Announcement

Collapse
No announcement yet.

श्री भगवत् ध्यान सोपानम् - 04/12 ஸ்ரீ பகவத் த்ய

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • श्री भगवत् ध्यान सोपानम् - 04/12 ஸ்ரீ பகவத் த்ய

    श्री भगवत् ध्यान सोपानम् - 04/12



    ஸ்ரீ பகவத் த்யான ஸோபானம்



    அரங்கன் திருத்தொடை




















































































































































































































    श्रीमते निगमान्त महा देशिकाय नम:


















































































    श्रीमान् ; वेङ्कट - नाथार्य: ; कवि - तार्किक - केसरी |


    वेदान्त , आचार्य , वर्य: ; मे , सन्निधत्ताम् ! सदा , हृदि ||








































































































































    ஸ்ரீமதே நிகமாந்த மஹா தேசிகாய நம:

    .





















































    ஸ்ரீமான் ; வேங்கட - நாதார்ய: ; கவி , தார்க்கிக , கேஸரீ |


    வேதாந்த , ஆசார்ய , வர்யோ ; மே , ஸந்நிதத்தாம் ! ஸதா ஹ்ருதி ||

    काम आराम , स्थिर कदलिका स्तंभ , सम्भावनीयम् ;

    क्षौम आस्लिष्टम् , किमपि , कमला , भूमि , नीला , उपधानम् ; |

    न्यञ्चत् , काञ्ची , किरण , रुचिरम् ; निर्विशत् , ऊरु युग्मम्

    लावण्य औघ द्वयम् , इव , मति: , मामिका , रङ्ग यून: ||


    காம ஆராம ஸ்திர கதளிகா ஸ்தம்ப ஸம்பாவநீயம் ;

    க்*ஷௌம ஆஸ்லிஷ்டம் , கிமபி , கமலா , பூமி , நீளா , உபதாநம் ; |

    ந்யஞ்சத் , காஞ்சீ , கிரண , ருசிரம் ; நிர்விசத் , ஊரு யுக்மம் ;

    லாவண்ய ஔக த்வயம் , இவ , மதி: , மாமிகா , ரங்க யூந: ||


    काम .............. மன்மனது

    आराम ........... தோட்டத்தில் ,

    स्थिर ..... ....... உறுதியாய் இருக்கும் ,

    कदलिका ........ வாழைமரத்தின்

    स्तंभ .............. கட்டைகள் போல் ,

    सम्भावनीयम् ..... நினைக்கக் கூடியதும் ;

    क्षौम .............. பீதாம்பரத்தை ,

    आस्लिष्टम् ...... அணிந்திருப்பதும் ;

    कमला ........... பெரிய பிராட்டிக்கும் ,

    भूमि .............. பூமிப் பிராட்டிக்கும் ,

    नीला ............. நீளைப் பிராட்டிக்கும் ,

    उपधानम् ........ தலையணை போன்றதும் ;

    न्यञ्चत् .......... கீழ்ப் பக்கம் செல்லும் ,

    काञ्ची ........... மேகலையின்

    किरण ............ ஒளிகளால் ,

    रुचिरम् ... ....... அழகு பெற்றதாயும் ;

    द्वयम् ...... ....... இரண்டு

    लावण्य .......... அழகு

    औघ ........ ..... வெள்ளம்

    इव ............... போன்றதும் ;

    किमपि .......... அற்புதமாய் உள்ள

    रङ्ग ............. திரு அரங்கன் எனும்

    यून: .............. வாலிபனுடைய

    ऊरु .............. தொடைகள்

    युग्मम् ........... இரண்டையும் ,

    मामिका ......... எனது

    मति: ............ புத்தி


    निर्विशति........ அனுபவிக்கிறது !


    ஶ்ரீ வ.ந.ஶ்ரீராமதேசிகாசார்யரின் விளக்கவுரை:

    * மன்மதன் அழகுத் தெய்வம் . அவனுக்கு ஒரு தோட்டம். அதில் , மன்மதன் தன் கையாலேயே வாழைக்கன்றுகளைப் பயிர் செய்கிறான் . அவற்றில் , இரண்டு வாழை மரங்கள் , மிகச் செழிப்பாய் வளர்ந்து , அழகு பெற்று , ஓங்கி , காற்று முதலியவற்றால் , அசையாமல் (உலகில் , பலனை ஈன்ற வாழை மரங்கள் அழிவது போல் ) அழியாமல் , நிற்கின்றன. இந்த இரண்டு மரங்களைத்தாம் , திருவரங்கனுடைய , இரண்டு திருத்தொடைகளுக்கும் உவமை கூறலாம் !

    * இந்தத் தொடைகளைச்சுற்றி பீதாம்பரத்தை அணிந்துள்ளான் அரங்கன் !

    * பெரிய பிராட்டியும் , பூமி தேவியும், நீளைப் பிராட்டியும் அரங்கனது , திருவடிகளை வருடிப் , பணிசெய்யும் போது,களைப்பு ஏற்படின் , அவன் தொடைகளையே , தலையணையாகக்கொண்டு , சாய்ந்து , களைப்பாறுவார்களாம் !

    * இடையில் , அவன் அணிந்திருக்கும் , மேகலையில் உள்ள பல்வகை ரத்தினங்களின் ஒளி , கீழே , தொடைகளில் வீசுவதால் , இவையும் , பல நிறங்களுடன் அழகு பெறுகின்றன !

    * திரு வயிற்றுக்குக் கீழ் , அழகே உருவு கொண்ட தொடைகள் , இரண்டாகப் பிரிந்து , செல்வதை நோக்கும்போது , அவனுடைய , திருமேனி அழகு , மேல் உள்ள அங்கங்களில் , வெள்ளம்இட்டு , ஓடி , வந்து , திரு வயிற்றின் கீழ் , அவ்வழகு , வெள்ளம் , இரு கூறாகப் பிரிந்து , உள்ளதோ என்று கருதும்படி , உள்ளன !

    * எந்நாளும் , வாலிபப் பருவமேஉள்ள , திரு அரங்கனுடைய இரு தொடைகளையும் , என் புத்தி , அனுபவித்துக் கொண்டு கிடக்கின்றது !



Working...
X