கம்பராமாயணம் கும்பகர்ணன் வதைப்படலத்தில், இராவணன் அசோகவனத்திலிருக்கையில் கும்பகர்ணன் மடிந்தான் என்ற செய்தியைச் சுகசாரணர் ஓடி வந்து சொல்லக் கேட்டுத் தன் குரலோசை வானத்தளவும் எட்டும்படி அவனது பெயரைச் சொல்லிக் கூவியழைத்து, முன்பு கைலாசக்கிரியை எடுத்த காலத்தில் அதை உமாபதியானவர் கண்டு திருவடியினால் அழுத்த அம்மலையின் கீழ் அகப்பட்டு நசுங்கி தான் அழுத காரணத்தால் தனக்குண்டான ராவணனென்னும் பெயர் பொருளை வெளியிட்டான்.(அழுதான் என்றபடி, ராவணம்--அழுமோசை ).
--வினோத ரச மஞ்சரி. அஷ்டாவதானம் வீராசாமி செட்டியார்.
Posted by க. சந்தானம்