Announcement

Collapse
No announcement yet.

இரு வரிச்செய்திகள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • இரு வரிச்செய்திகள்

    இரண்டு கவிஞர்கள் !
    திருச்சி லோகநாதன், ஜிக்கி பாடிய ' வாராய் நீ வாராய் ' என்ற அருமையான டூயட்டில் உள்ள புதுமை, மருதகாசி, கா. மு. ஷெரீஃப் ஆகிய இரண்டு கவிஞர்கள் இதை எழுதியிருப்பதுதான் . எந்த வரி யாருடையது என்று தெரியாது . இதே படத்தில் வரும் ' உலவும் தென்றல் காற்றினிலே ' பாடல் கூட இரு கவிஞர்களும் எழுதியதுதான் . இதே போன்று தமிழ் சினிமாவில் பிறகு நடக்கவில்லை ! --- விஜயகுமார் , குமுதம் . தீபாவளி மலர் . 13 . 10. 2010 . சதுப்புநிலக்காடு . பிச்சாவரம் சதுப்பு நிலக்காடு உலக அளவிலே 2 வது பெரிய சதுப்பு நிலக்காடு . மேற்கு வங்காளத்தில் உள்ள சுந்தரவனக்காடுகள்தான் உலக அளவில் மிகப்பெரிய சதுப்பு நிலக்காடு . ---தினமலர் . அக்டொபர் 8 , 2010 . காந்திஜியும் 3 குரங்கு பொம்மைகளும் . காந்திஜி தன்னுடன் வைத்திருந்த 3 குரங்கு பொம்மைகளை தனக்குப் பிடித்திருந்ததால் வைத்திருந்தாரே தவிர அவற்றை அவர் உருவாக்கவில்லை . சீன தத்துவஞானியான கன்பூஷியஸ், ' தீயவற்றைப் பார்க்காதே, கேட்காதே, பேசாதே ' என்று அறிவுரை கூறியுள்ளார் . அதைத்தான் அவரது சீடர்கள் இந்தப் பொம்மை வடிவில் மாற்றினர் என்று சிலர் குறிப்பிரிடுகின்றனர் . ஜப்பானில் இந்தக் குரங்கு பொம்மைகளை ' ஸனோன் ', ' ஸன்ஜாரு ', ' ஸன்பிகிநோ ஜாரு ' என்று மூன்று விதமாகக் குறிப்பிடுகின்றனர் . ஜப்பானிய மொழியில் ' ஜாரு ' என்றால் குரங்கு . கண்களை மூடியிருக்கும் குரங்கின் பெயர், ' மிஜாரு '; காதுகளை மூடியிருக்கும் குரங்கின் பெயர், ' கிதாஜாரு '; வாயை மூடியிருக்கும் குரங்கின் பெயர், ' இவஜாரு '. ----தினமலர் . அக்டோபர் 8 , 2010 .
Working...
X