Announcement

Collapse
No announcement yet.

கீதை – பதினெட்டாவது அத்தியாயம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கீதை – பதினெட்டாவது அத்தியாயம்

    மோஷ சந்நியாச யோகம்









    अर्जुन उवाच
    संन्यासस्य महाबाहो तत्त्वमिच्छामि वेदितुम् ।
    त्यागस्य च हृषीकेश पृथक्केशिनिषूदन ॥१८- १॥


    அர்ஜுந உவாச
    ஸந்ந்யாஸஸ்ய மஹாபா³ஹோ தத்த்வமிச்சா²மி வேதி³தும் |
    த்யாக³ஸ்ய ச ஹ்ருஷீகேஸ² ப்ருத²க்கேஸி²நிஷூத³ந || 18- 1 ||



    அர்ஜுந உவாச மஹாபா³ஹோ = அர்ஜுனன் சொல்லுகிறான், உயர் புயத்தோய்
    ஹ்ருஷீகேஸ² = ஹ்ருஷீகேசா
    கேஸி²நிஷூத³ந = கேசியைக் கொன்றவனே
    ஸந்ந்யாஸஸ்ய தத்த்வம் = சந்நியாசத்தின் இயல்பையும்
    த்யாக³ஸ்ய ச = தியாகத்தின் இயல்பையும்
    ப்ருத²க் வேதி³தும் இச்சா²மி = பிரித்துக் கேட்க விரும்புகிறேன்
    அர்ஜுனன் சொல்லுகிறான்: உயர் புயத்தோய், கண்ணா, கேசியைக் கொன்றாய் சந்நியாசத்தின் இயல்பையும் தியாகத்தின் இயல்பையும் பிரித்துக் கேட்க விரும்புகிறேன்.



    श्रीभगवानुवाच
    काम्यानां कर्मणां न्यासं संन्यासं कवयो विदुः ।
    सर्वकर्मफलत्यागं प्राहुस्त्यागं विचक्षणाः ॥१८- २॥


    ஸ்ரீப⁴க³வாநுவாச
    காம்யாநாம் கர்மணாம் ந்யாஸம் ஸந்ந்யாஸம் கவயோ விது³: |
    ஸர்வகர்மப²லத்யாக³ம் ப்ராஹுஸ்த்யாக³ம் விசக்ஷணா: || 18- 2 ||



    ஸ்ரீப⁴க³வாநுவாச = ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்
    காம்யாநாம் கர்மணாம் ந்யாஸம் = விருப்பத்தால் செய்யப்படும் கர்மங்களை துறப்பது
    ஸந்ந்யாஸம் கவய: விது³: = சந்நியாசமென்று புலவர் தெரிவித்துளர்
    ஸர்வகர்மப²ல த்யாக³ம் = எல்லாவிதச் செயல்களின் பலன்களையும் துறந்துவிடுதல்
    த்யாக³ம் விசக்ஷணா: ப்ராஹு = தியாகமென்று ஞானிகள் கூறுவர்
    ஸ்ரீ பகவான் சொல்லுகிறான்: விருப்பத்தால் செய்யப்படும் சலுகைகளைத் துறப்பது சந்நியாசமென்று புலவர் தெரிவித்துளர். எல்லாவிதச் செயல்களின் பலன்களையுந் துறந்துவிடுதல் தியாகமென்று ஞானிகள் கூறுவர்.



