Announcement

Collapse
No announcement yet.

தன்வந்திரி மந்திரம் - Dhanvantari Mantra

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • தன்வந்திரி மந்திரம் - Dhanvantari Mantra

    ஸ்ரீ தன்வந்திரி பெருமாள் திருவடிகளே சரணம்

    Click image for larger version

Name:	tem-3.jpg
Views:	148
Size:	121.9 KB
ID:	49761பாற்கடலில் தோன்றிய ஸ்ரீ தன்வந்திரி பெருமாளே ஆயுர்வேத மருத்துவ முறையினை மக்களுக்கு அளித்ததாக விஷ்ணு புராணம் கூறுகின்றது..

    இறைவன் மருந்தாகவும், மருத்துவராகவும் இருந்து மக்களைக் காப்பாற்றுகிறார் என்ற அரிய தத்துவத்தை இந்த வைத்திய அவதாரம் சுட்டிக்காட்டுகிறது.

    காக்கும் கடவுளான
    ஸ்ரீ தன்வந்திரி பெருமாள்,
    மஹா விஷ்ணுவின் அம்சமாக பின்னிரு கரங்களில் சங்கு, சக்கரத்துடனும்,
    முன்னிரு கரங்களில் ஒரு கரத்தில் அமிர்த கலசத்தையும், ஒரு கையில் சீந்தலைக் கொடியுடனும் காட்சி அளிக்கிறார்.

    அதி சக்தி வாய்ந்த தன்வந்திரி மந்திரம்

    ஓம் நமோ பகவதே
    வாஸுதேவாய! தன்வந்தரயே!
    அம்ருத கலச ஹஸ்தாய
    ஸர்வ ஆமய விநாசநாய
    த்ரைலோக்ய நாதாய ,
    ஓம் ஸ்ரீமஹா விஷ்ணவே நம

    அர்த்தம்:

    அமிர்த கலசத்தை கையில் ஏந்தியிருக்கும் வாசுதேவனே, தன்வந்திரி பகவானே
    எல்லா நோய்க்கும் மருந்தாக, நோய்களை தீர்ப்பவனாகா இருப்பவரே, மூன்று உலகிற்கும் அதிபதியான ஸ்ரீ மஹா விஷ்ணு பகவானே உன்னை வணங்குகிறோம்.

    தன்வந்திரி ஸ்லோகம்

    சதுர்புஜம் பீத வஸ்திரம்
    ஸர்வாலங்கார சோபிதம்
    த்யோயேத் தன்வந்த்ரிம்
    தேவம் ஸுராஸுர நமஸ்க்ருதம்.

    எப்படி செய்வது !!

    அதிகாலை ப்ரம்ம முகூர்த்தத்தில் 4:00 மணி முதல் 6:00 மணிக்குள் குளித்து விட்டு நெற்றியில் குங்குமம் இட்டு தன்வந்திரி படத்திற்கு முன்னால் ஒரு பித்தளை சொம்பில் கழுத்து வரை நீர் நிரப்பி அதில் ஒரு கொப்பு துளசி இலை போட்டு கையால் மூடிக்கொண்டு 1008 முறை பாராயணம் செய்து தூபம் தீபம் ஏற்றி சர்க்கரை பொங்கல் நைவேத்தியம் செய்து பின் தன்வந்திரி படத்திற்கு முன்னால் ஒரு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்து அந்த நீரை வியாதியஸ்தருக்கு கொடுங்கள் பின் நடக்கும் அதிசயத்தை பாருங்கள்.

    தீராத மற்றும் நாள்பட்ட வியாதியும் கொஞ்சம் கொஞ்சமாக குறைவதை கண்கூடாக பார்க்க முடியும்.

    இதை செய்யும் போது முழு நம்பிக்கை வையுங்கள் பின் வேறு எந்த எண்ணங்களும் வர கூடாது.
    இதற்கு ஒரு வாரம் முன்பே சைவ உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    தொடர்ந்து ஒரு மண்டலம் செய்தால் வியாதி காணாமல் போகும்.

    மிகவும் ஆபத்தான நிலையில் குரு ஹோரையில் இப்படி செய்யலாம்.

    இந்த முறை பல பேருக்கு பலித்திருக்கிறது முயற்சி செய்துதான் பாருங்களேன்.


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS
Working...
X