Announcement

Collapse
No announcement yet.

கீதை – பதினெட்டாவது அத்தியாயம் 18[3]

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கீதை – பதினெட்டாவது அத்தியாயம் 18[3]

    மோஷ சந்நியாச யோகம்
    Cont’d
    विषयेन्द्रियसंयोगाद्यत्तदग्रेऽमृतोपमम् ।
    परिणामे विषमिव तत्सुखं राजसं स्मृतम् ॥१८- ३८॥
    விஷயேந்த்³ரிய ஸம்யோகா³த்³ யத் தத³க்³ரேऽம்ருதோபமம் |
    பரிணாமே விஷமிவ தத்ஸுக²ம் ராஜஸம் ஸ்ம்ருதம் || 18- 38||
    யத் விஷயேந்த்³ரிய ஸம்யோகா³த் = எது விஷயங்களிலே புலன்களைப் பொருத்துவதனால்
    அக்³ரே அம்ருதோபமம் = தொடக்கத்தில் அமுதைப் போலிருந்து
    பரிணாமே விஷமிவ = விளைவில் நஞ்சு போன்றதாய் முடியுமோ
    தத்ஸுக²ம் ராஜஸம் ஸ்ம்ருதம் = அந்த இன்பம் ராஜசம் எனப்படும்
    விஷயங்களிலே புலன்களைப் பொருத்துவதனால் தொடக்கத்தில் அமுதைப் போலிருந்து விளைவில் நஞ்சு போன்றதாய் முடியும் இன்பம் ராஜசமெனப்படும்.
    ________________________________________
    यदग्रे चानुबन्धे च सुखं मोहनमात्मनः ।
    निद्रालस्यप्रमादोत्थं तत्तामसमुदाहृतम् ॥१८- ३९॥
    யத³க்³ரே சாநுப³ந்தே⁴ ச ஸுக²ம் மோஹநமாத்மந: |
    நித்³ராலஸ்யப்ரமாதோ³த்த²ம் தத்தாமஸமுதா³ஹ்ருதம் || 18- 39||
    யத் ஸுக²ம் அக்³ரே ச அநுப³ந்தே⁴ ச = எந்த சுகம் தொடக்கத்திலும் இறுதியிலும்
    ஆத்மந: மோஹநம் = ஆத்மாவுக்கு மயக்கம் விளைவிப்பதாய்
    நித்³ரா ஆலஸ்ய ப்ரமாத³: உத்த²ம் = உறக்கத்தினின்றும் சோம்பலினின்றும் தவறுதலின்றும் பிறக்கும்
    தத் தாமஸம் உதா³ஹ்ருதம் = அது தாமசமென்று கருதப்படும்
    தொடக்கத்திலும் இறுதியிலும் ஒருங்கே ஆத்மாவுக்கு மயக்கம் விளைவிப்பதாய், உறக்கத்தினின்றும் சோம்பலினின்றும் தவறுதலின்றும் பிறக்கும் இன்பம் தாமசமென்று கருதப்படும்.
    ________________________________________
    न तदस्ति पृथिव्यां वा दिवि देवेषु वा पुनः ।
    सत्त्वं प्रकृतिजैर्मुक्तं यदेभिः स्यात्त्रिभिर्गुणैः ॥१८- ४०॥
    ந தத³ஸ்தி ப்ருதி²வ்யாம் வா தி³வி தே³வேஷு வா புந: |
    ஸத்த்வம் ப்ரக்ருதிஜைர்முக்தம் யதே³பி⁴: ஸ்யாத்த்ரிபி⁴ர்கு³ணை: || 18- 40||
    ப்ரக்ருதிஜை: = இயற்கையில் தோன்றும்
    ஏபி⁴: த்ரிபி⁴: கு³ணை: = இம்மூன்று குணங்களினின்றும்
    முக்தம் = விடுபட்ட
    யத் ஸத்த்வம் ஸ்யாத் = எந்த உயிர் இருக்குமோ
    தத் ப்ருதி²வ்யாம் வா = அது மண்ணுலகத்திலோ
    தி³வி தே³வேஷு வா = வானுலகத்தில் தேவருள்ளேயொ
    புந: ந அஸ்தி = வேறு இடங்களிலோ இல்லை.
