Announcement

Collapse
No announcement yet.

கீதை – பதினெட்டாவது அத்தியாயம் 18[2]

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கீதை – பதினெட்டாவது அத்தியாயம் 18[2]

    மோக்ஷ ஸந்நியாச யோகம்
    Cont’d


    ज्ञानं ज्ञेयं परिज्ञाता त्रिविधा कर्मचोदना ।
    करणं कर्म कर्तेति त्रिविधः कर्मसंग्रहः ॥१८- १८॥


    ஜ்ஞாநம் ஜ்ஞேயம் பரிஜ்ஞாதா த்ரிவிதா⁴ கர்மசோத³நா |
    கரணம் கர்ம கர்தேதி த்ரிவித⁴: கர்மஸங்க்³ரஹ: || 18- 18||


    ஜ்ஞாநம் ஜ்ஞேயம் பரிஜ்ஞாதா = அறிவு, அறியப்படுபொருள், அறிவோன்
    த்ரிவிதா⁴ கர்மசோத³நா = இம்மூன்றும் செயல்களைத் தூண்டுவன
    கர்தா கரணம் கர்ம இதி த்ரிவித⁴: = கர்த்தா, கருவி, செய்கை என்று மூன்று விதங்களும்
    கர்மஸங்க்³ரஹ: = கர்மத்தின் அமைப்பு ஆகும்
    அறிவு, அறியப்படுபொருள், அறிவோன், என இம்மூன்றும் செயல்களைத் தூண்டுவன. கருவி, செய்கை, கர்த்தா எனக் கர்மத்தின் அமைப்பு மூன்று பகுதிப்பட்டது.


    ज्ञानं कर्म च कर्ता च त्रिधैव गुणभेदतः ।
    प्रोच्यते गुणसंख्याने यथावच्छृणु तान्यपि ॥१८- १९॥


    ஜ்ஞாநம் கர்ம ச கர்தா ச த்ரிதை⁴வ கு³ணபே⁴த³த: |
    ப்ரோச்யதே கு³ணஸங்க்²யாநே யதா²வச்ச்²ருணு தாந்யபி || 18- 19||


    கு³ணஸங்க்²யாநே = குணங்களை யெண்ணுமிடத்தே
    ஜ்ஞாநம் கர்ம ச கர்தா ச = ஞானம், கர்மம், கர்த்தா
    கு³ணபே⁴த³த: = இவை குண பேதங்களால்
    த்ரிதா⁴ ஏவ = மும்மூன்று வகைப்படும் என்று
    ப்ரோச்யதே = சொல்லப் படுகின்றன
    தாநி அபி யதா²வத் ச்²ருணு = அவற்றையும் உள்ளபடி கேள்
    குணங்களை யெண்ணுமிடத்தே, ஞானம், கர்மம், கர்த்தா இவை பேதங்களால் மும்மூன்று வகைப்படும். அவற்றையும் உள்ளபடி கேள்.


    सर्वभूतेषु येनैकं भावमव्ययमीक्षते ।
    अविभक्तं विभक्तेषु तज्ज्ञानं विद्धि सात्त्विकम् ॥१८- २०॥


    ஸர்வபூ⁴தேஷு யேநைகம் பா⁴வமவ்யயமீக்ஷதே |
    அவிப⁴க்தம் விப⁴க்தேஷு தஜ்ஜ்ஞாநம் வித்³தி⁴ ஸாத்த்விகம் || 18- 20||


    ஏந விப⁴க்தேஷு = எந்த ஞானத்தினால் தனித்தனியான
    ஸர்வபூ⁴தேஷு = உயிர்கள் அனைத்திலும்
    அவிப⁴க்தம் அவ்யயம் ஏகம் பா⁴வம் = பிரிவற்ற நாசமற்ற ஒரே இயல்பை
    ஈக்ஷதே = காணுகிறானோ
    தத் ஜ்ஞாநம் ஸாத்த்விகம் வித்³தி⁴ = அந்த ஞானத்தை சாத்வீகமென்றறி
    பிரிவுபட்டு நிற்கும் எல்லா உயிர்களிலும் பிரிவற்ற நாசமற்ற ஒரே இயல்பைக் காணும் ஞானம் சாத்வீகமென்றறி.


