Announcement

Collapse
No announcement yet.

வாலி கவிதாஞ்சலி!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • வாலி கவிதாஞ்சலி!

    வாலிபக் கவிஞர் வாலி வான்புகழ் எய்திவிட்டார். அந்தக் காவியக் கவிஞருக்கு, கவிதாஞ்சலி இங்கே...
    யாரைச் சொல்வேன்?
    உன்னை நான்...
    ஜிப்பா அணிந்த
    'ஷெல்லி ' என்பேன்
    ' ஷேக்ஸ்பியரின் '
    தம்பி என்பேன்.


    ஸ்ரீரங்கத்துக்
    ' கம்பன் ' என்பேன்
    திருநீறு அணியும்
    'ஜிப்ரான் ' என்பேன்.


    ' சீவல் ' மெல்லும்
    சங்கம் என்பேன்
    ' சிலேடை'த் தமிழ்ச்
    சிங்கம் என்பேன்.


    வெள்ளை வேட்டி
    ' நியூட்டன் ' என்பேன்
    வெண்பா பாடும்
    ' விட்மன் ' என்பேன்.


    கவிதை எழுதும்
    ' பிட்மன் ' என்பேன்
    ' கற்பகம் அவென்யூ '
    ' பிகாசோ ' என்பேன்.


    இனிமேல் இப்படி
    யாரைச் சொல்வேன்?
    -- இளையகம்பன்.
    - ஆனந்த விகடன். 31.7.2013.
Working...
X