    இயற்கையில் தோன்றும் இம்மூன்று குணங்களினின்றும் விடுபட்ட உயிர் மண்ணுலகத்திலுமில்லை; வானுலகத்தில் தேவருள்ளேயுமில்லை.
    ब्राह्मणक्षत्रियविशां शूद्राणां च परन्तप ।
    कर्माणि प्रविभक्तानि स्वभावप्रभवैर्गुणैः ॥१८- ४१॥
    ப்³ராஹ்மணக்ஷத்ரியவிஸா²ம் ஸூ²த்³ராணாம் ச பரந்தப |
    கர்மாணி ப்ரவிப⁴க்தாநி ஸ்வபா⁴வப்ரப⁴வைர்கு³ணை: || 18- 41||
    பரந்தப = எதிரிகளை வாட்டுபவனே
    ப்³ராஹ்மண க்ஷத்ரியவிஸா²ம் ஸூ²த்³ராணாம் ச = பிராம்மணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் இவர்களுடைய
    கர்மாணி = தொழில்கள்
    ஸ்வபா⁴வப்ரப⁴வை: கு³ணை: = அவரவரின் இயல்பில் விளையும் குணங்களின்படி
    ப்ரவிப⁴க்தாநி = வகுப்புற்றனவாம்
    பரந்தபா! பிராம்மணர், க்ஷத்திரியர், வைசியர், சூத்திரர் இவர்களுடைய தொழில்கள் அவரவரின் இயல்பில் விளையும் குணங்களின்படி வகுப்புற்றனவாம்.
    ________________________________________
    शमो दमस्तपः शौचं क्षान्तिरार्जवमेव च ।
    ज्ञानं विज्ञानमास्तिक्यं ब्रह्मकर्म स्वभावजम् ॥१८- ४२॥
    ஸ²மோ த³மஸ்தப: ஸௌ²சம் க்ஷாந்திரார்ஜவமேவ ச |
    ஜ்ஞாநம் விஜ்ஞாநமாஸ்திக்யம் ப்³ரஹ்மகர்ம ஸ்வபா⁴வஜம் || 18- 42||
    ஸ²மோ த³ம: தப: = மன அடக்கமும், புலனடக்கமும், தவமும்
    ஸௌ²சம் = தூய்மை,
    க்ஷாந்தி = பொறுமை,
    ஆர்ஜவம் = நேர்மை
    ஆஸ்திக்யம் = ஆத்திகம்
    ஜ்ஞாநம் விஜ்ஞாநம் ஏவ = ஞானம், அனுபவம் மூலம் உணர்தலும்
    ஸ்வபா⁴வஜம் ப்³ரஹ்ம கர்ம = இயல்பிலே தோன்றும் பிராம்மண கர்மங்களாகும்
    அகக் கரணத்தை யடக்குதல், புறக் கரணத்தை யடக்குதல், தவம், தூய்மை, பொறுமை, நேர்மை, ஞானம், கல்வி, ஆத்திகம் இவை இயல்பிலே தோன்றும் பிராம்மண கர்மங்களாகும்.
    ________________________________________
    शौर्यं तेजो धृतिर्दाक्ष्यं युद्धे चाप्यपलायनम् ।
    दानमीश्वरभावश्च क्षात्रं कर्म स्वभावजम् ॥१८- ४३॥
    ஸௌ²ர்யம் தேஜோ த்⁴ருதிர்தா³க்ஷ்யம் யுத்³தே⁴ சாப்யபலாயநம் |
    தா³நமீஸ்²வரபா⁴வஸ்²ச க்ஷாத்ரம் கர்ம ஸ்வபா⁴வஜம் || 18- 43||
    ஸௌ²ர்யம் = சூரத் தன்மை,
    தேஜ: = ஒளி,
    த்⁴ருதி: = உறுதி,
    தா³க்ஷ்யம் ச = திறமை,
    யுத்³தே⁴ அபி அபலாயநம் = போரில் புறங்காட்டாமை,
    தா³நம் ஈஸ்²வரபா⁴வ: ச = ஈகை, இறைமை (ஆளும் தன்மை)
    ஸ்வபா⁴வஜம் க்ஷாத்ரம் கர்ம = இயற்கையிலே தோன்றும் க்ஷத்திரிய கர்மங்களாகும்
    சூரத் தன்மை, ஒளி, உறுதி, திறமை, போரில் புறங்காட்டாமை, ஈகை, இறைமை – இவை இயற்கையிலே தோன்றும் க்ஷத்திரிய கர்மங்களாகும்.
