Announcement

Collapse
No announcement yet.

திருவரங்கத்தந்தாதி 53 அரங்கன் செய்வது எல்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருவரங்கத்தந்தாதி 53 அரங்கன் செய்வது எல்

    திருவரங்கத்தந்தாதி 53 அரங்கன் செய்வது எல்லாம் அலை மகள் உகப்பு ஆக !

    அண்டமடங்கலையுந்தந்துகாத்தவையந்தந்தன்பால்
    அண்டமடங்கலைச்செய்காரணமம்பொன்முத்தலைவான்
    அண்டமடங்கலையீர்த்தோடும்பொன்னியரங்கன்புட்கார்
    அண்டமடங்கலைமுந்நீர்மகளுகப்பாகவென்றே.
    Click image for larger version

Name:	529421_390920290969423_908276960_n.jpg
Views:	1
Size:	65.9 KB
ID:	34792
    பதவுரை : அண்ட - ( கோளம் / உயர / )
    மடங்கல் - ( சிங்கம் / முழுவதும் / அழிக்கும் / அடங்கும் )

    அம் பொன் அழகிய பொன்னையும்
    முத்து முத்துக்களையும் கொழிக்கின்ற
    அலை அலைகளும்
    வான் அண்ட மேகமண்டலத்தை அளாவி உயர
    மடங்கலை ஈர்த்து ஓடும் சிங்கங்களை இழுத்துக் கொண்டு ஓடி வருகிற
    பொன்னி காவேரியால் சூழப்பட்ட
    அரங்கன் ரங்கநாதன்
    அண்டம் அடங்கலையும் அண்ட கோளங்கள் முழுவதையும்
    தந்து படைத்து
    காத்து பாதுகாத்து
    அவை அந்த அண்டங்கள் எல்லாம்
    அந்தம் முடிவில்
    தன்பால் தன்னிடம்
    அண்டம் அடங்கலை செய் ஒடுங்கும்படி அழிக்கும்
    காரணம் காரணம்
    கார் அண்டம் புள் நீர்க் காக்கைகள்
    அடங்கு தம்மில் அடங்கப்பெற்ற
    அலை முந்நீர் அலைகளை உடைய பாற்கடலில்
    மகள் தோன்றிய திருமகள்
    உகப்பு ஆக என்றே ஆனந்தம் அடைவதற்கே !

    Last edited by sridharv1946; 04-07-13, 20:23.
Working...
X