Announcement

Collapse
No announcement yet.

குறள் வெண்பா (ஔவையார்)

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • குறள் வெண்பா (ஔவையார்)

    நாலு கோடி பாடல்

    சோழ மன்னன் ஒருவன் தனது அவைக்களப் புலவர்களை அழைத்து, ‘நாளை பொழுது விடிவதற்குள் நீங்கள் நாலு கோடி பாடல்கள் பாட வேண்டும்’ என்று ஆணையிட்டான்.
    ஓர் இரவுக்குள் நாலு கோடி பாடல்களை எப்படிப் பாடுவது என்று அவைக்களப் புலவர்கள் திகைத்தனர். அப்போது அங்கே ஒளவையார் வந்தார்; புலவர்களின் கவலைக்கான காரணத்தைக் கேட்டு அறிந்தார். உடனே அவர் புலவர்களைப் பார்த்து, ‘இதற்காகவா திகைத்தீர்கள். கவலை வேண்டாம். இப்போதே நாலு கோடி பாடலைப் பாடுகிறேன்; மன்னனிடம் சென்று அதைப் பாடுங்கள்’ என்று கூறிவிட்டு ஒரே ஒரு பாடலை மட்டும் பாடினார். ஒரு பாடல் எப்படி நாலு கோடி பாடலுக்கு இணையானது ஆகும்? வியப்பாக இருக்கிறதா? இதோ அந்த நாலு கோடி பாடலைப் பாருங்கள்.

    மதியாதார் முற்றம் மதித்தொரு கால்சென்று
    மிதியாமை கோடி பெறும்;
    உண்ணீர் உண்ணீர் என்று உபசரியார் தம்மனையில்
    உண்ணாமை கோடி பெறும்;
    கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு
    கூடுதல் கோடி பெறும்;
    கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைநாக்
    கோடாமை கோடி பெறும்.
    (ஒளவையார் தனிப் பாடல்:42)




    இப்பாடலில் கோடி என்று ஒரு கோடி பொன் குறிப்பிடப் பட்டுள்ளது. இப்பாடலில் ஒவ்வொன்றும் ஒரு கோடி பொன்னுக்கு இணையானவை என்று நான்கு செயல்களை ஒளவையார் குறிப்பிட்டுள்ளார்.

    1. நல்ல பண்புகளை மதித்து நடக்காதவரை மதித்து அவரது வீட்டின் முன்பகுதியை மிதிக்காமல் இருப்பது, செல்லாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும். (நம்மை மதிக்காதவரின் வீட்டுக்குச் செல்லாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது என்றும் பொருள் கூறுவார்கள்)

    2. உண்ணுமாறு விரும்பிக் கேட்டுக் கொள்ளாதவரின் வீட்டில் உண்ணாமல் இருப்பது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.

    3. கோடி பொன்னைக் கொடுத்தாவது நல்ல குடும்பத்தில் பிறந்தவர்களுடன் சேர்ந்து வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும்.

    4. பலகோடி பொன் கிடைப்பதாக இருந்தாலும் சொன்ன சொல்லிலிருந்து தவறாமல் வாழ்வது கோடி பொன்னுக்கு இணையானது ஆகும். இப்பாடலில் முதல் இரண்டு கருத்துகளையும் எதிர்மறைப் பொருளில் பாடிய ஒளவையார் இறுதி இரண்டு கருத்துகளையும் உடன்பாட்டுப் பொருளில் பாடியுள்ளார்.
    நல்ல பண்புகளை மதிக்காதவர் வீட்டுக்குச் செல்லாதே!
    விரும்பி உண்ணச் சொல்லாதவரின் வீட்டில் உண்ணாதே!
    என்பவை எதிர்மறை ஆகும்.
    நல்ல குடும்பத்தினருடன் சேர்ந்து வாழ்!
    சொன்ன சொல் தவறாமல் வாழ்!

    என்பவை உடன்பாடு ஆகும்.

  • #2
    Re: குறள் வெண்பா (ஔவையார்)

    மேற்படி குறள் வெண்பாவை tamilbrahminsnet லும் போஸ்ட் செய்தேன். அங்கே எவ்வளவு பேர்கள் இதில்
    கலந்து கொண்டு மிகவும் அருமையாக விவாதம் செய்துகொண்டு இருக்கிரார்கள் தெரியுமா? ஆனால் நமது
    சபையில் எவரும் பார்பதோடு சரி.விவாதமோ அபிப்ராயமோ எதுவும் கிடையாது. ஏன் எதர்க்கும் விவாதமே கிடையாது. இதை நாம் ஆராயிந்து பார்க்கவேண்டாமா?

    Comment


    • #3
      Re: குறள் வெண்பா (ஔவையார்)

      ஶ்ரீ:
      தற்போது உள்ளவர்களில் 75 சதவீதம் பேருக்கு தமிழ் படிக்கத் தெரிவதே கடினம்
      தமிழ் இடுகைக்கு தமிழில் பதில் எழுதவேண்டும், அதற்கு தமிழில் டைப் அடிக்கத் தெரியவேண்டும்,
      அதன் பிறகு அதற்கு நேரம் வேண்டும்.
      அதற்கும்மேல் அதுபற்றிய விவாதம் என்ன செய்வது என்று தோன்ற வேண்டும்.

      மேலும் தாங்கள் குறிப்பிட்டுள்ள இணைய தளத்தில் யார் வேண்டுமானாலும் உறுப்பினர் ஆகலாம்
      இங்கு அவ்வாறின்றி தேர்ந்தெடுக்கப்பட்ட சிலர் மட்டுமே உறுப்பினராக அனுமதிக்கப்படுகிறார்கள்.
      உறுப்பினராக அனுமதித்தபின் அவர்கள் இடுகை தணிக்கை செய்யப்படுமேயொழிய மறுக்கப்படுவதில்லை.
      மேலும் அந்த இணைய தளத்தின் வயது 10க்கு மேல் ஆகிறது, நமது இணைய தளத்துக்கு வயது 2 கூட ஆகவில்லை.
      இப்படி பல விஷயங்கள்.
      இதைப்பற்றிக் கவலைப்படாமல் தங்கள் இடுகைப்பணியைத் தொடருங்கள்.
      நன்றி
      என்.வி.எஸ்


      Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
      please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
      Encourage your friends to become member of this forum.
      Best Wishes and Best Regards,
      Dr.NVS

      Comment


      • #4
        Re: குறள் வெண்பா (ஔவையார்)

        எனது ஆதங்கம் நமது இணையதளத்தில் ஏன் உறுப்பினர்கள் பங்குகொள்வதில்லை என்பதே. தெரி ந்தவரையில் பங்கு கொள்ளலாமே. நீங்கள் குறிப்பிட்ட பல விஷயங்கள் உண்மையே. நாம் நமது பணியை
        தொடருவோம்.

        Comment


        • #5
          Re: குறள் வெண்பா (ஔவையார்)

          அபாரம் சார் ஒரு 50 வருடங்களுக்குப் பிறகு இப்போது தான் எளிமையான அருமையான பொருள் செறிந்த பாடலை படிக்கும் வாய்ப்பு கிடைத்தது கோடனுகோடி நன்றிகள்

          Comment


          • #6
            Re: குறள் வெண்பா (ஔவையார்)

            படித்ததோடு சரி விட்டுவிடக்கூடாது. அந்த குறள்வெண்பாவில் கூறியபடி நடந்து
            கொள்வோம் .

            Comment

            Working...
            X