Announcement

Collapse
No announcement yet.

ஒவ்வொரு திதியிலும் செய்ய வேண்டிய பூஜைகள

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஒவ்வொரு திதியிலும் செய்ய வேண்டிய பூஜைகள


  • #2
    Re: ஒவ்வொரு திதியிலும் செய்ய வேண்டிய பூஜைக&#2

    விரதங்கள் பற்றி பவிஷ்ய புராணம் கூறுகிறது.

    தேவர்களுக்கு வேள்விகள் மூலம் யாகம் செய்ய முடியவில்லை என்றால்
    இல்லறத்தார் என்னென்ன திதியில் என்னென்ன விரதம் உபவாஸம் இருந்தால் தேவர்களை த்ருப்திபடுத்தலாம் என்று சுனந்து முனிவர் கூறினார்.

    ப்ரதமை திதியில் பாலையும், த்விதியை திதியில் உப்பையும் தவிர்க்க வேன்டியது. த்ருதியை திதியில் எள்ளுஞ்சாதம் சாப்பிட வேண்டும்.

    சதுர்த்தியில் பால் ஆஹாரம், பஞ்சமியில் பழம், சஷ்டியில் காய், சப்தமியில் வில்வ ஆஹாரம் செய்ய வேண்டும்.

    அஷ்டமியன்று பொடி சாதம், நவமியன்று அக்னியில் சமைக்காத உணவு;
    தசமி அன்றும் ஏகாதசியன்றும் பால்; துவாதசியன்று கீரை; த்ரயோதசியன்று கோமியம், சதுர்தசியன்று பார்லி உணவும் சாப்பிட வேண்டும்.

    அமாவசையன்று ஹவிஸ்; பெளர்ணமியன்று தர்ப்பை புல்லில் நனைத்த ஜலமும் சாப்பிடவேண்டும். இவ்வாறு விரதமிருந்தால் அந்தந்த திதிக்குறிய தேவதைகள் த்ருப்தி யடைகிறார்கள்.,

    இந்த விருதம் நான்கு வர்ணத்தாரும் செய்யலாம். இந்த விரதம் ஆண், பெண் எல்லோரும் செய்யலாம்..

    ஒரு பக்ஷம் இம்மாதிரி ஆகாரம் செய்தால் பத்து அஸ்வமேத யாக பலன் கிடைக்க பெறுகிறார்கள்.. நான்கு, மாதம், எட்டு மாதம், 12 மாதம் இவ்வாறு விரதம் இருந்தால் பல மந்வந்தரங்கள் சூரிய லோகத்தில் சுவர்க்க அநுபோகங்களை அநுபவிப்பான்.

    இந்த விரதத்தை அதாவது ஒவ்வொரு திதியிலும் திதி உபவாசம் எப்படி இருக்க வேண்டுமென்பது;-

    இந்த விரதத்தை ஐப்பசி நவமி; மாசி ஸப்தமி; வைகாசி த்ருதியை; கார்த்திகை பெளர்ணமியில் ஆரம்பித்தால் உத்தமம்.

    நீண்ட ஆயுள் கிடைக்கும். சூர்ய லோகத்தில் சுகமாக இருக்கலாம்.
    முற்பிறவியில் செய்த புண்ணியத்தின் பயனாக இப்பிறவியில் விரதம், உபவாசம் ஆகியவைகளை செய்து , தானம் கொடுத்து , தர்ம வழியில்

    நடந்து , தாய், தந்தை, குரு ஆகியோருக்கு சேவை செய்து, விதிப்படி தீர்த்த யாத்திரை செய்து , அற வழியில் நீண்ட ஆயுள் கழித்த புண்ணிய பலனை மேலும் உயர்த்திக் கொண்டு மேலுலகில் நற்பதவி பெறுகிறான்.,

    இந்த உலகில் வாழும் போது எல்லா பொன் பொருள்களும், சிரேஷ்டமான உயர்ந்த மனைவி, நம்பிக்கையான வேலைகாரர்கள் ஆகியவை கிடைக்கும்.
    கடுமையான வ்யாதிகளிலிருந்து விடுபடுவர். பந்து ஜனங்களின் புகழும், , புத்திரன், பேரன்களை பார்த்து மகிழவும் முடியும்.