    पृथक्त्वेन तु यज्ज्ञानं नानाभावान्पृथग्विधान् ।
    वेत्ति सर्वेषु भूतेषु तज्ज्ञानं विद्धि राजसम् ॥१८- २१॥


    ப்ருத²க்த்வேந து யஜ்ஜ்ஞாநம் நாநாபா⁴வாந்ப்ருத²க்³விதா⁴ந் |
    வேத்தி ஸர்வேஷு பூ⁴தேஷு தஜ்ஜ்ஞாநம் வித்³தி⁴ ராஜஸம் || 18- 21||


    து யத் ஜ்ஞாநம் = ஆனால் எந்த ஞானத்தின் மூலமாக
    ஸர்வேஷு பூ⁴தேஷு = உயிர்களனைத்திலும்
    ப்ருத²க்³விதா⁴ந் நாநாபா⁴வாந் = வெவ்வேறு வகைப்பட்ட பல இயல்புகள்
    ப்ருத²க்த்வேந வேத்தி = பிரித்துக் காணும்
    தத் ஜ்ஞாநம் ராஜஸம் வித்³தி⁴ = அந்த ஞானம் ராஜசம் என்றுணர்
    உயிர்களனைத்திலும் வெவ்வேறு வகைப்பட்ட பல இயல்புகள் இருப்பதாகப் பிரித்துக் காணும் ஞானம் ராஜசமென்றுணர்.


    यत्तु कृत्स्नवदेकस्मिन्कार्ये सक्तमहैतुकम् ।
    अतत्त्वार्थवदल्पं च तत्तामसमुदाहृतम् ॥१८- २२॥


    யத்து க்ருத்ஸ்நவதே³கஸ்மிந்கார்யே ஸக்தமஹைதுகம் |
    அதத்த்வார்த²வத³ல்பம் ச தத்தாமஸமுதா³ஹ்ருதம் || 18- 22||


    து யத் ஏகஸ்மிந் கார்யே = ஆனால் எந்த ஞானம் யாதேனும் ஒற்றைக் காரியத்தை
    க்ருத்ஸ்நவத் ஸக்தம் = அனைத்துமாகக் கருதிப் பற்றுத லெய்துவதும்
    தத் அஹைதுகம் = யுக்திக்கு பொருந்தாததும்
    அதத்த்வார்த²வத் = உண்மையில் அறியாததும்
    அல்பம் ச = அற்பத் தன்மை உடையதும்
    தாமஸம் உதா³ஹ்ருதம் = தாமசமென்று கூறப்படும்
    காரணங் கருதாமல், யாதேனும் ஒற்றைக் காரியத்தை அனைத்துமாகக் கருதிப் பற்றுத லெய்துவதும், உண்மையிலறியாததும், அற்பத் தன்மையுடையதும் ஆகிய ஞானம் தாமசமென்று கூறப்படும்.


    नियतं सङ्गरहितमरागद्वेषतः कृतम् ।
    अफलप्रेप्सुना कर्म यत्तत्सात्त्विकमुच्यते ॥१८- २३॥


    நியதம் ஸங்க³ரஹிதமராக³த்³வேஷத: க்ருதம் |
    அப²லப்ரேப்ஸுநா கர்ம யத்தத்ஸாத்த்விகமுச்யதே || 18- 23||


    யத் கர்ம = எந்த செய்கை
    நியதம் ஸங்க³ரஹிதம் = விதிப்படி பற்றுதல் இன்றி
    அப²லப்ரேப்ஸுநா = பயனைக் கருதாமல்
    அராக³த்³வேஷத: = விருப்பு வெறுப்பின்றி
    க்ருதம் = செய்யப் படுகிறதோ
    தத் ஸாத்த்விகம் உச்யதே = அது சாத்விக மெனப்படும்
    பயன்களை வேண்டாதா னொருவன் பற்றுதலின்றி, விருப்பு வெறுப்பின்றிச் செய்யும் விதி தழுவிய செய்கை, சாத்விக மெனப்படும்.


