கருணை, பொறுமை, அன்பு பற்றிய 31 பொன்மொழிகள்.... ரமணர்
1
ஆத்ம உபமந்யேன பூதேஷு தயாம் குர்வந்தி சாதவ: (ஹிதோபதேசம்)
நல்லோர்,எல்லா உயிர்களையும் தன் இன்னுயிர் போலக் கருதி இரக்கம் காட்டுவர்.
2
கோ தர்ம க்ருபயா விநா (சுபாஷித ரத்ன பாண்டாகாரம்)
தயை (கருணை) இல்லாத தர்மம் உண்டா?
3
தயா மாம்சாசின: குத:? (சுபாஷித ரத்ன பாண்டாகாரம்)
புலால் உண்ணுவோரிடத்தில் கருணை உண்டா?
4
தயார்த்ரா: சர்வ சத்வேஷு பவந்தி விமலாசயா: (ப்ருஹத் கதா மஞ்சரி)
தூய உள்ளம் கொண்டவர்கள் எல்லா பிராணிகளிடத்திலும் ஈர நெஞ்சம் உடையவர்களாவர்.
5
தர்மோ தயா பர: (சமயோசித பத்ய மாலிகா)
கருணைக்கு மிஞ்சிய தர்மம் இல்லை.

6
சர்வேஷு பூதேஷு தயா ஹி தர்ம: (புத்தசரிதம்)
எல்லா உயிர்களிடத்திலும் அன்புகாட்டுவதே தர்மம்
7
தாக்ஷிண்யாம் விரூபாமபி ஸ்த்ரியம் பூஷயதி (தூர்த்தநர்த்த)
அழகற்ற பெண்களுக்கும் அழகு சேர்ப்பது இரக்க குணம்.
8
ப்ராய: சர்வோ பவதி கருணா வ்ருத்திரார்த்ராந்தராத்மா (மேகதூதம் 2-31)
கனவான்கள் இயற்கையிலேயே இரக்க குணம் உடையோர்.
9
அருட் செல்வம் செல்வத்துள் செல்வம் – குறள் 241
செல்வத்தில் சிறந்த செல்வம் அருளுடைமை (இரக்கம், கருணை)
10
அருளில்லார்க்கு அவ்வுலகம் இல்லைகுறள் 247
உயிர்களிடத்தில் கருணை காட்டாதோர்க்கு சொர்க்கத்தில் இடமில்லை.
11
வலியார் முன் தன்னை நினைக்க – குறள் 250
நம்மைவிட வலிமை வாய்ந்தவ்ரிடம் நாம் எப்படி நடுங்குவோம் என்பதை நினைத்துப் பார்க்க.
12
அல்லல் அருள் ஆள்வாருக்கு இல்லை — குறள் 245
கருணை உடையோருக்கு துன்பம் என்பதே இல்லை.
13
பகைவனுக்கு அருள்வாய் – நன்னெஞ்சே
பகைவனுக்கருள்வாய் – பாரதி
14
அலங்காரோ ஹி நாரீணாம் க்ஷமா து புருஷஸ்ய வா (ராமாயணம்)
பெண்களுக்கானாலும் ஆண்களுக்கானாலும் பொறுமையே அணிகலன்.
(ஒப்பிடுக: பொறையுடைமை போற்றி ஒழுகப்படும் – குறள் 154)
15
க்ஷமயேதம் த்ருதம் ஜகத் (மஹாபாரதம்)
பொறுமைதான் உலகத்தையே தாங்கி நிற்கிறது.
16
க்ஷமா குணோ ஹ்யசக்தானாம் சக்தானாம் பூஷணம் க்ஷமா (மஹாபாரதம்)
வலிவற்றவர்களிடத்தில் பொறுமை இருப்பது இயற்கை; பலமுள்ளவர்களிடத்தில் பொறுமை இருப்பது அணிகலன் ஆகும்.
