Announcement

Collapse
No announcement yet.

கீதை – பதினாறாவது அத்தியாயம் 16[2]

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கீதை – பதினாறாவது அத்தியாயம் 16[2]

    கீதை – பதினாறாவது அத்தியாயம்


    தெய்வாசுர சம்பத் விபாக யோகம்


    Continued:


    अनेकचित्तविभ्रान्ता मोहजालसमावृताः ।
    प्रसक्ताः कामभोगेषु पतन्ति नरकेऽशुचौ ॥१६- १६॥


    அநேகசித்தவிப்⁴ராந்தா மோஹஜாலஸமாவ்ருதா: |
    ப்ரஸக்தா: காமபோ⁴கே³ஷு பதந்தி நரகேऽஸு²சௌ || 16- 16||
    அநேகசித்தவிப்⁴ராந்தா = பல சித்தங்களால் மருண்டோர்
    மோஹ ஜால ஸமாவ்ருதா: = மோகவலையில் அகப்பட்டோர்
    காமபோ⁴கே³ஷு ப்ரஸக்தா: = காம போகங்களில் பற்றுண்டோர்
    அஸு²சௌ நரகே பதந்தி = இவர்கள் அசுத்தமான நரகத்தில் விழுகிறார்கள்
    பல சித்தங்களால் மருண்டோர், மோகவலையிலகப்பட்டோர், காம போகங்களில் பற்றுண்டோர் – இவர்கள் அசுத்தமான நரகத்தில் விழுகிறார்கள்.


    आत्मसंभाविताः स्तब्धा धनमानमदान्विताः ।
    यजन्ते नामयज्ञैस्ते दम्भेनाविधिपूर्वकम् ॥१६- १७॥


    ஆத்மஸம்பா⁴விதா: ஸ்தப்³தா⁴ த⁴நமாநமதா³ந்விதா: |
    யஜந்தே நாமயஜ்ஞைஸ்தே த³ம்பே⁴நாவிதி⁴பூர்வகம் || 16- 17||
    ஆத்மஸம்பா⁴விதா: = இவர்கள் தற்புகழ்ச்சியுடையோர்
    ஸ்தப்³தா⁴: = முரடர்
    த⁴ந மாந மத³ அந்விதா: = செல்வச் செருக்கும் மதமுமுடையோர்
    தே நாமயஜ்ஞை = அவர்கள் பெயர் மாத்திரமான வேள்வி
    த³ம்பே⁴ந அவிதி⁴ பூர்வகம் யஜந்தே = டம்பத்துக்காக விதி தவறி செய்கின்றனர்
    இவர்கள் தற்புகழ்ச்சியுடையோர், முரடர், செல்வச் செருக்கும் மதமுமுடையோர்; டம்பத்துக்காக விதி தவறிப் பெயர் மாத்திரமான வேள்வி செய்கின்றனர்.


    अहंकारं बलं दर्पं कामं क्रोधं च संश्रिताः ।
    मामात्मपरदेहेषु प्रद्विषन्तोऽभ्यसूयकाः ॥१६- १८॥


    அஹங்காரம் ப³லம் த³ர்பம் காமம் க்ரோத⁴ம் ச ஸம்ஸ்²ரிதா: |
    மாமாத்மபரதே³ஹேஷு ப்ரத்³விஷந்தோऽப்⁴யஸூயகா: || 16- 18||
    அஹங்காரம் ப³லம் த³ர்பம் = அகங்காரத்தையும், பலத்தையும், செருக்கையும்
    காமம் க்ரோத⁴ம் ச ஸம்ஸ்²ரிதா: = விருப்பத்தையும், சினத்தையும் பற்றியவர்களாகிய
    அப்⁴யஸூயகா: = பிறரை இகழ்கின்றவர்களாக
    ஆத்மபரதே³ஹேஷு = மற்றவர் உடல்களிலும் உள்ள
    மாம் ப்ரத்³விஷந்த = என்னை வெறுக்கிறார்கள்
    அகங்காரத்தையும், பலத்தையும், செருக்கையும், விருப்பத்தையும், சினத்தையும் பற்றியவர்களாகிய இன்னோர் தம் உடம்புகளிலும் பிற உடம்புகளிலும் உள்ள என்னைப் பகைக்கிறார்கள்.