    त्याज्यं दोषवदित्येके कर्म प्राहुर्मनीषिणः ।
    यज्ञदानतपःकर्म न त्याज्यमिति चापरे ॥१८- ३॥


    த்யாஜ்யம் தோ³ஷவதி³த்யேகே கர்ம ப்ராஹுர்மநீஷிண: |
    யஜ்ஞதா³நதப:கர்ம ந த்யாஜ்யமிதி சாபரே || 18- 3||


    ஏகே மநீஷிண: = சில அறிஞர்
    கர்ம தோ³ஷவத் = கர்மங்கள் அனைத்தும் குற்றம் போலே கருதி
    த்யாஜ்யம் இதி ப்ராஹு = விட்டுவிடவேண்டும் என்கிறார்கள்
    யஜ்ஞ தா³ந தப: கர்ம = வேள்வி, தானம், தவம் என்ற செயல்களை
    ந த்யாஜ்யம் இதி ச அபரே = விடக்கூடாது என்கிறார்கள் வேறு சிலர்
    சில அறிஞர், செய்கையைக் குற்றம் போலே கருதி விட்டுவிடவேண்டும் என்கிறார்கள். வேறு சிலர், வேள்வி, தானம், தவம் என்ற செயல்களை விடக்கூடாது என்கிறார்கள்.


    निश्चयं शृणु मे तत्र त्यागे भरतसत्तम ।
    त्यागो हि पुरुषव्याघ्र त्रिविधः संप्रकीर्तितः ॥१८- ४॥


    நிஸ்²சயம் ஸ்²ருணு மே தத்ர த்யாகே³ ப⁴ரதஸத்தம |
    த்யாகோ³ ஹி புருஷவ்யாக்⁴ர த்ரிவித⁴: ஸம்ப்ரகீர்தித: || 18- 4||


    ப⁴ரதஸத்தம = பாரதரில் சிறந்தவனே
    புருஷவ்யாக்⁴ர = புருஷப் புலியே
    தத்ர த்யாகே³ மே நிஸ்²சயம் ஸ்²ருணு = தியாக விஷயத்தில் நான் நிச்சயத்தைச் சொல்லுகிறேன் கேள்
    ஹி த்யாக³: த்ரிவித⁴: ஸம்ப்ரகீர்தித: = தியாகம் மூன்று வகையாகக் கூறப்பட்டது
    பாரதரில் சிறந்தவனே, புருஷப் புலியே, தியாக விஷயத்தில் நான் நிச்சயத்தைச் சொல்லுகிறேன்; கேள், தியாகம் மூன்று வகையாகக் கூறப்பட்டது.


    यज्ञदानतपःकर्म न त्याज्यं कार्यमेव तत् ।
    यज्ञो दानं तपश्चैव पावनानि मनीषिणाम् ॥१८- ५॥


    யஜ்ஞதா³நதப:கர்ம ந த்யாஜ்யம் கார்யமேவ தத் |
    யஜ்ஞோ தா³நம் தபஸ்²சைவ பாவநாநி மநீஷிணாம் || 18- 5||


    யஜ்ஞ தா³ந தப: கர்ம = வேள்வி, தானம், தவம் என்ற செயல்களை
    ந த்யாஜ்யம் = விடக் கூடாது
    தத் கார்யமேவ = செய்யவே வேண்டும்
    யஜ்ஞ: தா³நம் ச தப ஏவ = வேள்வியும் தானமும், தவமும்
    மநீஷிணாம் பாவநாநி = அறிவுடையோரைத் தூய்மைப்படுத்துகின்றன.
    வேள்வி, தானம், தவம் என்ற செயல்களை விடக் கூடாது. அவற்றைச் செய்யவே வேண்டும். வேள்வியும் தானமும், தவமும் அறிவுடையோரைத் தூய்மைப்படுத்துகின்றன.


    एतान्यपि तु कर्माणि सङ्गं त्यक्त्वा फलानि च ।
    कर्तव्यानीति मे पार्थ निश्चितं मतमुत्तमम् ॥१८- ६॥


    ஏதாந்யபி து கர்மாணி ஸங்க³ம் த்யக்த்வா ப²லாநி ச |
    கர்தவ்யாநீதி மே பார்த² நிஸ்²சிதம் மதமுத்தமம் || 18- 6||


    து பார்த² = ஆனால் பார்த்தா
    ஏதாநி கர்மாணி ஸங்க³ம் த்யக்த்வா = இச் செயல்களைக்கூட ஒட்டின்றியும்
    ப²லாநி ச = பயன்களை வேண்டாமலும்
    கர்தவ்யாநி இதி = செய்ய வேண்டும் என்பது
    மே உத்தமம் நிஸ்²சிதம் மதம் = என்னுடைய உத்தமமான நிச்சயக் கொள்கை.
    ஆனால் பார்த்தா, இச் செயல்களைக்கூட ஒட்டின்றியும், பயன்களை வேண்டாமலும் செய்ய வேண்டும் என்பது என் உத்தமமான நிச்சயக் கொள்கை.