    இம்மாதிரி விரதம், உபவாசம், தானம் என்று செய்யாவிட்டால் ஒற்றை கண், குருடு, முடம், நொன்டி, ஊமை, படிப்புஅறிவின்மை தீராத நோய், தரித்திரம்
    ஆகியவைகளால் பாதிக்கபடுவர். .

    முதலில் பரமாத்மா சிருஷ்டிக்காக ஜலத்தை உற்பத்தி செய்தார். அதிலிருந்து ஒரு முட்டை(அண்டம்) உண்டாகி அதில் ப்ருஹ்மா தோன்றினார்.இதுதான் ப்ருஹ்மாண்டம். ப்ருஹ்மா அதை இரண்டாக பிளந்து ஒன்றில் பூமியையும் மற்றதில் ஆகாயத்தையும் செய்தார்.

    அதன் பின் திசைகள்., உப திசைகள். தெய்வம், அசுரன் என்று உற்பத்தி செய்தார்.
    எந்த திதியில் இதை உற்பத்தி செய்தாரோ அதுவே ப்ரதி பதா என்கிற ப்ரதமை திதியாயிற்று. . இதிலிருந்துதான் மற்ற திதிகள் உண்டாயின.

    ப்ரதமை விரதத்தை கார்த்திகை பெளர்ணமி; அல்லது மாசி ஸப்தமி அல்லது வைகாசி சுக்ல த்ருதியை முதல் தொடங்குவது விசேஷம். .இதற்கு முன்னால் வரும் சதுர்தசி அன்றே இந்த விரத சங்கல்பம் செய்து கொள்ள வேண்டும். .அன்று சாப்பிடலா.ம்.

    அடுத்து அமாவாசையன்று மூன்று வேளை குளிக்க வேண்டும். ஆகாரம் கூடாது. காயத்ரி ஜபம் செய்ய வேண்டும்..விரதத்தை துவங்கும் நாளில் விடியற்காலையில் எழுந்து சிரேஷ்டமான அந்தணனை சந்தனம், தாம்பூலம்

    கொடுத்து மரியாதை செய்யவும். தேவையான அளவு பால் கொடுத்து குடிக்கச் சொல்லவும். அதன் பின் அவரை ஆசனத்தில் அமர்த்தி , ப்ருஹ்மாவாக மனசில் கருத வேண்டும்.

    “”ப்ருஹ்ம தேவரே எனக்கு காட்சி தர வேண்டும் என வேண்டிக்கொள்ளவும்.. ப்ருஹ்மதேவரின் அருள் கிடைக்கும். அதன் பின் விரதமிருப்பவர் பசும் பால் குடிக்க வேண்டும். இவ்வாறு ஒரு வருஷம்

    காயத்ரியுடன் விரதத்தை செய்து வருஷ கடைசியில் ப்ருஹ்மாவிற்கு விசேஷ பூஜை செய்ய வேண்டும்.

    இவ்வாறு விரதமிருப்பதால் எல்லா பாபமும் விலகும். ஆன்மா தூய்மை ஆகும். நீன்ட ஆயுளுடன் தர்மவானாகவும், தனவானாகவும், ஆரோக்கியமுள்ளவராகவும் எல்லா

    போகங்களையும் அநுபவிப்பராகவும் இருப்பார். விண்ணுலகில் தேவதைகளுக்கு சமமாக கருதபடுவார்..அதன் பின் சத்ய யுகத்தில் பத்து பிறவிகள் வாழ்வாங்கு வாழ்வார்.

    இந்த விரத மிருப்பதால் அந்தணர் அல்லாதவரும் அந்தணராகி விடுவர்.
    விசுவாமித்ரர் இந்த விரதமிருந்த பிறகு தான் ப்ருஹ்ம ரிஷி எனப்பெயர் பெற்றார்.

    ஒவ்வொரு மாதமும் அமாவாசைக்கு மறுநாள் ப்ருஹ்மாவை 16 உபசார பூஜை செய்ய வேண்டும். ஓராண்டு முடிந்தபின் பெளர்ணமியன்று

    ப்ருஹ்மாவிற்கு விசேஷ பூஜை செய்ய வேண்டும். அதன் பின் சங்கம், மணி, பேரி, வாத்யம் முதலியவற்றால் விசேஷ பூஜை செய்ய வேண்டும்.

