Announcement

Collapse
No announcement yet.

lavana dhanam.

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • lavana dhanam.

    18-12-2021--தத்தாத்ரேயர் ஜயந்தி:-- மார்கழி மாதம் பெளர்ணமி , மிருக சீர்ஷ நக்ஷத்திரத்தில் அநசூயா தேவிக்கும் அத்ரி மகரிஷிக்கும் குழந்தையாக பிறந்த நாள். இன்று இவரை வணங்குவதால்


    ஞான மார்க்கத்தில் ஈடுபாடும் வைராக்கியம், குழந்தை பேறு, மற்றும் தீய சக்தி உபத்திரம் அகலும்.


    19-12-2021
    ஸர்ப்ப பலி ஆவணி அவிட்டம் அன்று ஆரம்பித்தது இன்றுடன் முடிவு அடைகிறது. தினசரி உத்தேசமாக நான்கு மாத காலம் தினம் அரிசி மாவு நல்ல பாம்புகளுக்கு பலி போட்டது இன்று


    முடிவடைகிறது. இன்று மாலை ஆவணி அவிட்டத்தன்று செய்தது போல பலாச பூக்கலாளும், சரக்கொன்றை சமித்துகளாலும் ஹோமம் செய்து ஸர்ப்பபலி கர்மாவை பூர்த்தி செய்ய வேண்டும்.


    19-12-2021 அன்று உப்பு தானம் செய்வது சால சிறந்தது .நித்ய கர்மாக்கள் முடித்து விட்டு நம் வீட்டு ஸ்வாமி சன்னதியில் ஒரு அரை கிலோ அல்லது ஒரு கிலோ நாம் சாப்பிடும் கல் உப்பு வாங்கி ரஸாநாம் அக்ரஜம் சிரேஷ்டம் லவணம் பல வர்த்தநம் தஸ்மாதஸ்ய ப்ரதாநேன அதஹ் சாந்திம் ப்ரயஸ்சமே மார்க சீர்ஷ பூர்ணிமா புண்ணிய காலே மம ஸஹ குடும்பஸ்ய ஸதா ஸுந்தர ரூபத்வ


    ஸித்தியர்த்தம் இதம் லவணம் ஸ பாத்ரஸ்ய தானம் கரிஷ்யே என்று சொல்லி இத்துடன் தக்ஷிணை, துளசியும் சேர்த்து , நமஸ்காரம் செய்து அதை யாராவது ஒருவரிடம் தானம் கொடுக்க வேண்டும். இம்மாதிரி கொடுப்பதால் பிறர் பார்வைக்கு அழகாகவே தோன்றுவார்கள் அவரும் அவரது குடும்பதினர்களும். எவ்வளவு பேருக்கு வேண்டுமானாலும் இம்மாதிரி வாங்கி கொடுக்கலாம்.நிர்ணய ஸிந்து இம்மாதிரி பகர்கிறது.


    20-12-2021`--- பரசுராம ஜயந்தி. ஏழுசிரஞ்சீவிகளில் ஒருவர்.தகப்பனார்சொல்படி தாயாரை கொன்றார்.தகப்பனாரிடம்வரம் கேட்டு தாயாரை மறுபடியும்உயிர்பித்தார்.கடலில்மூழ்கிய கேரள தேசத்தை மீட்டார்.மஹா விஷ்ணுவின்ஆறாவது அவதாரம்
Working...
X