    नियतस्य तु संन्यासः कर्मणो नोपपद्यते ।
    मोहात्तस्य परित्यागस्तामसः परिकीर्तितः ॥१८- ७॥


    நியதஸ்ய து ஸந்ந்யாஸ: கர்மணோ நோபபத்³யதே |
    மோஹாத்தஸ்ய பரித்யாக³ஸ்தாமஸ: பரிகீர்தித: || 18- 7||


    து நியதஸ்ய கர்மண: = ஆனால் நியமத்தின் படியுள்ள செய்கையை
    ஸந்ந்யாஸ: ந உபபத்³யதே = துறத்தல் தகாது
    மோஹாத் தஸ்ய பரித்யாக³ = மதிமயக்கத்தால் அதனை விட்டுவிடுதல்
    தாமஸ: பரிகீர்தித: = தமோ குணத்தால் நேர்வதென்பர்
    நியமத்தின் படியுள்ள செய்கையைத் துறத்தல் தகாது. மதிமயக்கத்தால் அதனை விட்டுவிடுதல் தமோ குணத்தால் நேர்வதென்பர்.


    दुःखमित्येव यत्कर्म कायक्लेशभयात्त्यजेत् ।
    स कृत्वा राजसं त्यागं नैव त्यागफलं लभेत् ॥१८- ८॥


    து³:க²மித்யேவ யத்கர்ம காயக்லேஸ²ப⁴யாத்த்யஜேத் |
    ஸ க்ருத்வா ராஜஸம் த்யாக³ம் நைவ த்யாக³ப²லம் லபே⁴த் || 18- 8||


    யத் கர்ம = எது செய்ய வேண்டிய கருமமோ
    து³:க²ம் ஏவ இதி = துன்பமாகக் கருதி
    காய க்லேஸ² ப⁴யாத் = உடம்புக்கு வருத்தம் நேருமென்ற பயத்தால்
    த்யஜேத் = செய்யாமல் விடுவானேயானால்
    ஸ: = அவன்
    ராஜஸம் த்யாக³ம் க்ருத்வா = அவன் ராஜஸ தியாகம் செய்து
    த்யாக³ ப²லம் ந லபே⁴த் ஏவ = தியாகப் பயனை அடையமாட்டான்
    உடம்புக்கு வருத்தம் நேருமென்ற பயத்தால் ஒரு செய்கையைத் துன்பமாகக் கருதி, அதனை விட்டு விடுவோன் புரியும் தியாகம் ரஜோ குணத்தின் பாற்பட்டது. அதனால் அவன் தியாகப் பயனை அடையமாட்டான்.


    कार्यमित्येव यत्कर्म नियतं क्रियतेऽर्जुन ।
    सङ्गं त्यक्त्वा फलं चैव स त्यागः सात्त्विको मतः ॥१८- ९॥


    கார்யமித்யேவ யத்கர்ம நியதம் க்ரியதேऽர்ஜுந |
    ஸங்க³ம் த்யக்த்வா ப²லம் சைவ ஸ த்யாக³: ஸாத்த்விகோ மத: || 18- 9||