    तानहं द्विषतः क्रुरान्संसारेषु नराधमान् ।
    क्षिपाम्यजस्रमशुभानासुरीष्वेव योनिषु ॥१६- १९॥


    தாநஹம் த்³விஷத: க்ருராந்ஸம்ஸாரேஷு நராத⁴மாந் |
    க்ஷிபாம்யஜஸ்ரமஸு²பா⁴நாஸுரீஷ்வேவ யோநிஷு || 16- 19||
    த்³விஷத: க்ருராந் = வெறுப்பவர்களாகவும்; கொடியோராகவும்
    நராத⁴மாந் தாந் அஸு²பா⁴ந் = உலகத்தில் எல்லாரிலும் கடைப்பட்ட இந்த அசுப மனிதரை
    அஹம் அஜஸ்ரம் = நான் எப்போதும்
    ஸம்ஸாரேஷு = சம்சாரத்தில்
    ஆஸுரீஷு யோநிஷு க்ஷிபாமி =அசுர பிறப்புகளில் எறிகிறேன்
    இங்ஙனம் பகைக்கும் கொடியோரை – உலகத்தில் எல்லாரிலும் கடைப்பட்ட இந்த அசுப மனிதரை நான் எப்போதும் அசுர பிறப்புகளில் எறிகிறேன்.


    आसुरीं योनिमापन्ना मूढा जन्मनि जन्मनि ।
    मामप्राप्यैव कौन्तेय ततो यान्त्यधमां गतिम् ॥१६- २०॥


    ஆஸுரீம் யோநிமாபந்நா மூடா⁴ ஜந்மநி ஜந்மநி |
    மாமப்ராப்யைவ கௌந்தேய ததோ யாந்த்யத⁴மாம் க³திம் || 16- 20||
    கௌந்தேய = குந்தியின் மகனே!
    மூடா⁴: மாம் அப்ராப்ய ஏவ = இம்மூடர் என்னை யெய்தாமலே
    ஜந்மநி ஜந்மநி = பிறப்புத் தோறும்
    ஆஸுரீம் யோநிம் ஆபந்நா: = அசுரக் கருக்களில் தோன்றி
    தத: அத⁴மாம் க³திம் யாந்தி = மிகவும் கீழான கதியைச் சேர்கிறார்கள்
    பிறப்புத் தோறும் அசுரக் கருக்களில் தோன்றும் இம்மூடர் என்னை யெய்தாமலே மிகவும் கீழான கதியைச் சேர்கிறார்கள். குந்தியின் மகனே!





    त्रिविधं नरकस्येदं द्वारं नाशनमात्मनः ।
    कामः क्रोधस्तथा लोभस्तस्मादेतत्त्रयं त्यजेत् ॥१६- २१॥


    த்ரிவித⁴ம் நரகஸ்யேத³ம் த்³வாரம் நாஸ²நமாத்மந: |
    காம: க்ரோத⁴ஸ்ததா² லோப⁴ஸ்தஸ்மாதே³தத்த்ரயம் த்யஜேத் || 16- 21||
    இத³ம் ஆத்மந: நாஸ²நம் = இவ்வாறு ஆத்ம நாசத்துக்கிடமான
    த்ரிவித⁴ம் நரகஸ்ய த்³வாரம் = இம் மூன்று நரக வாயில்கள்
    காம: க்ரோத⁴: ததா² லோப⁴ = காமம், சினம், அவா
    தஸ்மாத் ஏதத் த்ரயம் த்யஜேத் = ஆதலால், இம்மூன்றையும் விடுக
    ஆத்ம நாசத்துக்கிடமான இம் மூன்று வாயில்களுடையது நான்அவையாவன) காமம், சினம், அவா, ஆதலால், இம்மூன்றையும் விடுக.


