Announcement

Collapse
No announcement yet.

கீதை – பதினேழாவது அத்தியாயம் 17[1]

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கீதை – பதினேழாவது அத்தியாயம் 17[1]

    சிரத்தாத்ரய விபாக யோகம்


    information

    Information

    அவரவர் குணங்களுக்கேற்ப சிரத்தையும் சாத்விகம், ராஜசம், தாமசம் என மூவகைப்படும். சாத்விக சிரத்தையுடையோர் சாஸ்திரத்தைத் தழுவி தேவர்களை வணங்குவார். ராஜச சிரத்தை யுடையோர் யக்ஷர்களையும் ராக்ஷதர்களையும் வணங்குவார். தாமச சிரத்தையுடையோர் பூத பிரேத பிசாசங்களை வணங்குவார்.









    notice

    Notice

    அவர்களுக்குக் கிட்டும் பலன்களும் குணங்களுக்குத் தக்கபடியே வேறுபட்டிருக்கும். அப்படியிருக்க சாஸ்திரத்தை மீறுவோரைப் பற்றிச் சொல்ல வேண்டியதில்லை. அவர்கள் நினைத்த பலன் கிட்டாதென்பது மாத்திரமன்று; அவர்களுக்குக் கேடுமுண்டாகும். அவரவர் குணங்களுக்கேற்ப உண்ணும் உணவும், செய்யும் தவமும், கொடுக்கும் தானமும் மூவகைப் பட்டிருக்கும்.






    अर्जुन उवाच
    ये शास्त्रविधिमुत्सृज्य यजन्ते श्रद्धयान्विताः ।
    तेषां निष्ठा तु का कृष्ण सत्त्वमाहो रजस्तमः ॥१७- १॥


    அர்ஜுந உவாச
    யே ஸா²ஸ்த்ரவிதி⁴முத்ஸ்ருஜ்ய யஜந்தே ஸ்²ரத்³த⁴யாந்விதா: |
    தேஷாம் நிஷ்டா² து கா க்ருஷ்ண ஸத்த்வமாஹோ ரஜஸ்தம: || 17- 1||


    அர்ஜுந உவாச, க்ருஷ்ண = அர்ஜுனன் சொல்லுகிறான்: கண்ணா
    யே ஸா²ஸ்த்ரவிதி⁴ம் உத்ஸ்ருஜ்ய = எவர்கள் சாஸ்திர விதியை மீறி
    ஸ்²ரத்³த⁴யா அந்விதா: யஜந்தே = ஆனாலும் நம்பிக்கையுடன், வேள்வி செய்கிறார்களோ
    தேஷாம் நிஷ்டா² து கா = அவர்களுக்கு என்ன நிலை கிடைக்கிறது?
    ஸத்த்வம் ஆஹோ ரஜ: தம: = சத்துவமா அல்லது ரஜசா, தமசா?
    அர்ஜுனன் சொல்லுகிறான்: கண்ணா, சாஸ்திர விதியை மீறி, ஆனாலும் நம்பிக்கையுடன், வேள்வி செய்வோருக்கு என்ன நிலை கிடைக்கிறது? ஒளி நிலையா? கிளர்ச்சி நிலையா? அல்லது இருள் நிலையா? (சத்துவமா, ரஜசா, தமசா?)


    श्रीभगवानुवाच
    त्रिविधा भवति श्रद्धा देहिनां सा स्वभावजा ।
    सात्त्विकी राजसी चैव तामसी चेति तां शृणु ॥१७- २॥


    ஸ்ரீப⁴க³வாநுவாச
    த்ரிவிதா⁴ ப⁴வதி ஸ்²ரத்³தா⁴ தே³ஹிநாம் ஸா ஸ்வபா⁴வஜா |
    ஸாத்த்விகீ ராஜஸீ சைவ தாமஸீ சேதி தாம் ஸ்²ருணு || 17- 2||


    ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்
    தே³ஹிநாம் ஸ்வபா⁴வஜா = ஜீவர்களிடம் இயற்கையான சுபாவத்தால் உண்டான
    ஸா ஸ்²ரத்³தா⁴ = அந்த நம்பிக்கை
    த்ரிவிதா⁴ ப⁴வதி = மூன்று வகையாகத் தோன்றுகிறது
    ஸாத்த்விகீ ராஜஸீ ச தாமஸீ ஏவ இதி = சாத்விகம், ராஜசம், தாமசம் என
    தாம் ஸ்²ருணு = அதைக் கேள்
    ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: ஜீவர்களிடம் இயற்கையால் நம்பிக்கை மூன்று வகையாகத் தோன்றுகிறது. சாத்விகம், ராஜசம், தாமசம் என; அதைக் கேள்