    அர்ஜுந நியதம் யத் கர்ம = அர்ஜுனா நியமத்துக் கிணங்கிய செய்கையை
    கார்யம் இதி ஏவ = இது செய்தற்கு உரியது’ என்னும் எண்ணத்தால்
    ஸங்க³ம் ப²லம் ச த்யக்த்வா = ஒட்டுதலையும் பயன் வேண்டலையும் விடுத்து
    க்ரியதே = செய்தால்
    ஸ: ஏவ ஸாத்த்விக த்யாக³: மத: = அதுவே சாத்விக தியாகம் எனப்படும்
    நியமத்துக் கிணங்கிய செய்கையை, ‘இது செய்தற்கு உரியது’ என்னும் எண்ணத்தால் செய்து, அதில் ஒட்டுதலையும் பயன் வேண்டலையும் ஒருவன் விட்டுவிடுவானாயின் அவனுடைய தியாகமே சாத்விகம் எனப்படும்.


    न द्वेष्ट्यकुशलं कर्म कुशले नानुषज्जते ।
    त्यागी सत्त्वसमाविष्टो मेधावी छिन्नसंशयः ॥१८- १०॥


    ந த்³வேஷ்ட்யகுஸ²லம் கர்ம குஸ²லே நாநுஷஜ்ஜதே |
    த்யாகீ³ ஸத்த்வஸமாவிஷ்டோ மேதா⁴வீ சி²ந்நஸம்ஸ²ய: || 18- 10||


    ஸத்த்வஸமாவிஷ்ட: மேதா⁴வீ = சத்வ குணத்திலிசைந்து மேதாவியாய்
    சி²ந்நஸம்ஸ²ய: த்யாகீ³ =ஐயங்களையறுத்த தியாகி
    அகுஸ²லம் கர்ம = இன்பமற்ற செய்கையை
    ந த்³வேஷ்டி = வெறுப்பதில்லை
    குஸ²லே ந அநுஷஜ்ஜதே = இன்பமுடைய செய்கையில் பற்றுக் கொள்வதில்லை
    சத்வ குணத்திலிசைந்து மேதாவியாய், ஐயங்களையறுத்த தியாகி இன்பமற்ற செய்கையைப் பகைப்பதில்லை. இன்பமுடைய செய்கையில் நசை யுறுவதில்லை.


    न हि देहभृता शक्यं त्यक्तुं कर्माण्यशेषतः ।
    यस्तु कर्मफलत्यागी स त्यागीत्यभिधीयते ॥१८- ११॥


    ந ஹி தே³ஹப்⁴ருதா ஸ²க்யம் த்யக்தும் கர்மாண்யஸே²ஷத: |
    யஸ்து கர்மப²லத்யாகீ³ ஸ த்யாகீ³த்யபி⁴தீ⁴யதே || 18- 11||


    ஹி தே³ஹப்⁴ருதா = மேலும் உடம்பெடுத்தவனால்
    அஸே²ஷத: கர்மாணி = முழுதுமே செய்கைகளை
    த்யக்தும் ந ஸ²க்யம் = விட்டுவிட முடியாது
    ய கர்ம ப²லத்யாகீ³ = எவன் செய்கைகளின் பயனைத் துறக்கிறானோ
    ஸ: து த்யாகீ³ இதி அபி⁴தீ⁴யதே = அவனே தியாகி யெனப்படுவான்
    (மேலும்) உடம்பெடுத்தவனால் செய்கைகளை முழுதுமே விட்டுவிட முடியாது. எவன் செய்கைகளின் பயனைத் துறக்கிறானோ, அவனே தியாகி யெனப்படுவான்.