    ________________________________________
    कृषिगौरक्ष्यवाणिज्यं वैश्यकर्म स्वभावजम् ।
    परिचर्यात्मकं कर्म शूद्रस्यापि स्वभावजम् ॥१८- ४४॥
    க்ருஷிகௌ³ரக்ஷ்யவாணிஜ்யம் வைஸ்²யகர்ம ஸ்வபா⁴வஜம் |
    பரிசர்யாத்மகம் கர்ம ஸூ²த்³ரஸ்யாபி ஸ்வபா⁴வஜம் || 18- 44||
    க்ருஷி கௌ³ரக்ஷ்ய வாணிஜ்யம் = உழவு, பசுக்காத்தல், வணிகம்
    வைஸ்²யகர்ம ஸ்வபா⁴வஜம் = இவை இயற்கையிலே பிறக்கும் வைசியக் கர்மங்களாம்
    பரிசர்யாத்மகம் கர்ம = மக்கள் அனைவருக்கும் தொண்டு புரிதல்
    ஸூ²த்³ரஸ்ய அபி = சூத்திரனுக்கு
    ஸ்வபா⁴வஜம் = அவனியற்கையாய் ஏற்பட்ட தொழில்
    உழவு, பசுக்காத்தல், வணிகம் இவை இயற்கையிலே பிறக்கும் வைசியக் கர்மங்களாம். தொண்டு புரிதல் சூத்திரனுக்கு அவனியற்கையாய் ஏற்பட்ட தொழில்.
    ________________________________________
    स्वे स्वे कर्मण्यभिरतः संसिद्धिं लभते नरः ।
    स्वकर्मनिरतः सिद्धिं यथा विन्दति तच्छृणु ॥१८- ४५॥
    ஸ்வே ஸ்வே கர்மண்யபி⁴ரத: ஸம்ஸித்³தி⁴ம் லப⁴தே நர: |
    ஸ்வகர்மநிரத: ஸித்³தி⁴ம் யதா² விந்த³தி தச்ச்²ருணு || 18- 45||
    ஸ்வே ஸ்வே கர்மணி = தனக்குத் தானே உரிய கர்மத்தில்
    அபி⁴ரத: நர: = மகிழ்ச்சியுறும் மனிதன்
    ஸம்ஸித்³தி⁴ம் லப⁴தே = ஈடேற்றம் பெறுகிறான்
    ஸ்வகர்மநிரத: = தனக்குரிய தொழிலில் இன்புறுவோன்
    யதா² ஸித்³தி⁴ம் விந்த³தி = எங்ஙனம் சித்தியடைகிறான் என்று
    தத் ஸ்²ருணு = அதைக் கேள்
    தனக்குத் தானே உரிய கர்மத்தில் மகிழ்ச்சியுறும் மனிதன் ஈடேற்றம் பெறுகிறான். தனக்குரிய தொழிலில் இன்புறுவோன் எங்ஙனம் சித்தியடைகிறானென்பது சொல்லுகிறேன் கேள்.