    सत्त्वानुरूपा सर्वस्य श्रद्धा भवति भारत ।
    श्रद्धामयोऽयं पुरुषो यो यच्छ्रद्धः स एव सः ॥१७- ३॥


    ஸத்த்வாநுரூபா ஸர்வஸ்ய ஸ்²ரத்³தா⁴ ப⁴வதி பா⁴ரத |
    ஸ்²ரத்³தா⁴மயோऽயம் புருஷோ யோ யச்ச்²ரத்³த⁴: ஸ ஏவ ஸ: || 17- 3||


    பா⁴ரத = பாரதா
    ஸர்வஸ்ய ஸ்²ரத்³தா⁴ ஸத்த்வாநுரூபா ப⁴வதி = யாவருக்கும் நம்பிக்கை தத்தம் உள்ளியல்புக்கு ஒத்தபடியாகவே அமைகிறது
    அயம் புருஷ: ஸ்²ரத்³தா⁴மய: = மனிதன் சிரத்தை மயமானவன்
    ய: யத் ஸ்²ரத்³த⁴: ஸ: = எவன் எந்தப் பொருளில் நம்பிக்கையுடையவனோ அவன்
    ஸ: ஏவ = அந்தப் பொருளேதான் ஆகிறான்
    பாரதா, யாவருக்கும் தத்தம் உள்ளியல்புக்கு ஒத்தபடியாகவே நம்பிக்கை அமைகிறது. மனிதன் சிரத்தை மயமானவன் எவன் எந்தப் பொருளில் நம்பிக்கையுடையவனோ, அந்தப் பொருளேதான் ஆகிறான்.


    यजन्ते सात्त्विका देवान्यक्षरक्षांसि राजसाः ।
    प्रेतान्भूतगणांश्चान्ये यजन्ते तामसा जनाः ॥१७- ४॥


    யஜந்தே ஸாத்த்விகா தே³வாந்யக்ஷரக்ஷாம்ஸி ராஜஸா: |
    ப்ரேதாந்பூ⁴தக³ணாம்ஸ்²சாந்யே யஜந்தே தாமஸா ஜநா: || 17- 4||


    ஸாத்த்விகா தே³வாந் யஜந்தே = ஒளியியல்புடையோர் வானவர்க்கு வேள்வி செய்கின்றனர்
    ராஜஸா: யக்ஷரக்ஷாம்ஸி = ரஜோ குணமுடையோர் யக்ஷர்களுக்கும் ராக்ஷஸருக்கும் (வேள்வி செய்கிறார்கள்)
    அந்யே தாமஸா ஜநா: = மற்றத் தமோ குணமுடையோர்
    ப்ரேதாந் பூ⁴தக³ணாந் ச = பிரேத பூத கணங்களுக்கு
    யஜந்தே = வேள்வி செய்கிறார்கள்
    ஒளியியல்புடையோர் வானவர்க்கு வேள்வி செய்கின்றனர். ரஜோ குணமுடையோர் யக்ஷர்களுக்கும் ராக்ஷஸருக்கும் வேள்வி செய்கிறார்கள். மற்றத் தமோ குணமுடையோர் பிரேத பூத கணங்களுக்கு வேள்வி செய்கிறார்கள்.


    अशास्त्रविहितं घोरं तप्यन्ते ये तपो जनाः ।
    दम्भाहंकारसंयुक्ताः कामरागबलान्विताः ॥१७- ५॥


    அஸா²ஸ்த்ரவிஹிதம் கோ⁴ரம் தப்யந்தே யே தபோ ஜநா: |
    த³ம்பா⁴ஹங்காரஸம்யுக்தா: காமராக³ப³லாந்விதா: || 17- 5||


    யே ஜநா: = எந்த மக்கள்
    அஸா²ஸ்த்ரவிஹிதம் = நியமத்தை மீறி
    த³ம்ப⁴ அஹங்கார ஸம்யுக்தா: = டம்பமும் அகங்காரமுமுடையராய்
    காமராக³ ப³ல அந்விதா: = விருப்பத்திலும் விழைவிலும் சார்பற்றவர்களாய்
    கோ⁴ரம் தப: தப்யந்தே = கோரமான தவஞ் செய்கிறார்களோ
    (சிலர்) சாஸ்திர நியமத்தை மீறி, டம்பமும் அகங்காரமுமுடையராய், விருப்பத்திலும் விழைவிலும் சார்பற்றவர்களாய், கோரமான தவஞ் செய்கிறார்கள்.


