Announcement

Collapse
No announcement yet.

கீதை – பதினெட்டாவது அத்தியாயம் 18[4]

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • கீதை – பதினெட்டாவது அத்தியாயம் 18[4]

    மோஷ சந்நியாச யோகம்
    Cont’d
    मच्चित्तः सर्वदुर्गाणि मत्प्रसादात्तरिष्यसि ।
    अथ चेत्त्वमहंकारान्न श्रोष्यसि विनङ्क्ष्यसि ॥१८- ५८॥
    மச்சித்த: ஸர்வது³ர்கா³ணி மத்ப்ரஸாதா³த்தரிஷ்யஸி |
    அத² சேத்த்வமஹங்காராந்ந ஸ்²ரோஷ்யஸி விநங்க்ஷ்யஸி || 18- 58||
    மத் சித்த: = என்னைச் சித்தத்தில் கொண்டிருப்போனாய்
    ஸர்வது³ர்கா³ணி = எல்லாத் தடைகளையும்
    மத்ப்ரஸாதா³த் = எனதருளால்
    தரிஷ்யஸி = கடந்து செல்வாய்
    அத² அஹங்காராத் த்வம் ந ஸ்²ரோஷ்யஸி சேத் = அன்றி நீ அகங்காரத்தால் இதனைக் கேளாது விடுவாயாயின்
    விநங்க்ஷ்யஸி = அழிந்து போவாய்
    என்னைச் சித்தத்தில் கொண்டிருப்போனாய் எல்லாத் தடைகளையும் எனதருளால் கடந்து செல்வாய். அன்றி நீ அகங்காரத்தால் இதனைக் கேளாது விடுவாயாயின், பெரிய நாசத்தை அடைவாய்.
    ________________________________________
    यदहंकारमाश्रित्य न योत्स्य इति मन्यसे ।
    मिथ्यैष व्यवसायस्ते प्रकृतिस्त्वां नियोक्ष्यति ॥१८- ५९॥
    யத³ஹங்காரமாஸ்²ரித்ய ந யோத்ஸ்ய இதி மந்யஸே |
    மித்²யைஷ வ்யவஸாயஸ்தே ப்ரக்ருதிஸ்த்வாம் நியோக்ஷ்யதி || 18- 59||
    யத் அஹங்காரம் ஆஸ்²ரித்ய = எந்த அகங்காரத்தின் வசப்பட்டு
    ந யோத்ஸ்யே இதி மந்யஸே = நான் யுத்தம் செய்ய மாட்டேன் என்று நினைக்கிறாயோ
    தே ஏஷ: வ்யவஸாய: மித்²யா = இந்தத் தீர்மானம் பொய்யானது
    ப்ரக்ருதி: த்வாம் நியோக்ஷ்யதி = (ஏனெனில்) இயற்கை உன்னை வலுவில் ஈடுபடுத்தும்
    நீ அகங்காரத்திலகப்பட்டு “இனிப் போர் புரியேன்” என்று துணிவாயாயின், நினது துணிவு பொய்மைப்பட்டுப்போம். இயற்கை உன்னைப் போரிற் பிணிக்கும்.
    ________________________________________
    स्वभावजेन कौन्तेय निबद्धः स्वेन कर्मणा ।
    कर्तुं नेच्छसि यन्मोहात्करिष्यस्यवशोऽपि तत् ॥१८- ६०॥
    ஸ்வபா⁴வஜேந கௌந்தேய நிப³த்³த⁴: ஸ்வேந கர்மணா |
    கர்தும் நேச்ச²ஸி யந்மோஹாத்கரிஷ்யஸ்யவஸோ²ऽபி தத் || 18- 60||
    கௌந்தேய = குந்தியின் மகனே!
    யத் மோஹாத் கர்தும் ந இச்ச²ஸி = எந்த செயலை மயக்கத்தால் அதனைச் செய்ய விரும்பாயெனினும்
    தத் அபி ஸ்வேந ஸ்வபா⁴வஜேந கர்மணா = அதையும் நீ உன்னுடைய இயல்பான கர்ம வினையால்
    நிப³த்³த⁴: = கட்டப் பட்டு
    அவஸ²: கரிஷ்யஸி = தன் வசமின்றியேனும் அதைச் செய்யலாவாய்
    இயற்கையில் தோன்றிய ஸ்வகர்மத்தால் கட்டுண்டிருக்கும் நீ, மயக்கத்தால் அதனைச் செய்ய விரும்பாயெனினும், தன் வசமின்றியேனும் அதைச் செய்யலாவாய்.