    ________________________________________
    यतः प्रवृत्तिर्भूतानां येन सर्वमिदं ततम् ।
    स्वकर्मणा तमभ्यर्च्य सिद्धिं विन्दति मानवः ॥१८- ४६॥
    யத: ப்ரவ்ருத்திர்பூ⁴தாநாம் யேந ஸர்வமித³ம் ததம் |
    ஸ்வகர்மணா தமப்⁴யர்ச்ய ஸித்³தி⁴ம் விந்த³தி மாநவ: || 18- 46||
    யத: பூ⁴தாநாம் ப்ரவ்ருத்தி = எதிலிருந்து உயிர்கள் உண்டாயினவோ
    யேந இத³ம் ஸர்வம் ததம் = எதனால் அனைத்தும் வியாபிக்கப் பட்டிருக்கிறதோ
    தம் = அந்த பரமாத்மாவை
    ஸ்வகர்மணா அப்⁴யர்ச்ய = தனக்குரிய கர்மத்தால் பூஜை செய்யும்
    மாநவ: விந்த³தி = மனிதன் ஈடேறுகிறான்
    உயிர்களுக்கெலாம் பிறப்பிடமாய், இவ்வையக மனைத்திலும் நிறைந்திருக்கும் கடவுளைத் தனக்குரிய கர்மத்தால் பூஜை செய்யும் மனிதன் ஈடேறுகிறான்.
    ________________________________________
    श्रेयान्स्वधर्मो विगुणः परधर्मात्स्वनुष्ठितात् ।
    स्वभावनियतं कर्म कुर्वन्नाप्नोति किल्बिषम् ॥१८- ४७॥
    ஸ்²ரேயாந்ஸ்வத⁴ர்மோ விகு³ண: பரத⁴ர்மாத்ஸ்வநுஷ்டி²தாத் |
    ஸ்வபா⁴வநியதம் கர்ம குர்வந்நாப்நோதி கில்பி³ஷம் || 18- 47||
    ஸ்வநுஷ்டி²தாத் பரத⁴ர்மாத் = பிறர்க்குரிய தர்மத்தை நன்கு செய்வதைக் காட்டிலும்
    விகு³ண: ஸ்வத⁴ர்ம: ஸ்²ரேயாந் = தனக்குரிய தர்மத்தை குணமின்றிச் செய்தலும் நன்று
    ஸ்வபா⁴வ நியதம் குர்வந் = இயற்கையி லேற்பட்ட தொழிலை
    கில்பி³ஷம் ந ஆப்நோதி = பாவமடைய மாட்டான்
    பிறர்க்குரிய தர்மத்தை நன்கு செய்வதைக் காட்டிலும் தனக்குரிய தர்மத்தை குணமின்றிச் செய்தலும் நன்று. இயற்கையி லேற்பட்ட தொழிலைச் செய்வதனால் ஒருவன் பாவமடைய மாட்டான்.
    ________________________________________
    सहजं कर्म कौन्तेय सदोषमपि न त्यजेत् ।
    सर्वारम्भा हि दोषेण धूमेनाग्निरिवावृताः ॥१८- ४८॥
    ஸஹஜம் கர்ம கௌந்தேய ஸதோ³ஷமபி ந த்யஜேத் |
    ஸர்வாரம்பா⁴ ஹி தோ³ஷேண தூ⁴மேநாக்³நிரிவாவ்ருதா: || 18- 48||
    கௌந்தேய = குந்தி மகனே
    ஸஹஜம் கர்ம ஸதோ³ஷம் அபி = இயல்பான தொழில் குறையுடையதாயினும்
    ந த்யஜேத் = கைவிடலாகாது
    ஹி தூ⁴மேந அக்³நி: இவ = ஏனெனில் புகையால் சூழப் பட்ட தீ போல
    ஸர்வாரம்பா⁴ = எல்லா தொழில்களிலும்
    தோ³ஷேண ஆவ்ருதா: = சூழ்ந்தே நிற்கின்றன
    குந்தி மகனே, இயல்பான தொழில் குறையுடையதாயினும், அதை கைவிடலாகாது. எல்லாத் தொழில்களையும் குறைகள் சூழ்ந்தே நிற்கின்றன.