    यत्तु कामेप्सुना कर्म साहंकारेण वा पुनः ।
    क्रियते बहुलायासं तद्राजसमुदाहृतम् ॥१८- २४॥


    யத்து காமேப்ஸுநா கர்ம ஸாஹங்காரேண வா புந: |
    க்ரியதே ப³ஹுலாயாஸம் தத்³ராஜஸமுதா³ஹ்ருதம் || 18- 24||


    து யத் கர்ம = ஆனால் எந்த செயல்
    புந: காமேப்ஸுநா = விருப்பங்களுக்கு வசப்பட்டவனால்
    வா ஸாஹங்காரேண = அல்லது அகங்காரமுடையவனால்
    ப³ஹுலாயாஸம் = செய்யப்படும் மிகுந்த ஆயசத்துக்கிடமான செய்கை
    தத்³ ராஜஸம் உதா³ஹ்ருதம் = அது ராஜசம் எனப்படும்
    விருப்பங்களுக்கு வசப்பட்டவனால் அல்லது அகங்காரமுடையவனால் செய்யப்படும் மிகுந்த ஆயசத்துக்கிடமான செய்கை ராஜசமெனப்படும்.


    अनुबन्धं क्षयं हिंसामनवेक्ष्य च पौरुषम् ।
    मोहादारभ्यते कर्म यत्तत्तामसमुच्यते ॥१८- २५॥


    அநுப³ந்த⁴ம் க்ஷயம் ஹிம்ஸாமநவேக்ஷ்ய ச பௌருஷம் |
    மோஹாதா³ரப்⁴யதே கர்ம யத்தத்தாமஸமுச்யதே || 18- 25||


    யத் கர்ம அநுப³ந்த⁴ம் = எந்தச் செய்கையின் பின்விளைவையும்
    க்ஷயம் = அதனால் பிறருக்கு நேரக்கூடிய நாசத்தையும்
    ஹிம்ஸாம் = துன்பத்தையும்
    பௌருஷம் ச = செய்வானது திறமையையும்
    அநவேக்ஷ்ய = கருதாமல்
    மோஹாத் ஆரப்⁴யதே = அறிவின்மையால் தொடங்கப்படுகிறதோ
    தத் தாமஸம் உச்யதே =தாமச மெனப்படும்
    செய்கையின் பின்விளைவையும், அதனால் பிறருக்கு நேரக்கூடிய நாசத்தையும், துன்பத்தையும், செய்வானது திறமையையும், கருதாமல், அறிவின்மையால் தொடங்கப்படுங் கர்மம் தாமச மெனப்படும்.


    मुक्तसङ्गोऽनहंवादी धृत्युत्साहसमन्वितः ।
    सिद्ध्यसिद्ध्योर्निर्विकारः कर्ता सात्त्विक उच्यते ॥१८- २६॥


    முக்தஸங்கோ³ऽநஹம்வாதீ³ த்⁴ருத்யுத்ஸாஹஸமந்வித: |
    ஸித்³த்⁴யஸித்³த்⁴யோர்நிர்விகார: கர்தா ஸாத்த்விக உச்யதே || 18- 26||
    முக்தஸங்கோ³ = பற்றற்றவனாகவும்
    அநஹம்வாதீ³ = நான் என்னும் எண்ணம் இல்லாதவனாகவும்
    த்⁴ருத்யுத்ஸாஹஸமந்வித: = உறுதியும், ஊக்கமும் உடையவனாகவும்
    ஸித்³தி⁴ அஸித்³த்⁴யோ நிர்விகார: = வெற்றி தோல்வியில் வேறுபாடற்றவனாகவும்
    கர்தா ஸாத்த்விக உச்யதே = உள்ள கர்த்தாவை (செயல் ஆற்றுபவனை) சாத்வீகன் (ஒளியியல்பு) உடையவன் என்பர்.
    நசைக ளற்றான், நானென்ப தற்றான்,
    உறுதியுங் களிதரும் ஊக்கமு முடையான்,
    வெற்றி தோல்வியில் வேறுபா டற்றான்-
    இங்ஙன மாகித் தொழில்க ளியற்றுவோன்
    ஒளியியல் புடையா னென்ப.