(ஒப்பிடுக: வைப்பர் பொறுத்தாரைப் பொன்போற் பொதிந்து-குறள் 155)
17
க்ஷமா ரூபம் தபஸ்வினாம் (சாணக்ய நீதி)
தவம் செய்தவர்களின் இலக்கணம் பொறுமை ஆகும்
(ஒப்பிடுக: வன்மையுள் வன்மை மடவார்ப் பொறை-குறள் 153
18
க்ஷமா வசீக்ருதிர் லோகே க்ஷமயா கின்ன சாத்யதே (மஹாபாரதம்)
பொறுமை என்பது எல்லோரையும் கவர்ந்திழுக்கும். உலகில் பொறுமையினால் சாதிக்க முதியாதது எது?
(ஒப்பிடுக: பொறுத்தார்க்குப் பொன்றும் துணையும் புகழ் –குறள் 156)
19
க்ஷமா ஹி பரமா சக்தி:, க்ஷமா ஹி பரமம் தப: (புத்த சரிதம்)
பொறுமையே மிகப்பெரிய சக்தி, பொறுமையே மிகப்பெரிய தவம்.
(ஒப்பிடுக: அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை –குறள் 151)
20
க்ஷமாம் ரக்ஷந்தி யே யத்னாத், க்ஷமாம் ரக்ஷந்தி யே சிரம் (பழமொழி)
பொறுமையைக் கடைப் பிடிபோர் நீண்ட காலம் வாழ்வர்.
(ஒப்பிடுக: பொறுத்தார் பூமி ஆள்வார்.)
21
ஞானஸ்யாபரணம் க்ஷமா (சாணக்ய நீதி)
அறிவுடைமையின் இலக்கணம் (அணிகலன்) பொறையுடைமை.
22
க்ஷமயா கிம் சித்யதி (சாணக்ய சதகம் 13-22)
பொறுமையினால் அடைய முடியாதது என்ன?
23
க்ஷமா ஹி மூலம் சர்வ தபஸாம் (ஹர்ஷ சரிதம்)
எல்லா தவத்திற்கும் அஸ்திவாரம் பொறுமைதான்
24
க்ஷமா ஹி சக்தஸ்ய பரம் விபூஷணம் (ஜாதக மாலா)
வலியோரின் பெரிய அணிகலன் – பொறுமை
25
ஒறுக்கும் மதுகை உரனுடையாளன்
பொறுக்கும் பொறையே பொறை (நாலடியார்)
எத்தகையோரையும் அடக்க வல்லவன் பொறுமையே சிறந்த பொறுமை
26
சிறியோர் செய்த சிறு பிழை எல்லாம்
பெரியோர் ஆயின் பொறுப்பது கடனே (வெற்றி வேர்க்கை)
27
நிர்வைர: சர்வ பூதேஷு ய: மாமேதி (பகவத் கீதை 11-55)
எவ்வுயிரிடத்திலும் பகைமை இல்லாதவன் என்னை அடைகிறான்
28
ஸமோஹம் சர்வ பூதேஷு ((பகவத் கீதை 9-29)
எல்லா உயிர்களிடத்திலும் சமமாயுள்ளேன் (எவரிடத்திலும் வெறுப்பு இல்லை)
29
லபந்தே பிரம்ம நிர்வாணம் …………சர்வபூதஹிதே ரதாப.கீதை 5-25)
எவர்கள் எவ்வுயிரிடத்திலும் நன்மையே நாடுபவரோ அவரே பிரம்மனிடத்தில் முக்தியை அடைவர்.
30
உயிர்களிடத்தில் அன்பு வேணும்.—தெய்வம் உண்மை என்று தான் அறிதல் வேண்டும் – பாரதியார்
31
அன்பு சிவம், உலகத் துயர் யாவையும் அன்பினிற் போகும் — பாரதியார்
ஒன்றென்று கொட்டு முரசே!- அன்பில்
ஓங்கென்று கொட்டு முரசே – பாரதியார்
–சுபம்-.

Compiled by London swaminathan