Announcement

Collapse
No announcement yet.

(அடைகள பத்து )

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • (அடைகள பத்து )

    1. பத்தி முதலாம் மவதில், பத்தி எனக்கு கூடாமல்,
    எத்திசையும் உழன்று ஓடி இளைத்து விழும் க்கம் போல்,
    முதி தரும் நகர் எழில் முக்கியமாம் கச்சி தன்னில்,
    அத்திகிரி அருள் ஆளற்கு, அடைகாலம் நான் புகுந்தேனே.2. சடை முடியன், சதுர் முகனென்று, இவர் முதலாம் தரம் எல்லாம்,
    அடைய வினை பயனாகி, அழிந்து விடும் படி கண்டு,
    கடி மலரில் பிரியாத கச்சி நகர் அதி கிரி,
    இடமுடைய அருளாளர், இணைய அடிகள் அடைந்தேனே.

    3. தந்திரங்கள் வேரின்றி தமது வழி அழியாது,
    மந்திரங்கள் தம்மாலும், மதுமுள்ள உரையாலும்,
    அந்தரம் கண்டு அடி பணிவார், அனைவர்க்கும் அருள் புரியும்,
    சிந்துர வேர் பிரையவனார், சீலம் அல்லது அறியேனே.

    4. க்கம் இராக்கதன், மன்னர் காதலி கதிர பந்து,
    நகம் அரண் அயன் முதலா நக நகரார் தமக்கும்,
    போகம்யோர் வீடு பெற பொன்னருள் செய்தமை கண்டு,
    நக மலை நாயகனார் நல்லடி போடடைன்தேனே.

    5. உகக்கும் அவை உஹந்து, உகவா அனைத்தும் ஒழிந்து, துஉறவு குண,
    மிக துணிவு பெற உணர்ந்து, வியன் கவலேன வரித்து,
    ஜகத்தில் ஒரு புகழ் இல்ல தவம் அறியேன் மதி கச்சி,
    நகர் கருணை நாதனை நல்ல அடைக்கலாமி அடைந்தேனே.

    6. அளவுடையார் அடைந்தார்க்கும், அதன் உரையே கொண்டவர்க்கும்,

    வளவுரை தந்தவன் அருளே, மன்னிய மதவதொர்க்கும்,
    கலவோழிவார் அமர் என, இசைந்தவர்க்கும் காவலராம்,
    துலவ முடி அருள் வரதர், துவக்கில் எனை வைத்தேனே.

    7. உமது அடிகள் அடைகேன்றேன் என்று ஒரு நாள் உரைதவரை.
    அமையும் இனி என்பவர் போல், அஞ்சல் என கரம் வைத்து,
    தமது அனைத்தும் அவர் தமக்கு வழங்கியும் தாம் மிக விளங்கும்,
    அமைவுடைய அருளாளர் அடியினை அடைந்தேனே.

    8. தினமாய் குர்யமைக்கும், நிறைகைக்கும் தீ வினால்,
    உண்மை மரவமைக்கும், உலா மத்தியில் உகக்கைக்கும்,
    தாமி கழியமைக்கும் தரிக்கைக்குக்ம், தணிக்கைக்கும்,
    வன்மை யுடை அருளாளர் வாசகங்கள் மறவேனே.

    9. சுரிதி நினிவு இவை அறியும், துநிவுடயோர் தூ மொழிகள்,
    பரிதிமதி ஆசிரியர் பாசுரம் சேர்ந்து அருக்கனங்கள்,
    கருதியொரு தெளி வாளால் கலக்கம் அறுத்தது கிரி,
    பரிதி மதி நயனமுடை பரமன் அடி பணிந்தேனே.

    10. திருமகளும், திருவடிவும், திருவருளும், தெள்ளரிவும்,
    மறுமை இளமையும் உறவும், அளப்பரிய வடிவரசும்,
    கருமம் அழிப்பு அழிப்பு அமைப்பும், கலக்கம் இலா வகை நின்ற,
    அருள் வரதர் நிலை இலக்கில், அம்பென நான் அமிழ்ந்தேனே.


    11. ஆறு பயன் வேரில்ல அடியவர் கல் அனைவருக்கும்,
    ம ரூ ம அதன் பயனும் இவை ஒரு காலும் பல காலும்,
    ஆறு பயன் எனவே கண்டு, அருள் ஆளர் அடியினை மேல்,
    கூறிய நற்குனை உரைகள், இவை பத்தும் கொதிலவே.

    கவி தர்கா சிம்ஹைய கல்யாணி குண ஷாலினே,
    ஸ்ரீமதே வேங்கடேசாய வேதாந்த குரவே நாம.
Working...
X