    रागी कर्मफलप्रेप्सुर्लुब्धो हिंसात्मकोऽशुचिः ।
    हर्षशोकान्वितः कर्ता राजसः परिकीर्तितः ॥१८- २७॥


    ராகீ³ கர்மப²லப்ரேப்ஸுர்லுப்³தோ⁴ ஹிம்ஸாத்மகோऽஸு²சி: |
    ஹர்ஷஸோ²காந்வித: கர்தா ராஜஸ: பரிகீர்தித: || 18- 27||


    ராகீ³ = வேட்கையுடையோன்
    கர்மப²லப்ரேப்ஸு = செய்கைப் பயன்களை விரும்புவோன்
    லுப்³த⁴: = லோபி (பேராசை உள்ளவன்)
    ஹிம்ஸாத்மக: = இடர் செய்வோன்
    அஸு²சி: = தூய்மை யற்றோன்
    ஹர்ஷஸோ²காந்வித: = இன்பதுன்பத்தால் பாதிக்கப் படுபவன்
    கர்தா ராஜஸ: பரிகீர்தித: = இவ் வண்ணமாகித் தொழில் செய்வோன் ரஜோ குணத்தானென்பர்
    வேட்கையுடையோன், செய்கைப் பயன்களை விரும்புவோன், லோபி, இடர் செய்வோன், தூய்மை யற்றோன், களிக்குந் துயிலுக்கும் வசப்பட்டோன் – இவ் வண்ணமாகித் தொழில் செய்வோன் ரஜோ குணத்தானென்பர்.


    अयुक्तः प्राकृतः स्तब्धः शठो नैष्कृतिकोऽलसः ।
    विषादी दीर्घसूत्री च कर्ता तामस उच्यते ॥१८- २८॥


    அயுக்த: ப்ராக்ருத: ஸ்தப்³த⁴: ஸ²டோ² நைஷ்க்ருதிகோऽலஸ: |
    விஷாதீ³ தீ³ர்க⁴ஸூத்ரீ ச கர்தா தாமஸ உச்யதே || 18- 28||


    அயுக்த: = கட்டுப் படுத்தாத மன நிலை உடையவன்
    ப்ராக்ருத: = அறிவு முதிர்ச்சி அடையாதவன்
    ஸ்தப்³த⁴: = கர்வமுடையவன்
    ஸ²ட²: = வஞ்சகம் உடையவன்
    நைஷ்க்ருதிக: = பிறருடைய வாழ்க்கையை கெடுப்பவன்
    விஷாதீ³ = கவலை கொண்டவன்
    அலஸ: = சோம்பேறியும்
    தீ³ர்க⁴ஸூத்ரீ ச = காலத்தை நீடித்துக்கொண்டே போவோன்
    கர்தா தாமஸ உச்யதே = இவ்வண்ணமாகித் தொழில் செய்வோன் தமோ குணமுடையா னெனப்படுவான்
    யோக நிலை பெறாதோன், அநாகரிகன், முரடன், வஞ்சகன், பொறாமையுடையோன், சோம்பேறி, ஏக்கம் பிடித்தவன், காலத்தை நீடித்துக்கொண்டே போவோன், இவ்வண்ணமாகித் தொழில் செய்வோன் தமோ குணமுடையா னெனப்படுவான்.


    बुद्धेर्भेदं धृतेश्चैव गुणतस्त्रिविधं शृणु ।
    प्रोच्यमानमशेषेण पृथक्त्वेन धनंजय ॥१८- २९॥


    பு³த்³தே⁴ர்பே⁴த³ம் த்⁴ருதேஸ்²சைவ கு³ணதஸ்த்ரிவித⁴ம் ஸ்²ருணு |
    ப்ரோச்யமாநமஸே²ஷேண ப்ருத²க்த்வேந த⁴நஞ்ஜய || 18- 29||


