Announcement

Collapse
No announcement yet.

மகா பெரியவாவின் ஸ்பரிஸம் பட்ட குளத்து நீ

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • மகா பெரியவாவின் ஸ்பரிஸம் பட்ட குளத்து நீ

    information

    Information

    மகா பெரியவா குறித்து திரு.சுவாமிநாதன் அவர்கள் தமது முகநூலில் முன்பெப்போதோ பகிர்ந்திருந்த ஒரு மெய்சிலிர்க்கும் நிகழ்வை தருகிறோம்.
    சிலர் நம்மிடம் கேட்ட கேள்விகள், வேறு சிலர் கேட்க நினைக்கும் கேள்விகள் அனைத்திற்கும் பதில் இதில் அடங்கியிருக்கிறது.






    மகா பெரியவாவின் ஸ்பரிஸம் பட்ட குளத்து நீர் !


    notice

    Notice

    பெரியவாள் முகாம் செய்திருந்த சிறிய கிராமத்தில் மொத்தம் பதினைந்து வீடுகளே இருந்தன.
    ஓர் ஆரம்பப் பள்ளியில் பெரியவாள் தங்குவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
    அதற்கு முந்தைய தினம் முகாம் செய்திருந்த கிராமம் சற்றுப் பெரியது. ஆனால் தண்ணீர் வசதியில்லை. எல்லாவித உபயோகங்களுக்கும் ஒரு குளம் தான் கதி! அதில் தண்ணீர் அசுத்தமாக இருந்தது. “குடிதண்ணீருக்கே அந்தத் தண்ணிதான்” என்று மனம் வருந்தி முறையிட்டார்கள் கிராம மக்கள்.
    அன்றைய தினம், அந்தக் குளத்தில்தான் பெரியவா ஸ்நானம் செய்தார்கள்.
    அன்று மாலையே புறப்பட்டு, சிறிய கிராமத்துக்கு வந்தாகிவிட்டது. மறுநாள் காலை வழக்கம்போல் பெரிய கிராமத்து மக்கள் அதே குளத்துக்குப் போனார்கள்.






    ஒரே அதிர்ச்சி!
    ஒரு குப்பை இல்லை; பாசி இல்லை; சேறு இல்லை! தண்ணீர் நிர்மலமாகப் பளிங்கு போலிருந்தது.
    “பெரியவங்க வந்து குளிச்சது, நம்ம பாக்கியம்!” எல்லையில்லாத சந்தோஷம்.






    ஸ்வாமிகளுக்கு நன்றியைத் தெரிவிக்க வேண்டுமே?





    ஏழெட்டுப் பேர்கள் சாப்பாடு, பிற்பகல் ஒரு மணிக்கே முடிந்துவிட்டது. சமையல் செய்த பண்டங்களை மூடி வைத்துவிட்டார்கள். “வீண்… அத்தனையும் வீணாகப் போகிறது” என்று சிப்பந்திகள் நொந்து கொண்டார்கள்.



    மாலை மணி நான்கு, இரண்டு பேருந்துகளில், அன்றைய பிக்ஷாவந்தனத்துக்காக, குஜராத்திகள் வந்து சேர்ந்தார்கள். முதலில் காஞ்சிபுரம் சென்று ஒவ்வொரு இடமாக விசாரித்துக்கொண்டு, இங்கே வந்து சேர்ந்துள்ளார்கள்.
    ”ஸ்வாமிகளை உடனே தரிசனம் செய்யணும்…”
    “முடியாது…”
    “ஏன்?”
    “முதலில் நீங்கள் எல்லோரும் சாப்பிட்டுவிட்டு வாருங்கள்; அப்புறம்தான், தரிசனம். பெரியவா உத்தரவு..”
    “இனிமேல் அடுப்பு மூட்டி, இத்தனை பேருக்கும் சமையல் செய்ய இரண்டு மணி நேரமாகுமே?”
    “இல்லை! இரண்டே நிமிஷம் போறும்! சமையல் ரெடி!”
    “நாங்கள் வரப்போகிறோம் என்று உங்களுக்குத் தெரியுமா?”
    “எங்களுக்குத் தெரியாது; பெரியவாளுக்குத் தெரிந்திருக்கும் போலிருக்கு…”
    குஜராத்திக்காரர்கள் கண்களில் பரவசக் கண்ணீர்! கை, கால் கழுவிக்கொண்டு, சாப்பிட உட்கார்ந்தார்கள்.
    கடைசியில், ஒரு பருக்கை சாதமோ, ஒரு கரண்டி சாம்பாரோ பாக்கியில்லை! நூறு பேர்களுக்கான உணவு வகைகளை, அறுபது பேர்களே சாப்பிட்டுத் தீர்த்துவிட்டார்கள், “என்ன ருசி, என்ன ருசி!” அவ்வளவு பசி!

    =================================================================
    ஒன்றை மட்டும் அனைவரும் நினைவில் கொள்ளவேண்டும். மகா பெரியவா மனிதர் உருவில் நம்மை கடாக்ஷிக்க வந்த பரம் பொருள். அதே சமயம் மனிதனாக பிறவி எடுத்துவிட்டபடியால் யுக தர்மத்திற்கு கட்டுப்பட்டு அதற்க்குரிய நியாய தர்மங்களையும் அனுஷ்டித்து வந்த மகா புருஷர். அவரது அவதார நோக்கம் கலியுகத்தில் இந்த இருபதாம் நூற்றாண்டில் கூட வேத சாஸ்திரங்கள் கூறும் வாழ்க்கை முறையை ஒருவரால் பின்பற்ற முடியும் என்பதை நிரூபிக்கவும்
    பாமரருக்கும் இறை நம்பிக்கை ஏற்பட்டு அவர்களை ஆன்மீகப் பாதையில் கொண்டு செல்வதுமேயாகும். இல்லாவிட்டால் அவர் மறைந்து 22 ஆண்டுகள் கழித்தும் அவரது மகிமைகளை படித்து உருகுவோமா? இணையத்தில் நேரத்தை வீணடிக்க எத்தனையோ விஷயங்கள் இருக்க, இது போன்ற பதிவுகளை ருசித்துக் கொண்டிருப்போமா ?

    =========================================================
    Last edited by bmbcAdmin; 28-11-14, 10:20.

  • #2
    Re: மகா பெரியவாவின் ஸ்பரிஸம் பட்ட குளத்து ந

    Another incident from the great Maha Periava's life.We were gifted to experience his presence.
    Those who had personal interactions with him were gifted.
    Hope to read many more such miracles for readers.
    Varadarajan
    Last edited by R.Varadarajan; 28-11-14, 09:24. Reason: correcting typos

    Comment


    • #3
      Re: மகா பெரியவாவின் ஸ்பரிஸம் பட்ட குளத்து ந

      Another incident from the great Maha Periava's life.We were gifted to experience his presence.
      Those who had personal interactions with him were gifted.
      Hope to read many more such miracles for readers.
      Varadarajan

      Undoubtedly we are all gifted Sir.Thank you for your encouraging comments Sir.

      Comment

      Working...
      X