    एतैर्विमुक्तः कौन्तेय तमोद्वारैस्त्रिभिर्नरः ।
    आचरत्यात्मनः श्रेयस्ततो याति परां गतिम् ॥१६- २२॥


    ஏதைர்விமுக்த: கௌந்தேய தமோத்³வாரைஸ்த்ரிபி⁴ர்நர: |
    ஆசரத்யாத்மந: ஸ்²ரேயஸ்ததோ யாதி பராம் க³திம் || 16- 22||
    கௌந்தேய = குந்தியின் மகனே
    ஏதை: த்ரிபி⁴: தமோத்³வாரை: விமுக்த: = இந்த மூன்று இருள் வாயில்களினின்றும் விடுபட்டோன்
    நர: ஆத்மந: ஸ்²ரேய: ஆசரதி = தனக்குத் தான் நலந்தேடிக் கொள்கிறான்
    தத: பராம் க³திம் யாதி = அதனால் பரகதி அடைகிறான்
    இந்த மூன்று இருள் வாயில்களினின்றும் விடுபட்டோன் தனக்குத் தான் நலந்தேடிக் கொள்கிறான்; அதனால் பரகதி அடைகிறான்.


    यः शास्त्रविधिमुत्सृज्य वर्तते कामकारतः ।
    न स सिद्धिमवाप्नोति न सुखं न परां गतिम् ॥१६- २३॥


    ய: ஸா²ஸ்த்ரவிதி⁴முத்ஸ்ருஜ்ய வர்ததே காமகாரத: |
    ந ஸ ஸித்³தி⁴மவாப்நோதி ந ஸுக²ம் ந பராம் க³திம் || 16- 23||
    ய: ஸா²ஸ்த்ரவிதி⁴ம் உத்ஸ்ருஜ்ய = எவன் சாஸ்திர விதியை மீறி
    காமகாரத: வர்ததே = விருப்பத்தால் தொழில் புரிவோனோ
    ஸ: ஸித்³தி⁴ம் ந அவாப்நோதி = அவன் ஸித்தி பெற மாட்டான்
    பராம் க³திம் ந = பரகதி அடைய மாட்டான்
    ஸுக²ம் ந = அவன் இன்பம் எய்த மாட்டான்
    சாஸ்திர விதியை மீறி, விருப்பத்தால் தொழில் புரிவோன் சித்தி பெறான்; அவன் இன்பமெய்தான்; பரகதி அடையான்.


    तस्माच्छास्त्रं प्रमाणं ते कार्याकार्यव्यवस्थितौ ।
    ज्ञात्वा शास्त्रविधानोक्तं कर्म कर्तुमिहार्हसि ॥१६- २४॥


    தஸ்மாச்சா²ஸ்த்ரம் ப்ரமாணம் தே கார்யாகார்யவ்யவஸ்தி²தௌ |
    ஜ்ஞாத்வா ஸா²ஸ்த்ரவிதா⁴நோக்தம் கர்ம கர்துமிஹார்ஹஸி || 16- 24||
    தஸ்மாத் தே = ஆதலால் உனக்கு
    இஹ கார்ய அகார்ய வ்யவஸ்தி²தௌ = எது செய்யத்தக்கது, எது செய்யத்தகாதது என்று நிச்சயிப்பதில்
    ஸா²ஸ்த்ரம் ப்ரமாணம் = நீ சாஸ்திரத்தைப் பிரமாணமாகக் கொள்
    ஜ்ஞாத்வா = அதை அறிந்து
    ஸா²ஸ்த்ர விதா⁴ந உக்தம் = சாஸ்திர விதியால் கூறப்பட்ட தொழிலை
    கர்தும் அர்ஹஸி = செய்யக் கடவாய்
    ஆதலால், எது செய்யத்தக்கது, எது செய்யத்தகாதது என்று நிச்சயிப்பதில் நீ சாஸ்திரத்தைப் பிரமாணமாகக் கொள். அதையறிந்து சாஸ்திர விதியால் கூறப்பட்ட தொழிலைச் செய்யக் கடவாய்.


    ॐ तत्सदिति श्रीमद् भगवद्गीतासूपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे
    श्रिकृष्णार्जुन सम्वादे दैवासुरसम्पद्विभागयोगो नाम षोडशोऽध्याय: || 16 ||


    ஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்
    ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த
    உரையாடலில் ‘தெய்வாசுர சம்பத் விபாக யோகம்’ எனப் பெயர் படைத்த
    பதினாறாம் அத்தியாயம் நிறைவுற்றது.


    Source:Sanathanam.com
Working...
X