Announcement

Collapse
No announcement yet.

பாம்புகள்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பாம்புகள்

    பாம்புக்கு நாக்குதான் மூக்கு.
    * பாம்புகள் மாமிச உண்ணிகள். மனிதனின் மூதாதையர்களாகக் குரங்குகள் கருதப்படுவதைப் போல பாம்புகளுக்கு
    மூதாதையர் பல்லிகள் என்று கருதப்படுகின்றன.
    * பாம்புகளுக்குப் பற்கள் கிடையாது. அதனால் இரையை அப்படியே முழுமையாக விழுங்க வேண்டும். அதற்கேற்ற மாதிரி
    பாம்புகளின் கபாலத்தில் பலவகை இருக்கும். ஏனெனில் தனது தலையை விடப் பெரிய உயிர்களைத் தின்பதற்கும்,
    வேகமாக விழுங்குவதற்கும் தசைகள் தேவை.
    * பாம்புகள் ஒல்லியான உடலமைப்பைப் பெற்றிருப்பதால் அவற்றின் சிறுநீரகங்கள் பக்கவாட்டில் இல்லாமல் ஒன்றன் பின்
    ஒன்றாக அமைந்திருக்கும்.
    * பாம்புகளுக்குக் கால்கள் கிடையாது. ஆனாலும் உடலால் நிலத்தில் ஊர்ந்து வேகமாக நகரும். சில பாம்புகள் நீரிலும்
    வேகமாக நீந்தும்.
    * பாம்புகளுக்குக் கண் இமைகள் கிடையாது.
    * அண்டார்டிகா கண்டத்தைத் தவிர உலகின் சகல பகுதிகளிலும் பாம்புகள் உள்ளன.
    * பாம்பின் தோல் மென்மையாகவும் உலர்வாகவும் இருக்கும். அது சட்டை என்று அழைக்கப்படும்.
    * பாம்பு தனது தோல் சட்டையை ஆண்டுக்குப் பல முறை உரிக்கும்.
    * பாம்பு தனது நாக்கின் மூலம் வாசனையை அறிகிறது.
    -- ஷங்கர். ( உயிரினம் ). மாயாபஜார்.
    -- 'தி இந்து' நாளிதழ். புதன், ஜூன் 11, 2014.
Working...
X