Announcement

Collapse
No announcement yet.

தெய்வத்தின் குரல்-17

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தெய்வத்தின் குரல்-17

    ப்ருஹதாரண்யகத்தில் பட்டினி இருந்து விரதம் இருப்பதைச் சொல்லியிருக்கிறது. ஆத்மாவை அடைவதற்கு அத்யயனம், யஜ்ஞம், தானம், தபஸ், உபவாசம் போன்றவற்றை அனுஷ்டிக்கவேண்டும் என்பதாக வருகிறது. 'அநாசகேந' என்று உபவாசத்தைச் சொல்லியிருக்கிறது அங்கே. அசனம் என்றால் சாப்பாடு, 'ஆச' என்றால் சாப்பிடுவது.'அநாசகேந'என்றால் சாப்பிடாமல் இருப்பது, சாப்பிடாமல் உபவாசம் இருப்பதால் ஆத்மாவை அடைய முயல்கிறார்கள் என்ற்கு இந்த உபநிஷத் சொல்கிறது.
    இதற்கு ஆசார்யாள் ரொம்பவும் ஃபிலஸாபிகலாக பாஷ்யம் செய்து இருக்கிறார். சாப்பாடு இல்லாமல் இருப்பது என்பது போஜன நிவ்ருத்தி என்று அர்த்தமில்லை. வெறுமனே போஜனத்தை விட்டால் பிராணந்தான் போகுமே தவிர ஆத்ம ஞானம் வந்துவிடாது. அதனால் இங்கே அசனம் என்று கூறியிருப்பது ஆசையநுபோகங்களைத்தான். காம நுகர்ச்சியைவிடுமாறெ இந்த மந்திரம் சொல்கிறது என்று பாஷ்யம் செய்திருக்கிறார். ஆனால் இம்மாதிரி ஆசை அற்றுப் போக பட்டினி கிடந்து உபவாசம் இருப்பது உதவத்தான் செய்கிறது. அதுவும் ஆசார்யாளுக்குத் தெரியாததல்ல. நம்முடைய பூஜா பத்ததிகள், கோவில், குளம், உத்ஸவம், பண்டிகை வ்ரதம் எல்லாவற்றுக்குமே புனர்ஜீவன் தந்தவர், ஏகாதசி விரதத்தை அவசியமில்லாதது என்று சொல்லவே மாட்டார். அவர் இங்கே சொல்வது என்னவென்றால், ஏகாதசி மாதிரி பக்ஷத்துக்கு ஒருநாள் சுத்தப் பட்டினி போடுவதையல்ல. இனிமேல் சாப்பிடுவதேயில்லை என்று உண்ணாவிரதம் இருந்து ஸாதனை பண்ணுவதையே தவறு என்று சொல்கிறார். அந்தமாதிரி உடலைச் சித்ரவதை செய்வதால் அந்த வதையை நினைத்தும், அதனை சமாளிப்பதிலும் மனஸ் போகுமே தவிர ஸாதனா லக்ஷ்யத்தில் ஈடுபட்டு நிற்காது. இம்மாதிரி தன்னைத்தானே க்ரூரமாக வருத்திக் கொள்கிற வழிகளை ஆசார்யாள் ஒப்புக் கொள்ளாததால்தான் இப்படிச் சொல்கிறார். கிருஷ்ண பரமாத்வாவும் எக்ஸ்ட்ரீம்களை வேண்டாம் என்றுதான் சொல்கிறார்.'நாத்யச்நதஸ்து யோகோஸ்தி ந சைகாந்தம் அநச்நத:...'[கீதை 6.16-17] என்பதில் பெருந்தீனி தின்கிறவனுக்கும் யோகம் வராது, ஒரேயடியாக பட்டினி கிடக்கிறவனுக்கும் யோகம் வராது, யுக்தமான அளவு மிதமாக சாப்பிடறவனுக்கே யோகம் ஸித்தித்துத் துக்கத்தைப் போக்கும் என்கிறார். ரொம்பவும் தீவிரமாகவும், 'forced' ஆகவும் உபவாஸாதிகளைஅநுஷ்டித்தால் எல்லாம் சிதிறிப் பிரயோஜனமில்லாமல் போய்விடும். அதனால் படிப்படியாகப் போக வேண்டும். என்பதுதான் நம் ஆசார்யாள், கீதாசார்யனான பகவான் ஆகியோரது அபிப்ராயம். அவர்கள் சொன்ன context-ல் அடியோடு நிராகரிப்பது போல அழுத்திச் சொல்லும்படியாகியிருக்கிறது.
    மருந்தென வேண்டாவாக் யாக்கைக்கு அருந்தியது
    அற்றது போற்றி உணின்
    என்று திருவள்ளூவர் கூறியதில், வயிற்றில் ஏற்கனவே போட்டது ஜீரணமான பிறகே உண்பது என்று தெரிந்த பின்னர் உண்பது ஆரோக்யம் என்று தெரிகிறது. காந்தியும் ஆத்ம சுத்திக்காகவே தான் உண்ணாவிரதம் இருப்பதாகச் சொல்லியிருக்கிறார். உண்ணாவிரத சமயத்தில் தமக்குப் புத்தியில் தெளிவு ஏற்பட்டதாகவும், மனஸில் சுத்தி உண்டானதாகவும் சொல்லியிருக்கிறார். இப்படியாக உடல் நலத்தோடு, உயிர் நலத்தையும், இம்மையோடு, மறுமையையும் சேர்த்து ஆன்றோர்கள் உபவாஸ விதிகளைத் தந்திருக்கிறார்கள். முதலில் கஷ்டமாக இருந்தாலும், அப்யாஸத்தால் சமாளித்து விடலாம். பக்தி பலத்தோடு, சங்கல்ப பலத்தோடு ஆரம்பித்தால் அதிலே தெரிகிற நல்ல பலனைப் பார்த்தே நாளுக்கு நாள் உபவாஸ நியமத்தில் ஈடுபாடு வலுக்கும்.
    வ்ரதோபவாஸ நியமை: க்லேசித: ஸுகம் அச்நுதேஇக்ஷு க்லேசாத் யதா ஆநந்தம் ததா ப்ராப்நோதி தத் ஸுகம்

    அதாவது, கரும்பை கசக்கிக் கிலேசப்படுத்துவதாலேயே கருப்பஞ்சாற்றை எடுத்து பானம் பண்ணுகிற இன்பம் கிடைக்கிறது, இதேபோல உடம்பைக் கிலேசப்படுத்துவதால்தான் உள்ளத்துக்கு ஸுக ரசம் கிடைக்கிறது.

    நன்றி: தெய்வத்தின் குரல் பாகம் - 3; பக்கம் 661-665
Working...
X