* உலகில் எத்தனையோ பேர் கஷ்டப்படுகிற போது நாம் மட்டும் டாம்பீகங்களைச் செய்வது நியாயமா என்று ஒவ்வொருவரும் கேட்டுக் கொள்ள வேண்டும். செலவை தர்ம நியாயமாகக் கட்டுப்படுத்திக் கொண்டால், எத்தனையோ தானதர்மம் செய்யலாம்.
* சிரமமும், செலவும் குறைச்சல் என்றாலும், வாயும் தொண்டையும் வற்றி விடுகிறவர்களுக்கு ஜில்லென்று மறுவாழ்வு தருவது போன்று தண்ணீர்ப்பந்தல் வைத்து மோர் தீர்த்தம் தருவது மகாபெரிய புண்ணியமாகும்.
* குறைவான வருமானம் கிடைத்தாலும் ஒரு காலணாவாவது தனக்கென்று இல்லாமல் தர்மம் செய்ய வேண்டும்.
* பணம் சம்பாதித்துக் கொள்வதைவிட பணத்தைக் பிறருக்கு வழங்கும் மனப்பான்மை தான் பெரிய லட்சுமியாகும். அவளை வணங்கினால் இந்த மனோபாவத்தை அளிப்பாள்.
* தோட்டம் உள்ள அனைவரும் சிறிய இடத்தில் பசுவுக்கான அகத்திக் கீரை போட வேண்டும். ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும் ஒரு பசுவுக்கு ஒரு பிடி புல் கொடுக்க வேண்டும்.
-காஞ்சிப்பெரியவர்