    வெள்ளை நிற பசுவின் பஞ்சகவ்யத்தாலும், தர்ப்பை ஜலத்தாலும் ப்ருஹ்மாவிற்கு ப்ருஹ்ம ஸ்நானம் செய்விக்க வேண்டும்..

    கார்த்திகை மாதம் பெளர்ணமியன்று ப்ருஹ்மாவின் ரத யாத்திரை துவங்க வேண்டும்.. அருகில் காயத்ரி அமர்ந்திருக்க ப்ருஹ்மா மாந்தோல் ஆஸனத்தில் அலங்காரமாக காக்ஷி அளிப்பார்.

    முன்னும் பின்னும் வேத கோஷம், வாத்யம் முழங்க பவனி வர வேண்டும் .ப்ருஹ்மாவின் விக்கிரஹம் அருஹில் ஒரு வேத விற்பன்னர் பூஜை செய்து மக்களுக்கு ப்ரசாதம் வழங்க அமர்ந்திருக்க வேண்டும்

    இரவு நிலைக்கு திரும்ப வேண்டும். ரதம் ஓட்டி வந்தவர்களுக்கும், வாத்ய கோஷ்டி ; வேத விற்பன்னர்களுக்கும் அன்னம், பானம், சன்மானம் கொடுக்க வேண்டும்.

    ஜன்மாந்திரங்களில் செய்த பாவங்கள் தொலையும்.

    23-11-2014. மார்க்கசிரம் சுக்ல பக்ஷ ப்ரதமையில் பகலில் சாப்பிடாமல் இரவில் விஷ்ணு பூஜை செய்து சாப்பிட வேண்டும்.. நக்ன விரதம் என்றால் பகலில் சாப்பிடாமல் இரவில் சாப்பிடுவது.

    த்விதீய திதி விரதம்.

    இந்த த்விதீய விரதத்தால் அஸ்வினி குமாரர்களுக்கு தேவர் குல அங்கீகாரமும் ஆவிர்பாகமும் கிடைத்தன. கார்த்திகை மாதம் சுக்ல பக்ஷ த்விதியை அன்று துவங்கி ஒரு வருடம் காலம் கழித்து பூஜை

    முடித்து பிராம்ணருக்கு பொன்னால் ஆன தாமரையை தானம் செய்தால் மேலுலகில் பல கற்ப காலங்கள் வாழ்ந்து விட்டு பூமியில் ராஜாவாக பிறக்கலாம்..

    இந்த வருடம் 10-9-2014 அன்று வரும் அசூன்ய ஸயன வ்ருதம் .. ஆவணி மாதம் க்ருஷ்ண பக்ஷம் த்விதியை அன்று துவங்க வேண்டும். இதனால் பெண்கள் விதவை ஆகாமல் தடுக்க முடியும். கணவன் மனைவி பிரியாமல் வாழ முடியும்.

    பள்ளி கொண்ட பெருமாளையும் அவரது மனைவியையும் பூஜை செய்து பின் வரும் துதியை சொல்ல வேண்டும்.

    ஶ்ரீ வத்ஸ தாரீ ஶ்ரீ காந்த ஶ்ரீ வத்ஸ ஶ்ரீ பதே அவ்யய
    கார்ஹஸ்த்யம் மா ப்ரணாசம் மே பாது தர்மார்த்த காமதம்.
    காவஸ்ச மா ப்ரணஸ்யந்து மா ப்ரணஸ்யந்து மே ஜனா:

    ஜாமயோ மா ப்ரணஸ்யந்து மத்தோ தாம்பத்ய பேததஹ
    லக்ஷ்ம்யா வியுஜ்யே அஹம் தேவ ந கதாசித் அதா பவான்
    ததா களத்ர ஸம்பந்தோ தேவ மா மே வியுஜ்யதாம்

    லக்ஷ்ம்யா ந சூன்யம் வரத யதாதே சயனம் சதா
    சய்யா மமாப்ய சூன்யஸ்து ததா தே மதுஸுதன.

    இவ்வாறு மஹா விஷ்னுவிடம் வேண்டிகொண்டு அவரை எப்போதும் ப்ரியாத மஹா லக்ஷ்ம்யையும் வேண்டி பூஜைசெய்தால் நிரந்த்ரமான பிரிவில்லாத படுக்கை சுகம் கிடைக்கும்.

