (சோடச உபசாரம்) ஆகும்.
    உணவளிப்பதும், வஸ்த்ரம் அளிப்பதும் அவற்றில் அடங்கும்.
    ச்ராத்தத்தில் உணவளிப்பது மிக மிக முக்கியம் - அது தவிர மற்ற அனைத்து உபசாரங்களும்
    அவரவர் வசதியைப் பொறுத்தது.
    ஸ்வாமிகளுக்கு வாங்கிக்கொடுப்பதால் தனக்கும் வாங்கிக்கொடுத்தேயாகவேண்டும் - என்று
    ப்ருஹஸ்பதி வற்புறுத்த நியாயம் இல்லை. கோரிக்கை வைக்கலாம்.
    வசதியுள்ளவர்கள் பரிசீலிக்கலாம்.
    என்.வி.எஸ்


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment


    • #3
      Re: தவஸத்தின் போது பிராமணாளுக்கு வஸ்திரம்

      எனக்குத் தெரிந்த வரையில் ப்ராம்ணார்த்த ஸ்வாமிகளுக்கு ஸ்நானத்திற்கான ஏற்பாடு செய்து அவர்களுக்கான புதிய வஸ்த்ரம் நனைத்து மடியாக உலர்த்தி அணியச்செய்வது எங்கள் அகங்களில் வழக்கம் இவ்வளவு நாட்கள் செய்யாவிட்டாலும் இனி வரும் நாட்களில் செய்வது தவறில்லை ப்ரஹஸ்பதி ஸ்வாமினுக்குச் செய்வது என்பது கர்த்தாவின் சக்தியைப் பொருத்த விஷயம் செய்வதில் தவறில்லை கட்டாயமும் இல்லை

      Comment

      Working...
      X