    ________________________________________
    असक्तबुद्धिः सर्वत्र जितात्मा विगतस्पृहः ।
    नैष्कर्म्यसिद्धिं परमां संन्यासेनाधिगच्छति ॥१८- ४९॥
    அஸக்தபு³த்³தி⁴: ஸர்வத்ர ஜிதாத்மா விக³தஸ்ப்ருஹ: |
    நைஷ்கர்ம்யஸித்³தி⁴ம் பரமாம் ஸந்ந்யாஸேநாதி⁴க³ச்ச²தி || 18- 49||
    அஸக்தபு³த்³தி⁴: = பற்றற்ற மதியுடன்
    விக³தஸ்ப்ருஹ: ஸந்ந்யாஸேந = விருப்பம் தவிர்த்தவனாக
    ஜிதாத்மா = தன்னை வென்றவன்
    ஸர்வத்ர = எங்கும்
    பரமாம் நைஷ்கர்ம்யஸித்³தி⁴ம் = செயல் இல்லாத பெரிதும் உயர்ந்த வெற்றியை (கர்மத்தளையிலிருந்து விடுபடும் வெற்றி)
    அதி⁴க³ச்ச²தி = அடைகிறான்.
    யாங்கணும் வீழ்விலா மதியுடையோனாய், தன்னை வென்று விருப்பந் தவிர்ந்து, பின்னர் செயலிலாப் பெரிதுயர்ந்த வெற்றியைத் துறவினால் எய்துவான்.
    ________________________________________
    सिद्धिं प्राप्तो यथा ब्रह्म तथाप्नोति निबोध मे ।
    समासेनैव कौन्तेय निष्ठा ज्ञानस्य या परा ॥१८- ५०॥
    ஸித்³தி⁴ம் ப்ராப்தோ யதா² ப்³ரஹ்ம ததா²ப்நோதி நிபோ³த⁴ மே |
    ஸமாஸேநைவ கௌந்தேய நிஷ்டா² ஜ்ஞாநஸ்ய யா பரா || 18- 50||
    ஜ்ஞாநஸ்ய பரா நிஷ்டா² = ஞானத்தினுடைய உயர்ந்த நிலை
    யா = எதுவோ
    ஸித்³தி⁴ம் ப்ராப்த: = (அந்த) நிலையை அடைந்த மனிதன்
    யதா² ப்³ரஹ்ம ஆப்நோதி = எங்ஙனம் பிரம்மத்தை அடைகிறானோ
    ததா² = அந்த நிலையை
    ஸமாஸேந ஏவ = சுருக்கமாக
    மே நிபோ³த⁴ = என்னிடமிருந்து தெரிந்து கொள்
    கௌந்தேய = குந்தி மைந்தனே!
    சித்தியடைந்தவன் எங்ஙனம் பிரம்மத்தில் கலப்பதாகிய மிகச் சிறந்த ஞான நிலை யெய்துவா னென்பதைக் கூறுகிறேன், கேள்.
    ________________________________________
    बुद्ध्या विशुद्ध्या युक्तो धृत्यात्मानं नियम्य च ।
    शब्दादीन्विषयांस्त्यक्त्वा रागद्वेषौ व्युदस्य च ॥१८- ५१॥
    பு³த்³த்⁴யா விஸு²த்³த்⁴யா யுக்தோ த்⁴ருத்யாத்மாநம் நியம்ய ச |
    ஸ²ப்³தா³தீ³ந்விஷயாம்ஸ்த்யக்த்வா ராக³த்³வேஷௌ வ்யுத³ஸ்ய ச || 18- 51||
    விஸு²த்³த்⁴யா பு³த்³த்⁴யா யுக்த: = தூய்மை பெற்ற புத்தியுடையோனாய்
    த்⁴ருத்யா ஆத்மாநம் நியம்ய ச = உறுதியால் தன்னைக் கட்டுப்படுத்தி
    ஸ²ப்³தா³தீ³ந் விஷயாந் த்யக்த்வா = ஒலி முதலிய புலன் நுகர் பொருட்களை துறந்து
    ராக³ த்³வேஷௌ வ்யுத³ஸ்ய ச = விருப்பு வெறுப்புகளை எறிந்துவிட்டு