    अनिष्टमिष्टं मिश्रं च त्रिविधं कर्मणः फलम् ।
    भवत्यत्यागिनां प्रेत्य न तु संन्यासिनां क्वचित् ॥१८- १२॥


    அநிஷ்டமிஷ்டம் மிஸ்²ரம் ச த்ரிவித⁴ம் கர்மண: ப²லம் |
    ப⁴வத்யத்யாகி³நாம் ப்ரேத்ய ந து ஸந்ந்யாஸிநாம் க்வசித் || 18- 12||


    அநிஷ்டம் இஷ்டம் மிஸ்²ரம் ச = வேண்டப்படாதது, வேண்டப்படுவது, இரண்டும் கலப்பானது என
    த்ரிவித⁴ம் கர்மண: ப²லம் = மூன்று வகைப்பட்ட கர்மப் பயன்கள்
    அத்யாகி³நாம் ப்ரேத்ய ப⁴வதி = தியாகிகளல்லாதோருக்கு இறந்த பின்னர் ஏற்படுகிறது
    ஸந்ந்யாஸிநாம் து க்வசித் ந =சந்நியாசிகளுக்கு எங்கும் பயன் கிடைப்பதில்லை
    வேண்டப்படாதது, வேண்டப்படுவது, இரண்டும் கலப்பானது என மூன்று வகைப்பட்ட கர்மப் பயன்களைத் தியாகிகளல்லாதோர் இறந்த பின்னர் எய்துகின்றனர். சந்நியாசிகளுக்கு எங்கும் பயன் கிடைப்பதில்லை.


    पञ्चैतानि महाबाहो कारणानि निबोध मे ।
    सांख्ये कृतान्ते प्रोक्तानि सिद्धये सर्वकर्मणाम् ॥१८- १३॥


    பஞ்சைதாநி மஹாபா³ஹோ காரணாநி நிபோ³த⁴ மே |
    ஸாங்க்²யே க்ருதாந்தே ப்ரோக்தாநி ஸித்³த⁴யே ஸர்வகர்மணாம் || 18- 13||


    மஹாபா³ஹோ = பெருந்தோளாய்
    க்ருதாந்தே ஸாங்க்²யே = கர்மங்களின் முடிவிற்கான வழியை கூறும் சாங்கிய சாஸ்திரத்தில்
    ஸர்வகர்மணாம் ஸித்³த⁴யே = எல்லாச் செயல்களும் நிறைவேறுதற்கு
    ஏதாநி பஞ்சகாரணாநி ப்ரோக்தாநி = ஐந்தாகக் காரணங்கள் கூறப்பட்டன
    மே நிபோ³த⁴ = (அவற்றை) என்னிடம் கேட்டுணர்
    எல்லாச் செயல்களும் நிறைவேறுதற்குரிய காரணங்கள் சாங்கிய சாஸ்திரத்தில் ஐந்தாகக் கூறப்பட்டன. அவற்றை என்னிடம் கேட்டுணர், பெருந்தோளாய்.


    अधिष्ठानं तथा कर्ता करणं च पृथग्विधम् ।
    विविधाश्च पृथक्चेष्टा दैवं चैवात्र पञ्चमम् ॥१८- १४॥


    அதி⁴ஷ்டா²நம் ததா² கர்தா கரணம் ச ப்ருத²க்³வித⁴ம் |
    விவிதா⁴ஸ்²ச ப்ருத²க்சேஷ்டா தை³வம் சைவாத்ர பஞ்சமம் || 18- 14||


    அத்ர அதி⁴ஷ்டா²நம் ச = அவை இடமும்
    கர்தா ச = செயலை செய்பவன்
    ப்ருத²க்³வித⁴ம் கரணம் ச = பலவிதக் கரணங்கள்
    விவிதா⁴: ப்ருத²க் சேஷ்டா ச = வெவ்வேறு வகைப்பட்ட செயல் முறைகள்
    தை³வம் ச பஞ்சமம் = இயற்கை என ஐந்து (காரணங்கள்)
    அவை இடம், கர்த்தா, பலவிதக் கரணங்கள், வெவ்வேறு வகைப்பட்ட செயல் முறைகள், இயற்கை என ஐந்து.