    ________________________________________
    ईश्वरः सर्वभूतानां हृद्देशेऽर्जुन तिष्ठति ।
    भ्रामयन्सर्वभूतानि यन्त्रारूढानि मायया ॥१८- ६१॥
    ஈஸ்²வர: ஸர்வபூ⁴தாநாம் ஹ்ருத்³தே³ஸே²ऽர்ஜுந திஷ்ட²தி |
    ப்⁴ராமயந்ஸர்வபூ⁴தாநி யந்த்ராரூடா⁴நி மாயயா || 18- 61||
    அர்ஜுந = அர்ஜுனா
    யந்த்ராரூடா⁴நி ஸர்வபூ⁴தாநி = உடல் என்கிற எந்திரத்தில் ஏற்றி அனைத்து உயிர்களையும்
    ஈஸ்²வர: = ஈசுவரன்
    மாயயா ப்⁴ராமயந் = மாயையினால் சுழற்றிக் கொண்டு
    ஸர்வபூ⁴தாநாம் ஹ்ருத்³தே³ஸே² = எல்லா உயிர்களின் உள்ளத்தில்
    திஷ்ட²தி = நிற்கிறான்
    அர்ஜுனா, எல்லா உயிர்களுக்கும் ஈசன் உள்ளத்தில் நிற்கிறான். மாயையால் அவன் எல்லா உயிர்களையும் சக்கரத்திலேற்றிச் சுழற்றுகிறான்.
    ________________________________________
    तमेव शरणं गच्छ सर्वभावेन भारत ।
    तत्प्रसादात्परां शान्तिं स्थानं प्राप्स्यसि शाश्वतम् ॥१८- ६२॥
    தமேவ ஸ²ரணம் க³ச்ச² ஸர்வபா⁴வேந பா⁴ரத |
    தத்ப்ரஸாதா³த்பராம் ஸா²ந்திம் ஸ்தா²நம் ப்ராப்ஸ்யஸி ஸா²ஸ்²வதம் || 18- 62||
    பா⁴ரத = பாரதா
    ஸர்வபா⁴வேந = எல்லா வடிவங்களிலும்
    தம் ஏவ ஸ²ரணம் க³ச்ச² = அவனையே சரணெய்து!
    தத்ப்ரஸாதா³த் = அவனருளால்
    பராம் ஸா²ந்திம் ஸா²ஸ்²வதம் ஸ்தா²நம் = பரம சாந்தியாகிய நித்திய ஸ்தானத்தை
    ப்ராப்ஸ்யஸி = அடைவாய்
    அர்ஜுனா, எல்லா வடிவங்களிலும் அவனையே சரணெய்து, அவனருளால் பரம சாந்தியாகிய நித்திய ஸ்தானத்தை எய்துவாய்.
    ________________________________________
    इति ते ज्ञानमाख्यातं गुह्याद्गुह्यतरं मया ।
    विमृश्यैतदशेषेण यथेच्छसि तथा कुरु ॥१८- ६३॥
    இதி தே ஜ்ஞாநமாக்²யாதம் கு³ஹ்யாத்³கு³ஹ்யதரம் மயா |
    விம்ருஸ்²யைதத³ஸே²ஷேண யதே²ச்ச²ஸி ததா² குரு || 18- 63||
    இதி கு³ஹ்யாத் கு³ஹ்யதரம் ஜ்ஞாநம் = இங்ஙனம் ரகசியத்திலும் ரகசியமாகிய ஞானத்தை
    மயா தே ஆக்²யாதம் = என்னால் உனக்கு கூறப்பட்டது
    ஏதத் அஸே²ஷேண விம்ருஸ்²ய = இதனை முற்றிலும் ஆராய்ச்சி செய்து
    யதா² இச்ச²ஸி ததா² குரு = எப்படி இஷ்டமோ அப்படிச் செய்
    இங்ஙனம் ரகசியத்திலும் ரகசியமாகிய ஞானத்தை உனக்குரைத்தேன். இதனை முற்றிலும் ஆராய்ச்சி செய்து எப்படி இஷ்டமோ அப்படிச் செய்.