    த⁴நஞ்ஜய = தனஞ்ஜயா
    கு³ணத: ஏவ = குண வகையால்
    பு³த்³தே⁴: த்⁴ருதே: ச = புத்திக்கும் மன உறுதிக்கும்
    த்ரிவித⁴ம் பே⁴த³ம் = மூன்று விதமான வேறுபாட்டை
    அஸே²ஷேண ப்ருத²க்த்வேந = முழுமையாகவும் பகுத்தும்
    ப்ரோச்யமாநம் ஸ்²ருணு = உரைக்கிறேன், கேள்
    குண வகையால் மூன்று விதமாகிய புத்தியின் வேற்றுமைகளையும், மிச்சமின்றிப் பகுத்துரைக்கிறேன்; தனஞ்ஜயா, கேள்.


    प्रवृत्तिं च निवृत्तिं च कार्याकार्ये भयाभये ।
    बन्धं मोक्षं च या वेत्ति बुद्धिः सा पार्थ सात्त्विकी ॥१८- ३०॥


    ப்ரவ்ருத்திம் ச நிவ்ருத்திம் ச கார்யாகார்யே ப⁴யாப⁴யே |
    ப³ந்த⁴ம் மோக்ஷம் ச யா வேத்தி பு³த்³தி⁴: ஸா பார்த² ஸாத்த்விகீ || 18- 30||


    பார்த² = அர்ஜுனா
    யா ப்ரவ்ருத்திம் நிவ்ருத்திம் ச = எது ப்ரவ்ருத்தி மார்க்கம், எது நிவ்ருத்தி மார்க்கம்
    கார்யாகார்யே ப⁴யாப⁴யே ச = செய்யத்தக்கது யாது, தகாதது யாது, அச்சமெது, அஞ்சாமை யெது
    ப³ந்த⁴ம் மோக்ஷம் ச வேத்தி = பந்தமெது, விடுதலை யெது என்பனவற்றைப் பகுத்தறியும்
    ஸா பு³த்³தி⁴: ஸாத்த்விகீ = அந்த புத்தியே சாத்விக புத்தியாம்
    தொழிலெது, ஒழிவு யாது, செய்யத்தக்கது யாது, தகாதது யாது, அச்சமெது, அஞ்சாமை யெது, பந்தமெது, விடுதலை யெது என்பனவற்றைப் பகுத்தறியும் புத்தியே, பார்த்தா, சாத்விக புத்தியாம்.


    यया धर्ममधर्मं च कार्यं चाकार्यमेव च ।
    अयथावत्प्रजानाति बुद्धिः सा पार्थ राजसी ॥१८- ३१॥


    யயா த⁴ர்மமத⁴ர்மம் ச கார்யம் சாகார்யமேவ ச |
    அயதா²வத்ப்ரஜாநாதி பு³த்³தி⁴: ஸா பார்த² ராஜஸீ || 18- 31||


    பார்த² = பார்த்தா.
    யயா த⁴ர்மம் அத⁴ர்மம் ச = எந்த புத்தியினால் தர்மத்தையும் அதர்மத்தையும்
    கார்யம் அகார்யம் ஏவ ச = செய்யத் தக்கது, தகாதது
    அயதா²வத் ப்ரஜாநாதி = உள்ளபடி அறியாத
    ஸா பு³த்³தி⁴: ராஜஸீ = புத்தி ராஜச மெனப்படும்
    தர்மத்தையும் அதர்மத்தையும் காரியத்தையும் அகாரியத்தையும் உள்ளபடி அறியாத புத்தி ராஜச மெனப்படும், பார்த்தா.