    காய்ந்து போன மிகவும் பழுத்த, கனிந்த பழம் நிவேத்யம் செய்ய க்கூடாது.
    பேரீச்சை, மாதுளை, அத்தி பழங்கள், இளநீர் மஹாவிஷ்ணுவிற்கு பிடிக்கும்.

    எப்படி மஹா லக்ஷ்மி இல்லாத படுக்கை மஹா விஷ்ணுவிற்க்கு கிடையாதோ அதைபோல சோபை அற்ற படுக்கை வேண்டாம். லக்ஷ்மிகரமான மனைவி பிரியாமல் இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ள ஸகலமும் கிடைக்கும்.

    திருதியை வ்ரதம்.: அக்ஷய த்ருதியை மற்றும் ரம்பா த்ருதியை.

    பெண்கள் எவ்வகையில் நல்லது நடக்க வேண்டும் என்று எண்ணுகிறார்களோ அவ்வகையில் பெண்களுக்கு உதவ கூடியது திருதியை வ்ரதம்.

    எக்காரணம் கொண்டும் உப்பு சேர்க்க கூடாது.

    இந்த உபவாசத்தை ஆயுள் பூராவும் செய்தால் ரூபம், லாவண்யம், செளபாக்கியம் அனைத்தும் பெறுகிறார்கள்..

    கன்னி பெண்கள் இந்த விரதம் அநுஷ்டித்தால் நல்ல கணவனை பெறுவார்கள்.

    தங்கத்தில் கெளரியின் உருவத்தை செய்து ஒருமனப்பாட்டுடன் கெளரி பூஜை செய்ய வேண்டும். இரவு உப்பில்லாமல் சாப்பிட வேண்டும். அதன் பிறகு சம நிலையாக படுக்க வைக்க வேண்டும். அடுத்த நாள் அந்தணருக்கு சாப்பாடு போட்டு தக்ஷிணையும் தர வேண்டும்.

    இம்மாதிரி நியமப்படி பூஜை செய்யும் கன்னிகை உன்னதமான பதியை அடைவாள். நீண்ட காலம் போக போக்கியங்களை அநுபவித்து கடைசியில் தன் கணவருடன் உத்தம லோகத்தை அடைவாள்.

    விதவை இந்த விரதத்தை செய்தால் மேல் லோகத்தில் தன் பதியுடன் சேர்வாள். அவருடன் நீண்ட காலம் கணவன் மனைவியாக வாழ்வாள்.

    இந்த்ராணி இந்த பூஜை செய்து ஜயந்தனை பெற்றாள். அருந்ததி இந்த பூஜை செய்து வசிஷ்டருடன் வானத்தில் ஸப்த ரிஷி மண்டலத்தில் அமர்ந்தாள்.

    ரோஹிணி இந்த பூஜை செய்து சந்திரனின் அன்பு காதல் மனைவியாக வாழும் வாய்ப்பை பெற்றாள்.

    வைகாசி, புரட்டாசி, மாசி மாதங்களில் இப்பூஜை செய்வது உத்தமம்.மாசி மாதம் செய்யும் த்ருதியை பூஜைக்கு பின் உப்பு, வெல்லம், இரண்டையும் தானம் செய்தால் ஆண், பெண் இருவருக்கும் மிக மதிப்பை கொடுக்கும். நல்லது.

    புரட்டாசி மாத த்ருதியை வ்ருதத்தின் போது வெல்ல அப்பம் நிவேத்யம் செய்திடல் வேண்டும். மாசி த்ருதியையின் போது கொழுக்கட்டை மற்றும் சொர்ண தானம், செய்திடல் வேண்டும்.

    வைகாசி மாத த்ருதியையின் போது சந்தனம் கலந்த நீரையும், கொழுக்கட்டையையும் நைவேத்யம் செய்தால் எல்லா தேவர்களும் மகிழ்ச்சி அடைவார்கள்.

    வைகாசி மாத த்ருதியை அக்ஷய த்ருதியை என அழைக்கபடுகிறது. இன்று சாப்பாடு, ஜலம், வஸ்த்ரம். தங்கம் தானம் செய்தால் குறைவில்லா பல நன்மைகள் உண்டாகும்.. இன்று உபவாசம் இருப்பவர்களுக்கு லக்ஷ்மி கடாக்ஷம் ஏராளமாக கிடைக்கும்.

    சதுர்த்தி விரதம் தொடரும்.




    ..








    .

    Comment

    Working...
    X