Courtesy:Smt.Rajalakshmi
சந்தோஷமாக இரு !
*"*"*"*"*"*"*"*"*"*"*"*"*"*"
ராதேக்ருஷ்ணா....
தகப்பனே கொலை செய்ய
முயற்சித்த போதும்
ப்ரஹ்லாதன் சந்தோஷமாக இருந்தான் . . .
சுடுகாட்டு வெட்டியானுக்கு
அடிமையாக்கிய போதும்
ராஜா அரிச்சந்திரன்
சந்தோஷமாக இருந்தான் . . .
பெற்ற பிள்ளையே
கேவலப்படுத்திய போதிலும் கைகேயி
சந்தோஷமாக இருந்தாள் . . .
உறவினர்களே சபை நடுவே அசிங்கப்படுத்திய போதும் விதுரர் சந்தோஷமாக இருந்தார் . . .
அம்புப்படுக்கையில்
வீழ்ந்த போதிலும்
பீஷ்மர் சந்தோஷமாக இருந்தார் . . .
இளம் விதவையான
சமயத்திலும் குந்திதேவி
சந்தோஷமாக இருந்தாள் . . .
தரித்ரனாக வாழ்ந்த
சமயத்திலும் குசேலர்
சந்தோஷமாக இருந்தார் . . .
ஊனமாகப் பிறந்து
ஊர்ந்த போதிலும்
கூர்மதாஸர்
சந்தோஷமாக இருந்தார் . . .
பிறவிக் குருடனாக
இருந்தபோதிலும்
சூர்தாஸர் சந்தோஷமாக இருந்தார் . . .
மனைவி
அவமானப்படுத்திய போதிலும் சந்த் துகாராம் சந்தோஷமாக இருந்தார் . . .
கணவன்
கஷ்டப்படுத்திய போதும்
குணவதிபாய்
சந்தோஷமாக இருந்தாள் . . .
இருகைகளையும்
வெட்டிய நிலையிலும்
சாருகாதாஸர்
சந்தோஷமாக இருந்தார் . . .
கைகால்களை வெட்டிப்
பாழுங்கிணற்றில் தள்ளியபோதும்
ஜயதேவர் சந்தோஷமாக இருந்தார் . . .
மஹாபாபியினிடத்தில்
வேலை செய்த போதும்
சஞ்சயன் சந்தோஷமாக இருந்தார் . . .
பெற்ற பிள்ளையை
பறிகொடுத்த போதும்
பூந்தானம் சந்தோஷமாக இருந்தார் . . .
கூடப்பிறந்த சகோதரனே
படாதபாடு படுத்தியபோதும்
தியாகராஜர் சந்தோஷமாக இருந்தார் . . .
நரசிம்மர் சன்னிதியில்
விஷ தீர்த்தம் தந்த போதும்
மஹாராஜா ஸ்வாதித் திருநாள் சந்தோஷமாக இருந்தார் . . .

சோழ ராஜனின் சபையில்
கண்ணை இழந்த பின்பும்
கூரத்தாழ்வான் சந்தோஷமாக இருந்தார் . . .

எப்படி முடிந்தது இவர்களால் ?
ரகசியம்.....
அவர்களோடு பகவான் எப்பொழுதும்
இருக்கின்றான் என்று உணர்ந்ததால் ! ! !
பகவான் எப்பொழுதும் கூட இருக்கிறான்
என்று உணர வழி?
விடாத நாம ஜபம்...
அதனால் இனிமேல்
அல்ப விஷயங்களுக்காக
அழாதே ! ! !
எது எப்படி இருந்தாலும்,
யார் எப்படி நடத்தினாலும்,
எவர் மாறினாலும்,
எதை இழந்தாலும்,
யாரை இழந்தாலும்,
உன் க்ருஷ்ணன் உன்னுடன்
இருக்கின்றான்....
ஆதலால் ...
விடாது நாம ஜபம் செய் . . .
திடமாக பகவானை நம்பு . . .
நீயும் சந்தோஷமாக இரு . . .
இப்போதே சந்தோஷம் தெரிகிறதே...