    शरीरवाङ्*मनोभिर्यत्कर्म प्रारभते नरः ।
    न्याय्यं वा विपरीतं वा पञ्चैते तस्य हेतवः ॥१८- १५॥


    ஸ²ரீரவாங்*மநோபி⁴ர்யத்கர்ம ப்ராரப⁴தே நர: |
    ந்யாய்யம் வா விபரீதம் வா பஞ்சைதே தஸ்ய ஹேதவ: || 18- 15||


    நர: ஸ²ரீர வாக் *மநோபி⁴: = மனிதன் உடம்பாலும் வாக்காலும் மனத்தாலும்
    யத் கர்ம ப்ராரப⁴தே = எந்தச் செயலைத் தொடங்கினாலும்
    ந்யாய்யம் வா விபரீதம் வா = அது நியாயமாயினும் விபரீதமாயினும்
    தஸ்ய ஏதே பஞ்ச ஹேதவ: = அதற்கு இந்த ஐந்துமே காரணங்கள்
    மனிதன் உடம்பாலும் வாக்காலும் மனத்தாலும் எந்தச் செயலைத் தொடங்கினாலும், அது நியாயமாயினும் விபரீதமாயினும், இவ்வைந்துமே அச்செயலின் ஏதுக்களாம்.


    तत्रैवं सति कर्तारमात्मानं केवलं तु यः ।
    पश्यत्यकृतबुद्धित्वान्न स पश्यति दुर्मतिः ॥१८- १६॥


    தத்ரைவம் ஸதி கர்தாரமாத்மாநம் கேவலம் து ய: |
    பஸ்²யத்யக்ருதபு³த்³தி⁴த்வாந்ந ஸ பஸ்²யதி து³ர்மதி: || 18- 16||


    து ஏவம் ஸதி = இங்ஙனமிருக்கையில்
    ய: அக்ருதபு³த்³தி⁴த்வாத் = எவன் புத்திக் குறைவால் ஆத்மாவை
    தத்ர கேவலம் ஆத்மாநம் = அங்கே (கர்மங்களைச் செய்வதில்) தனிப்பொருளாகிய ஆத்மாவை
    கர்தாரம் பஸ்²யதி = கர்த்தாவாக (தொழில் செய்பவனாக) காணுகிறானோ
    ஸ து³ர்மதி: ந பஸ்²யதி = அந்த மூடன் காட்சியற்றவனேயாவான்
    இங்ஙனமிருக்கையில், தனிப்பொருளாகிய ஆத்மாவைத் தொழில் செய்வோனாக எவன் புத்திக் குறைவால் காணுகிறானோ அந்த மூடன் காட்சியற்றவனேயாவான்.


    यस्य नाहंकृतो भावो बुद्धिर्यस्य न लिप्यते ।
    हत्वापि स इमाँल्लोकान्न हन्ति न निबध्यते ॥१८- १७॥


    யஸ்ய நாஹங்க்ருதோ பா⁴வோ பு³த்³தி⁴ர்யஸ்ய ந லிப்யதே |
    ஹத்வாபி ஸ இமாம்ல்லோகாந்ந ஹந்தி ந நிப³த்⁴யதே || 18- 17||


    யஸ்ய அஹங்க்ருதோ பா⁴வ ந = எவருடைய (உள்ளத்தில்) நான் செய்கிறேன் என்னும் எண்ணம் இல்லையோ
    யஸ்ய பு³த்³தி⁴ ந லிப்யதே = பற்றுதல்கள் அற்று மதியுடையவன்
    ஸ: இமாந் லோகாந் = அவன் இந்த உலகங்கள் அனைத்தையும்
    ஹத்வா அபி ந ஹந்தி ந நிப³த்⁴யதே = கொன்ற போதிலும் கொலையாளி யாகான்; பாவத்தில் கட்டுப்பட மாட்டான்
    ‘நான்’ எனுங் கொள்கை தீர்ந்தான், பற்றுதல்கள் அற்று மதியுடையான், அவன் இவ்வுலகத்தாரை யெல்லாங் கொன்ற போதிலும் கொலையாளி யாகான், கட்டுப்பட மாட்டான்.
    Cont’d
Working...
X