Announcement

Collapse
No announcement yet.

nichayathartham

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • nichayathartham

    நான் எழுப்பிய நிச்சயதார்த்தம் கேள்விக்கு இரு பெரியவர்கள் பதில் அனுப்பிஉள்ளனர் அவர்களுக்கு நன்றி. இருந்தாலும் எனக்கு அறிந்த தெரிந்த மூன்று சம்பவங்களை nvs அவர்கள் அனுமதித்தால் இங்கு போஸ்ட் செய்ய விரும்புகிறேன் இங்கு admn பதிலை ஏட்ட்று கொள்கிறேன் ஆனால் ஸ்ரீ கோபாலன் அவர்களின் பதில் அந்த காலம் இந்த காலம் பற்றி எனக்கு வுடன்பாடு இல்லை.மேற்படி 3 சம்பவங்களும் பணக்கார சம்பவங்கள் .மூன்றும் பெண்களால் நிருத்தபட்டவை . அவ்வளவே சொல்லமுடியும் ..பி.எஸ் நரசிம்ஹன்

  • #2
    Re: nichayathartham

    Originally posted by P.S.NARASIMHAN View Post
    நான் எழுப்பிய நிச்சயதார்த்தம் கேள்விக்கு இரு பெரியவர்கள் பதில் அனுப்பிஉள்ளனர் அவர்களுக்கு நன்றி. இருந்தாலும் எனக்கு அறிந்த தெரிந்த மூன்று சம்பவங்களை nvs அவர்கள் அனுமதித்தால் இங்கு போஸ்ட் செய்ய விரும்புகிறேன் இங்கு admn பதிலை ஏட்ட்று கொள்கிறேன் ஆனால் ஸ்ரீ கோபாலன் அவர்களின் பதில் அந்த காலம் இந்த காலம் பற்றி எனக்கு வுடன்பாடு இல்லை.மேற்படி 3 சம்பவங்களும் பணக்கார சம்பவங்கள் .மூன்றும் பெண்களால் நிருத்தபட்டவை . அவ்வளவே சொல்லமுடியும் ..பி.எஸ் நரசிம்ஹன்

    இதனால் அனைத்து உறுப்பினர்களும் அறிய வேண்டியது யாதெனில்:
    தாங்கள் வெளியிட விரும்பும் எந்த தகவலானாலும் தயக்கமின்றி வெளியிடலாம்
    ஆனால் கீழ்கண்ட சில நெறிமுறைகளை (விதி முறைகள் அல்ல) மட்டும் பின்பற்றவும்:
    1. எந்த ஒரு வெளியீடும் எந்த ஒரு தனிமனிதரை குறிப்பிட்டு அவரைப் பாராட்டி
    அவருடைய புகைப்படத்துடன் கூட வெளியிடலாம். ஆனால் எந்த ஒரு தனிநபரையும்
    குறிப்பிட்டு தரம் தாழ்த்தியோ, மனம் புண்படும் விதத்திலோ இருக்கவேண்டாம்.

    2. எந்த ஒரு மதம், ஜாதி, உபஜாதி (சப்செக்ட்) பற்றி விமரிசனம் செய்வதைத் தவிர்க்கவும்.

    3. நடந்த சம்பவங்களை, அநுபவங்களை தாராளமாகப் பகிர்ந்து கொள்ளலாம், அவற்றில்
    சம்பந்தப்பட்ட நபர்கள் யாரும் ஆட்சேபம் தெரிவிக்கக்கூடிய விஷயங்களை வெளியிடவேண்டாம்.

    4. வைதீக, ஸம்ப்ரதாயங்களுக்கு அறிவுரை கூறும்போது முடிந்தவரை ஆதாரப் பூர்வமாக வழங்கவும்.
    அநுமானங்களைத் தீர்வாக எழுதவேண்டாம்.

    5. யாருடைய கேள்விக்கும் யார் வேண்டுமானாலும் கருத்துத் தெரிவிக்கலாம், எந்தக் கருத்தையும் எடுத்துக் கொள்வதும் விடுவதும் அவரவர் விருப்பத்தைப் பொறுத்தது.

    6. உலகத்தில் நிறைய விரும்பத்தகாத விஷயங்கள் நடந்துகொண்டுதான் இருக்கும்,
    பாதிக்கப்பட்டவர்கள் யாரும் நம்மிடம் நேரிடையாக எந்த உதவியையும் கேட்காதவரை
    நாமாக எந்த அமைப்பிற்கோ, எந்தத் தனிநபருக்கோ ஆதரவாகவோ நாம் எந்தக் கருத்தையும்
    வெளியிடுவதோ, உதவிகளை அறிவிப்பதோ தேவையற்றது.


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS

    Comment

    Working...
    X