    अधर्मं धर्ममिति या मन्यते तमसावृता ।
    सर्वार्थान्विपरीतांश्च बुद्धिः सा पार्थ तामसी ॥१८- ३२॥


    அத⁴ர்மம் த⁴ர்மமிதி யா மந்யதே தமஸாவ்ருதா |
    ஸர்வார்தா²ந்விபரீதாம்ஸ்²ச பு³த்³தி⁴: ஸா பார்த² தாமஸீ || 18- 32||


    பார்த² = பார்த்தா
    யா தமஸா ஆவ்ருதா = எந்த புத்தி இருளால் கவரப்பட்டதாய்
    அத⁴ர்மம் த⁴ர்மம் இதி ச = அதர்மத்தை தர்மமாகக் கருதுவதும்
    ஸர்வார்தா²ந் விபரீதாந் ச = எல்லாப் பொருள்களையும் நேருக்கு மாறாக
    மந்யதே = நினைக்கிறதோ
    ஸா பு³த்³தி⁴: தாமஸீ = அது புத்தி தாமச புத்தியாம்
    பார்த்தா, இருளால் கவரப்பட்டதாய், அதர்மத்தை தர்மமாகக் கருதுவதும் எல்லாப் பொருள்களையும் நேருக்கு மாறாகக் காண்பதும் ஆகிய புத்தி தாமச புத்தியாம்.


    धृत्या यया धारयते मनःप्राणेन्द्रियक्रियाः ।
    योगेनाव्यभिचारिण्या धृतिः सा पार्थ सात्त्विकी ॥१८- ३३॥


    த்⁴ருத்யா யயா தா⁴ரயதே மந:ப்ராணேந்த்³ரியக்ரியா: |
    யோகே³நாவ்யபி⁴சாரிண்யா த்⁴ருதி: ஸா பார்த² ஸாத்த்விகீ || 18- 33||


    பார்த² = பார்த்தா
    யயா அவ்யபி⁴சாரிண்யா த்⁴ருத்யா: = எந்த பிறழ்ச்சி இல்லாத உறுதியால்
    யோகே³ந = யோகத்தின் மூலம்
    மந: ப்ராண இந்த்³ரியக்ரியா: = மனம், உயிர், புலன்கள் இவற்றின் செயல்களை
    தா⁴ரயதே = நிலை நிறுத்துகிறானோ
    ஸா த்⁴ருதி: ஸாத்த்விகீ = அந்த உறுதியே சாத்வீகமாவது
    மனம், உயிர், புலன்கள் இவற்றின் செயல்களைப் பிறழ்ச்சியில்லாத யோகத்துடன் தரிக்க வல்லதாகிய மன உறுதியே சாத்வீகமாவது, பார்த்தா.


    यया तु धर्मकामार्थान्धृत्या धारयतेऽर्जुन ।
    प्रसङ्गेन फलाकाङ्क्षी धृतिः सा पार्थ राजसी ॥१८- ३४॥


    யயா து த⁴ர்மகாமார்தா²ந்த்⁴ருத்யா தா⁴ரயதேऽர்ஜுந |
    ப்ரஸங்கே³ந ப²லாகாங்க்ஷீ த்⁴ருதி: ஸா பார்த² ராஜஸீ || 18- 34||


    து பார்த² = ஆனால் பார்த்தா
    அர்ஜுந = அர்ஜுனா
    ப²லாகாங்க்ஷீ = பயன்களை விரும்புவோன்
    யயா த்⁴ருத்யா = எந்த உறுதியினால்
    ப்ரஸங்கே³ந = மிகுந்த பற்றோடு
    த⁴ர்மகாமார்தா²ந் தா⁴ரயதே = அறம் பொருளின்பங்களை அடைவதிலே உறுதியாக இருக்கிறானோ
    ஸா த்⁴ருதி: ராஜஸீ = அந்த உறுதி ராஜசம் ஆகும்
    பார்த்தா, பற்றுத லுடையோனாய்ப் பயன்களை விரும்புவோன் அறம் பொருளின்பங்களைப் பேணுவதில் செலுத்தும் உறுதி ராஜச உறுதியாகும்.