    कर्षयन्तः शरीरस्थं भूतग्राममचेतसः ।
    मां चैवान्तःशरीरस्थं तान्विद्ध्यासुरनिश्चयान् ॥१७- ६॥


    கர்ஷயந்த: ஸ²ரீரஸ்த²ம் பூ⁴தக்³ராமமசேதஸ: |
    மாம் சைவாந்த:ஸ²ரீரஸ்த²ம் தாந்வித்³த்⁴யாஸுரநிஸ்²சயாந் || 17- 6||


    ஸ²ரீரஸ்த²ம் பூ⁴தக்³ராமம் ச = உடம்பிலுள்ள பூதத் தொகுதிகளையும்
    அந்த:ஸ²ரீரஸ்த²ம் மாம் ஏவ = அகத்திலுள்ள என்னையும்
    கர்ஷயந்த: = வருத்துகிறார்கள்
    தாந் அசேதஸ: = அந்த அறிவு கெட்டவர்கள்
    ஆஸுர நிஸ்²சயாந் வித்³தி⁴= அசுர நிச்சய முடையோரென்றுணர்
    இங்ஙனம் அறிவு கெட்டோராய்த் தம் உடம்பிலுள்ள பூதத் தொகுதிகளையும் அகத்திலுள்ள என்னையும் வருத்துகிறார்கள். இவர்கள் அசுர நிச்சய முடையோரென்றுணர்.


    आहारस्त्वपि सर्वस्य त्रिविधो भवति प्रियः ।
    यज्ञस्तपस्तथा दानं तेषां भेदमिमं शृणु ॥१७- ७॥


    ஆஹாரஸ்த்வபி ஸர்வஸ்ய த்ரிவிதோ⁴ ப⁴வதி ப்ரிய: |
    யஜ்ஞஸ்தபஸ்ததா² தா³நம் தேஷாம் பே⁴த³மிமம் ஸ்²ருணு || 17- 7||


    ஸர்வஸ்ய ப்ரிய: ஆஹார: அபி = ஒவ்வொருவருக்கும் பிரியமான உணவும்
    த்ரிவித⁴: ப⁴வதி = மூன்று வகைப்படுகிறது
    ததா² யஜ்ஞ: தப: தா³நம் = அங்ஙனமே வேள்வியும், தவமும் தானமும்
    தேஷாம் இமம் பே⁴த³ம் = அவற்றின் வேற்றுமையைக்
    ஸ்²ருணு = கேள்
    ஒவ்வொருவருக்கும் பிரியமான உணவும் மூன்று வகைப்படுகிறது. வேள்வியும், தவமும் தானமும் அங்ஙனமே மும்மூன்று வகைப்படுகின்றன. அவற்றின் வேற்றுமையைக் கேள்.


    आयुःसत्त्वबलारोग्यसुखप्रीतिविवर्धनाः ।
    रस्याः स्निग्धाः स्थिरा हृद्या आहाराः सात्त्विकप्रियाः ॥१७- ८॥


    ஆயு:ஸத்த்வப³லாரோக்³யஸுக²ப்ரீதிவிவர்த⁴நா: |
    ரஸ்யா: ஸ்நிக்³தா⁴: ஸ்தி²ரா ஹ்ருத்³யா ஆஹாரா: ஸாத்த்விகப்ரியா: || 17- 8||


