Announcement

Collapse
No announcement yet.

தாயின் கண்ணீர் .

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தாயின் கண்ணீர் .

    காந்திஜி -- கஸ்தூரிபாய் தம்பதியின் மகன் ஹீராலால் பெற்றோருக்கு இருந்த நற்குணங்களுக்குப் பகையான குணக்கேடுகள் ஹீராலாலிடம் நிறைந்திருந்தன .
    ஒருமுறை , அவருக்கு கஸ்தூரிபா எழுதிய கடிதம் :
    ' என் அன்பு மகன் ஹீராலாலுக்கு ,
    சென்னை நகரில் நள்ளிரவில் நடுத்தெருவில் குடிவெறியோடு நீ பல தவறுகள் செய்தாய் என்றும் , மறுநாள் ஒரு பெஞ் மாஜிஸ்திரேட் விசாரணை நடத்தி உனக்கு ஒரு ரூபாய் அபராதம் விதித்தார் என்றும் கேள்விப்பட்டேன் . இவ்வளவு எளிய தண்டனையோடு உன்னை விடுதலை செய்துவிட்டார்களே ! இது ஒரு பாரபட்சம் என்றே எனக்குத் தோன்றுகிறது . உன் தந்தையின் பெருமையை மனதில் கொண்டு அந்த மாஜிஸ்த்ரேட் உனக்கு சிறு தண்டனை அளித்திருக்க வேண்டும் ... நீ செய்தது பெருந்தவறு .
    கண்ணியம் உள்ளவனாக இரு என்று பல முறை உன்னிடம் கண்ணீருடன் கூறியிருக்கிறேன் . நீயோ மேலும் மேலும் வீழ்ச்சி அடைகிறாய் . இறுதிக் கட்டத்தை நெருங்குகிற பெற்றோருக்கு நீ அளிக்கும் துயரத்தை எண்ணிப்பார்...
    --- முனைவர் அமுதா எழுதிய ' கஸ்தூரிபா காந்தியின் வாழ்வும் பணியும் ' நூலில் ஒரு பகுதி .
    Posted by க. சந்தானம்
Working...
X