    यया स्वप्नं भयं शोकं विषादं मदमेव च ।
    न विमुञ्चति दुर्मेधा धृतिः सा पार्थ तामसी ॥१८- ३५॥


    யயா ஸ்வப்நம் ப⁴யம் ஸோ²கம் விஷாத³ம் மத³மேவ ச |
    ந விமுஞ்சதி து³ர்மேதா⁴ த்⁴ருதி: ஸா பார்த² தாமஸீ || 18- 35||


    யயா = எந்த (மன உறுதியினால்)
    ஸ்வப்நம் ப⁴யம் ஸோ²கம் = உறக்கத்தையும் அச்சத்தையும், துயரத்தையும்
    விஷாத³ம் = ஏக்கத்தையும்
    மத³ம் = செருக்கையும்
    ந விமுஞ்சதி = விடமுடியவில்லையோ
    பார்த² த்⁴ருதி: ஸா தாமஸீ = பார்த்தா, அந்த உறுதி தமோ குணத்தைச் சார்ந்தது
    பார்த்தா, உறக்கத்தையும் அச்சத்தையும், துயரத்தையும் ஏக்கத்தையும், மதத்தையும் மாற்றத் திறமையில்லாத மூட உறுதி தமோ குணத்தைச் சார்ந்தது.


    सुखं त्विदानीं त्रिविधं शृणु मे भरतर्षभ ।
    अभ्यासाद्रमते यत्र दुःखान्तं च निगच्छति ॥१८- ३६॥


    ஸுக²ம் த்விதா³நீம் த்ரிவித⁴ம் ஸ்²ருணு மே ப⁴ரதர்ஷப⁴ |
    அப்⁴யாஸாத்³ரமதே யத்ர து³:கா²ந்தம் ச நிக³ச்ச²தி || 18- 36||


    ப⁴ரதர்ஷப⁴ = பாரதக் காளையே!
    இதா³நீம் த்ரிவித⁴ம் ஸுக²ம் = இப்போது மூன்று விதமாகிய இன்பங்களை
    மே ஸ்²ருணு = என்னிடமிருந்து கேள்
    யத்ர அப்⁴யாஸாத் ரமதே = எதனிலே ஒருவன் பயிலப் பயில உவகை மிகுதியுறப் பெறுவானோ
    து³:கா²ந்தம் ச நிக³ச்ச²தி = எதனில் துக்க நாச மெய்துவானோ
    பாரதக் காளையே! இப்போது மூன்று விதமாகிய இன்பங்களைச் சொல்லுகிறேன், கேள். எதனிலே ஒருவன் பயிலப் பயில உவகை மிகுதியுறப் பெறுவானோ, எதனில் துக்க நாச மெய்துவானோ,


    यत्तदग्रे विषमिव परिणामेऽमृतोपमम् ।
    तत्सुखं सात्त्विकं प्रोक्तमात्मबुद्धिप्रसादजम् ॥१८- ३७॥


    யத்தத³க்³ரே விஷமிவ பரிணாமேऽம்ருதோபமம் |
    தத்ஸுக²ம் ஸாத்த்விகம் ப்ரோக்தமாத்மபு³த்³தி⁴ப்ரஸாத³ஜம் || 18- 37||


    யத் அக்³ரே விஷம் இவ = எது தொடக்கத்தில் விஷத்தை ஒத்ததாய்
    தத் பரிணாமே அம்ருதோபமம் = அது விளைவில் அமிர்தத்துக்கு ஒப்பாக மாறுகிறதோ
    தத் ஸுக²ம் ஸாத்த்விகம் ப்ரோக்தம் = அந்த இன்பமே சாத்விகம் எனக் கூறப் படுகிறது
    தத் ஆத்ம பு³த்³தி⁴ ப்ரஸாத³ஜம் = அது தன் (பரமாத்மாவைப் பற்றிய தெளிந்த) அறிவில் பிறப்பது
    எது தொடக்கத்தில் விஷத்தை யொத்ததாய், விளைவில் அமிர்தமொப்ப மாறுவதோ, அந்த இன்பமே சாத்விகமாகும்; அஃது தன் மதியின் விளக்கத்திலே பிறப்பது.
    Cont’d

    information

    Information

    க் டைப்செய்துவிட்டு ஷிப்டை அழுத்திக்கொண்டு பேக்ஸ்லாஷ் (ஷ) இருமுறை டைப் செய்தால் க்ஷ வரும்.



    Last edited by bmbcAdmin; 27-12-14, 09:46. Reason: எழுத்துப்பிழை சுட்டிக்காட்ட
Working...
X