    ஆயு: ஸத்த்வ ப³ல ஆரோக்³ய ஸுக² ப்ரீதி = உயிர், சக்தி, பலம், நோயின்மை, இன்பம், பிரீதி
    விவர்த⁴நா:, ரஸ்யா: ஸ்நிக்³தா⁴: = மிகுதிப்படுத்துவன, சுவையுடையன, குழம்பாயின
    ஸ்தி²ரா: ஹ்ருத்³யா: ஆஹாரா: = உறுதியுடையன, உள முகந்த இவ்வுணவுகள்
    ஸாத்த்விகப்ரியா: = சத்துவ குணமுடையோருக்கு பிரியமானவை
    உயிர், சக்தி, பலம், நோயின்மை, இன்பம், பிரீதி – இவற்றை மிகுதிப்படுத்துவன, சுவையுடையன, குழம்பாயின, உறுதியுடையன, உள முகந்தன. இவ்வுணவுகள் சத்துவ குணமுடையோருக்கு பிரியமானவை.


    कट्*वम्ललवणात्युष्णतीक्ष्णरूक्षविदाहिनः ।
    आहारा राजसस्येष्टा दुःखशोकामयप्रदाः ॥१७- ९॥


    கட்*வம்லலவணாத்யுஷ்ணதீக்ஷ்ணரூக்ஷவிதா³ஹிந: |
    ஆஹாரா ராஜஸஸ்யேஷ்டா து³:க²ஸோ²காமயப்ரதா³: || 17- 9||


    கடு அம்ல லவண தீக்ஷ்ண = கசப்பும், புளிப்பும், உப்பும் உறைப்பும்
    அதிஉஷ்ண = அதிகச் சூடு கொண்டன
    ரூக்ஷ விதா³ஹிந: = உலர்ந்தன, எரிச்சலுடையன
    ஆஹாரா: ராஜஸஸ்ய இஷ்டா: = இவ்வுணவுகளை ரஜோ குணமுடையோர் விரும்புவர்
    து³:க² ஸோ²க ஆமயப்ரதா³: = இவை துன்பத்தையும் துயரையும் நோயையும் விளைவிப்பன
    கசப்பும், புளிப்பும், உப்பும், உறைப்பும் மிகுந்தன, அதிகச் சூடு கொண்டன, உலர்ந்தன, எரிச்சலுடையன – இவ்வுணவுகளை ரஜோ குணமுடையோர் விரும்புவர். இவை துன்பத்தையும் துயரையும் நோயையும் விளைவிப்பன.


    यातयामं गतरसं पूति पर्युषितं च यत् ।
    उच्छिष्टमपि चामेध्यं भोजनं तामसप्रियम् ॥१७- १०॥


    யாதயாமம் க³தரஸம் பூதி பர்யுஷிதம் ச யத் |
    உச்சி²ஷ்டமபி சாமேத்⁴யம் போ⁴ஜநம் தாமஸப்ரியம் || 17- 10||


    யத் போ⁴ஜநம் யாதயாமம் = எந்த உணவு கெட்டுப் போனது
    க³தரஸம் = சுவையற்றது
    பூதி = அழுகியது
    பர்யுஷிதம் ச = பழையது
    உச்சி²ஷ்டம் ச = எச்சில் பட்டது
    அமேத்⁴யம் அபி = அசுத்தம்
    தாமஸப்ரியம் = தமோ குணமுடையோருக்குப் பிரியமானது
    பழையது, சுவையற்றது, அழுகியது, கெட்டுப் போனது, எச்சில் அசுத்தம், இத்தகைய உணவு தமோ குணமுடையோருக்குப் பிரியமானது.


    अफलाकाङ्क्षिभिर्यज्ञो विधिदृष्टो य इज्यते ।
    यष्टव्यमेवेति मनः समाधाय स सात्त्विकः ॥१७- ११॥


    அப²லாகாங்க்ஷிபி⁴ர்யஜ்ஞோ விதி⁴த்³ருஷ்டோ ய இஜ்யதே |
    யஷ்டவ்யமேவேதி மந: ஸமாதா⁴ய ஸ ஸாத்த்விக: || 17- 11||


    ய: விதி⁴த்³ருஷ்ட: = எவர் விதிகள் சொல்லியபடி
    யஜ்ஞ: யஷ்டவ்யம் ஏவ = வேள்வி புரிதல் கடமையென்று
    இதி மந: ஸமாதா⁴ய = மனம் தேறி
    அப²லாகாங்க்ஷிபி⁴: இஜ்யதே = பயனை விரும்பாதவர்களாய் வேள்வி செய்கிறார்களோ
    ஸ ஸாத்த்விக: = அந்த வேள்வி சத்துவ குணமுடையது
    பயனை விரும்பாதவர்களாய், வேள்வி புரிதல் கடமையென்று மனந்தேறி விதிகள் சொல்லியபடி இயற்றுவாரின் வேள்வி சத்துவ குணமுடைத்து.