    தூய்மை பெற்ற புத்தியுடையோனாய், உறுதியால் தன்னைக் கட்டுப்படுத்தி, ஒலி முதலிய விஷயங்களைத் துறந்து, விருப்பு வெறுப்புகளை எறிந்துவிட்டு,
    ________________________________________
    विविक्तसेवी लघ्वाशी यतवाक्कायमानसः ।
    ध्यानयोगपरो नित्यं वैराग्यं समुपाश्रितः ॥१८- ५२॥
    விவிக்தஸேவீ லக்⁴வாஸீ² யதவாக்காயமாநஸ: |
    த்⁴யாநயோக³பரோ நித்யம் வைராக்³யம் ஸமுபாஸ்²ரித: || 18- 52||
    விவிக்தஸேவீ = தனி இடங்களை நாடுவோனாய்
    லக்⁴வாஸீ² = எளிய உணவு உண்பவனாக
    யதவாக்காயமாநஸ: = வாக்கு மனம் இவற்றை வசப்படுத்தி
    நித்யம் த்⁴யாநயோக³பர: = தியான யோகத்தில் ஈடுபட்டிருந்து
    வைராக்³யம் ஸமுபாஸ்²ரித: = பற்றின்மையை நன்கு பற்றியவனாய்
    தனி இடங்களை நாடுவோனாய், ஆசைகள் குன்றி, வாக்கையும் உடம்பையும் மனத்தையும் வென்று, தியான யோகத்தில் ஈடுபட்டு, அப்போதும் பற்றின்மையை நன்கு பற்றியவனாய்,
    ________________________________________
    अहंकारं बलं दर्पं कामं क्रोधं परिग्रहम् ।
    विमुच्य निर्ममः शान्तो ब्रह्मभूयाय कल्पते ॥१८- ५३॥
    அஹங்காரம் ப³லம் த³ர்பம் காமம் க்ரோத⁴ம் பரிக்³ரஹம் |
    விமுச்ய நிர்மம: ஸா²ந்தோ ப்³ரஹ்மபூ⁴யாய கல்பதே || 18- 53||
    அஹங்காரம் ப³லம் த³ர்பம் காமம் க்ரோத⁴ம் பரிக்³ரஹம் = அகங்காரம், வலிமை, செருக்கு, காமம், சினம், இரத்தல்
    விமுச்ய = விடுத்து
    நிர்மம: ஸா²ந்த: = மமகாரம் நீங்கி சாந்தநிலை கொண்டவன்
    ப்³ரஹ்மபூ⁴யாய கல்பதே = பிரம்மமாகத் தகுவான்
    அகங்காரம், வலிமை, செருக்கு, காமம், சினம், இரத்தல் இவற்றை விட்டும் மமகாரம் நீங்கி சாந்தநிலை கொண்டவன் பிரம்மமாகத் தகுவான்.
    ________________________________________
    ब्रह्मभूतः प्रसन्नात्मा न शोचति न काङ्क्षति ।
    समः सर्वेषु भूतेषु मद्भक्तिं लभते पराम् ॥१८- ५४॥
    ப்³ரஹ்மபூ⁴த: ப்ரஸந்நாத்மா ந ஸோ²சதி ந காங்க்ஷதி |
    ஸம: ஸர்வேஷு பூ⁴தேஷு மத்³ப⁴க்திம் லப⁴தே பராம் || 18- 54||
    ப்³ரஹ்மபூ⁴த: ப்ரஸந்நாத்மா = பிரம்ம நிலை பெற்றோன், ஆனந்த முடையோன்
    ந ஸோ²சதி ந காங்க்ஷதி = துயரற்றோன், விருப்பற்றோன்
    ஸர்வேஷு பூ⁴தேஷு ஸம: = எல்லா உயிர்களையும் சமமாக நினைப்போன்
    பராம் மத்³ப⁴க்திம் லப⁴தே = உயர்ந்ததாகிய என் பக்தியை அடைகிறான்
    பிரம்ம நிலை பெற்றோன், ஆனந்த முடையோன், துயரற்றோன், விருப்பற்றோன், எல்லா உயிர்களையும் சமமாக நினைப்போன், உயர்ந்ததாகிய என் பக்தியை அடைகிறான்.
