Announcement

Collapse
No announcement yet.

6. திரு வேங்கட மாலை 079/104 : வேங்கடமே அரவம் பூண்டா

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • 6. திரு வேங்கட மாலை 079/104 : வேங்கடமே அரவம் பூண்டா









    தக்க மறையோர் நாவும் தகுதியுள்ள அந்தணர்களின் நாக்கு
    மிக்க மனு அளையும்சிறந்த மந்திரம் உச்சரிக்கும் இடமும் ,
    தண் சாரலின் புடையும் குளிர்ந்த மலைச் சாரலின் பக்கங்கள்
    மிக்க மனு வளையும்அதிகமான மனிதர்கள் வலம் செய்யும் இடமுமான
    வேங்கடமே திரு வேங்கட மலையே
    அக்கு அரவம் பூண்டார்க்கு எலும்பையும் , பாம்பையும் மாலையாக அணிந்த சிவனின்
    மால் துடைத்தார் மயக்கத்தை நீக்கியவரும் ,
    பொங்கு ஓத நீர் அடைத்து பொங்கும் அலைகளை உடைய கடலை அணை கட்டி
    மீண்டு ஆர்க்குமாறு உடைத்தார் மீண்டும் ஆரவாரிக்கும்படி அதை உடைத்த திருமாலின்
    வெற்பு திருமலை ஆகும்



    V.Sridhar

    Last edited by sridharv1946; 27-01-14, 20:04.
Working...
X