    अभिसंधाय तु फलं दम्भार्थमपि चैव यत् ।
    इज्यते भरतश्रेष्ठ तं यज्ञं विद्धि राजसम् ॥१७- १२॥


    அபி⁴ஸந்தா⁴ய து ப²லம் த³ம்பா⁴ர்த²மபி சைவ யத் |
    இஜ்யதே ப⁴ரதஸ்²ரேஷ்ட² தம் யஜ்ஞம் வித்³தி⁴ ராஜஸம் || 17- 12||


    து ப⁴ரதஸ்²ரேஷ்ட² = பாரதரிற் சிறந்தாய்!
    த³ம்பா⁴ர்த²ம் ஏவ ச ப²லம் அபி அபி⁴ஸந்தா⁴ய = ஆடம்பரத்துக் கெனினும் பயனைக் குறித்தெனினும் கருத்தில் கொண்டு
    யத் இஜ்யதே= வேள்வி வேட்கப் படுகிறதோ
    தம் ராஜஸம் யஜ்ஞம் வித்³தி⁴ = அது ராஜச வேள்வி என்று உணர்
    பயனைக் குறித்தெனினும் ஆடம்பரத்துக் கெனினும் செய்யப்படும் வேள்வி ராஜச மென்றுணர்; பாரதரிற் சிறந்தாய்!


    विधिहीनमसृष्टान्नं मन्त्रहीनमदक्षिणम् ।
    श्रद्धाविरहितं यज्ञं तामसं परिचक्षते ॥१७- १३॥


    விதி⁴ஹீநமஸ்ருஷ்டாந்நம் மந்த்ரஹீநமத³க்ஷிணம் |
    ஸ்²ரத்³தா⁴விரஹிதம் யஜ்ஞம் தாமஸம் பரிசக்ஷதே || 17- 13||


    விதி⁴ஹீநம் = விதி தவறியது
    அஸ்ருஷ்டாந்நம் = பிறர்க்குணவு தராததும்
    மந்த்ரஹீநம் = மந்திர மற்றது
    அத³க்ஷிணம் = தக்ஷிணையற்றது
    ஸ்²ரத்³தா⁴விரஹிதம் = நம்பிக்கையின்றிச் செய்யப்படுவது
    யஜ்ஞம் தாமஸம் பரிசக்ஷதே = இத்தகைய வேள்வியைத் தாமசமென்பார்
    விதி தவறியது, பிறர்க்குணவு தராததும் மந்திர மற்றது, தக்ஷிணையற்றது, நம்பிக்கையின்றிச் செய்யப்படுவது – இத்தகைய வேள்வியைத் தாமசமென்பார்.


    देवद्विजगुरुप्राज्ञपूजनं शौचमार्जवम् ।
    ब्रह्मचर्यमहिंसा च शारीरं तप उच्यते ॥१७- १४॥


    தே³வத்³விஜகு³ருப்ராஜ்ஞபூஜநம் ஸௌ²சமார்ஜவம் |
    ப்³ரஹ்மசர்யமஹிம்ஸா ச ஸா²ரீரம் தப உச்யதே || 17- 14||


    தே³வ த்³விஜ கு³ரு ப்ராஜ்ஞ பூஜநம் = தேவர், அந்தணர், குருக்கள், அறிஞர் இவர்களுக்குப் பூஜை செய்தல்
    ஸௌ²சம் ஆர்ஜவம் ப்³ரஹ்மசர்யம் அஹிம்ஸா ச = தூய்மை, நேர்மை, பிரம்மசரியம், கொல்லாமை
    ஸா²ரீரம் தப உச்யதே = இவை உடம்பைப் பற்றிய தவமெனப்படும்
    தேவர், அந்தணர், குருக்கள், அறிஞர் – இவர்களுக்குப் பூஜை செய்தல், தூய்மை, நேர்மை, பிரம்மசரியம், கொல்லாமை – இவை உடம்பைப் பற்றிய தவமெனப்படும்.


    Continued
Working...
X