Announcement

Collapse
No announcement yet.

திரு வேங்கடத்து அந்தாதி 28/100 ஐம்புலன்களால் &

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திரு வேங்கடத்து அந்தாதி 28/100 ஐம்புலன்களால் &

    திரு வேங்கடத்து அந்தாதி 28/100 ஐம்புலன்களால் அழியாமல் ஈடேற அச்சுதன் அடியை அடையுங்கள் !

    சிறக்கும் பதம் தருவார் திருவேங்கடச்செல்வர் செய்ய
    நிறக்கும் பதம் தொழுதுய்ய எண்ணீர் - நெறியில் பிழைத்து
    மறக் கும்ப தந்தியும் சேலும் அசுணமும் வண்டினமும்
    பறக்கும் பதங்கமும் போல் ஐவரால் கெடும் பாதகரே !


    :

    பதவுரை : சிறக்கும் + பதம் (ஸ்ரீ வைகுண்டம்)
    நிறக்கும் + பதம் (திருவடி)
    மற + கும்ப + தந்தியும்
    பறக்கும் + பதங்கம்

    மற கும்ப தந்தியும் (தொடு சுகம் தேடி அழியும்) கோபமும் மத்தகமும் கொண்ட யானையும்
    சேலும் (நா சுகம் தேடி அழியும் ) மீனும்
    அசுணமும் (செவி சுகம் தேடி அழியும் )அசுணம் என்னும் பறவையும்
    வண்டினமும் (வாசனை சுகம் தேடி அழியும் ) வண்டும்
    பறக்கும் பதங்கமும் (கண் சுகம் தேடி அழியும் ) விட்டில் பூச்சியும் போல
    நெறியில் பிழைத்து நன்னெறியிலிருந்து தவறி
    ஐவரால் கெடும் பாதகரே ஐம்புலன்களால் அழியும் அற்பர்களே !
    சிறக்கும் பதம் தருவார் சிறந்த ஸ்ரீ வைகுண்டம் அருளும்
    திருவேங்கடச்செல்வர் எல்லா செல்வங்களையும் உடையவருமான வேங்கட நாதனின்
    செய்ய நிறக்கும் பதம் சிவந்த நிறமுள்ள திருவடிகளை
    தொழுது உய்ய எண்ணீர் வணங்கி ஈடேறுவதற்கு நினையுங்கள் !

    Last edited by sridharv1946; 31-07-13, 19:54.
Working...
X