    ________________________________________
    भक्त्या मामभिजानाति यावान्यश्चास्मि तत्त्वतः ।
    ततो मां तत्त्वतो ज्ञात्वा विशते तदनन्तरम् ॥१८- ५५॥
    ப⁴க்த்யா மாமபி⁴ஜாநாதி யாவாந்யஸ்²சாஸ்மி தத்த்வத: |
    ததோ மாம் தத்த்வதோ ஜ்ஞாத்வா விஸ²தே தத³நந்தரம் || 18- 55||
    மாம் ய: ச = என்னை யார் எனவும்
    யாவாந் அஸ்மி ச = எத்தன்மை உடையவன் என்றும்
    ப⁴க்த்யா தத்த்வத: அபி⁴ஜாநாதி = பக்தியாலேயே உள்ளபடி அறிகிறான்
    தத: மாம் தத்த்வத: ஜ்ஞாத்வா = என்னை உள்ளபடி அறிந்து கொண்டபின்னர்
    தத³நந்தரம் விஸ²தே = ‘தத்’ (அது) எனப்படும் பிரம்மத்தில் புகுவான்
    யான் எவ்வளவுடையேன், யாவன் என என்னை யருவன் உள்ளபடி பக்தியாலேயே அறிகிறான். என்னை உள்ளபடி அறிந்து கொண்டபின்னர் ‘தத்’ (அது) எனப்படும் பிரம்மத்தில் புகுவான்.
    ________________________________________
    सर्वकर्माण्यपि सदा कुर्वाणो मद्व्यपाश्रयः ।
    मत्प्रसादादवाप्नोति शाश्वतं पदमव्ययम् ॥१८- ५६॥
    ஸர்வகர்மாண்யபி ஸதா³ குர்வாணோ மத்³வ்யபாஸ்²ரய: |
    மத்ப்ரஸாதா³த³வாப்நோதி ஸா²ஸ்²வதம் பத³மவ்யயம் || 18- 56||
    மத்³வ்யபாஸ்²ரய: = என்னையே சார்பாகக் கொண்டோன்
    ஸர்வ கர்மாணி = எல்லாத் தொழில்களையும்
    ஸதா³ குர்வாண: அபி = எப்போதும் செய்து கொண்டிருந்தாலும்
    மத்ப்ரஸாதா³த் = எனதருளால்
    ஸா²ஸ்²வதம் அவ்யயம் பத³ம் = அழிவற்ற நித்தியப் பதவியை
    அவாப்நோதி = எய்துகிறான்
    எல்லாத் தொழில்களையும் எப்போதும் செய்து கொண்டிருந்தாலும், என்னையே சார்பாகக் கொண்டோன் எனதருளால் அழிவற்ற நித்தியப் பதவியை எய்துகிறான்.
    ________________________________________
    चेतसा सर्वकर्माणि मयि संन्यस्य मत्परः ।
    बुद्धियोगमुपाश्रित्य मच्चित्तः सततं भव ॥१८- ५७॥
    சேதஸா ஸர்வகர்மாணி மயி ஸந்ந்யஸ்ய மத்பர: |
    பு³த்³தி⁴யோக³முபாஸ்²ரித்ய மச்சித்த: ஸததம் ப⁴வ || 18- 57||
    ஸர்வகர்மாணி = செயல்களை யெல்லாம்
    சேதஸா = அறிவினால்
    மயி ஸந்ந்யஸ்ய = எனக்கெனத் துறந்துவிட்டு
    பு³த்³தி⁴யோக³ம் உபாஸ்²ரித்ய = புத்தி யோகத்தில் சார்புற்று
    மத்பர: = என்னிடத்தே ஈடுபட்டு
    ஸததம் மத் சித்த: ப⁴வ = எப்போதும் என்னைச் சித்தத்தில் கொண்டு இரு
    அறிவினால் செயல்களை யெல்லாம் எனக்கெனத் துறந்துவிட்டு, என்னிடத்தே ஈடுபட்டு, புத்தி யோகத்தில் சார்புற்று, எப்போதும் என்னைச் சித்தத்தில் கொண்டு இரு.


    Cont’d
Working...
X