    ________________________________________
    सर्वगुह्यतमं भूयः शृणु मे परमं वचः ।
    इष्टोऽसि मे दृढमिति ततो वक्ष्यामि ते हितम् ॥१८- ६४॥
    ஸர்வகு³ஹ்யதமம் பூ⁴ய: ஸ்²ருணு மே பரமம் வச: |
    இஷ்டோऽஸி மே த்³ருட⁴மிதி ததோ வக்ஷ்யாமி தே ஹிதம் || 18- 64||
    ஸர்வகு³ஹ்யதமம் = எல்லாவற்றிலும் ஆழ்ந்த ரகசியமாகிய
    மே பரமம் வச: = என்னுடைய பரம வசனத்தை
    பூ⁴ய: ஸ்²ருணு = மீட்டுமொருமுறை கேள்
    மே த்³ருட⁴ம் இஷ்ட: அஸி = நீ திடமான நண்பன்
    தத: ஹிதம் இதி தே வக்ஷ்யாமி = ஆதலால் நல்லது என்று உனக்கு சொல்லுகிறேன்
    மீட்டுமொருமுறை எல்லாவற்றிலும் ஆழ்ந்த ரகசியமாகிய எனது பரம வசனத்தைக் கேள். நீ திடமான நண்பன். ஆதலால் உனக்கு ஹிதத்தைச் சொல்லுகிறேன்.
    ________________________________________
    मन्मना भव मद्भक्तो मद्याजी मां नमस्कुरु ।
    मामेवैष्यसि सत्यं ते प्रतिजाने प्रियोऽसि मे ॥१८- ६५॥
    மந்மநா ப⁴வ மத்³ப⁴க்தோ மத்³யாஜீ மாம் நமஸ்குரு |
    மாமேவைஷ்யஸி ஸத்யம் தே ப்ரதிஜாநே ப்ரியோऽஸி மே || 18- 65||
    மந்மநா ப⁴வ = உன் மனதை எனக்காக்குக
    மத்³ப⁴க்த: = என் தொண்டனாகுக
    மத்³யாஜீ = எனக்கென வேள்விசெய்க
    மாம் நமஸ்குரு = என்னையே வணங்குக
    மாமேவ ஏஷ்யஸி = என்னையெய்துவாய்
    ஸத்யம் தே ப்ரதிஜாநே = உண்மை இஃதே, உனக்கிது சபதமுரைக்கிறேன்
    மே ப்ரிய: அஸி = எனக்கு இனியவனாக இருக்கிறாய்.
    உன் மனதை எனக்காக்குக. என் தொண்டனாகுக. எனக்கென வேள்விசெய்க. என்னையே வணங்குக. என்னையெய்துவாய், உண்மை இஃதே, உனக்கிது சபதமுரைக்கிறேன், நீ எனக்கினியை.
    ________________________________________
    सर्वधर्मान्परित्यज्य मामेकं शरणं व्रज ।
    अहं त्वां सर्वपापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः ॥१८- ६६॥
    ஸர்வத⁴ர்மாந்பரித்யஜ்ய மாமேகம் ஸ²ரணம் வ்ரஜ |
    அஹம் த்வாம் ஸர்வபாபேப்⁴யோ மோக்ஷயிஷ்யாமி மா ஸு²ச: || 18- 66||
    ஸர்வத⁴ர்மாந் பரித்யஜ்ய = எல்லா அறங்களையும் விட்டு விட்டு
    மாம் ஏகம் ஸ²ரணம் வ்ரஜ = என்னையே சரண் புகு
    ஸர்வபாபேப்⁴ய: = எல்லாப் பாவங்களினின்றும்
    அஹம் த்வாம் மோக்ஷயிஷ்யாமி = நான் உன்னை விடுவிக்கிறேன்
    மா ஸு²ச: = துயரப்படாதே
    எல்லா அறங்களையும் விட்டு விட்டு என்னையே சரண் புகு. எல்லாப் பாவங்களினின்றும் நான் உன்னை விடுவிக்கிறேன். துயரப்படாதே.
    ________________________________________
    इदं ते नातपस्काय नाभक्ताय कदाचन ।
    न चाशुश्रूषवे वाच्यं न च मां योऽभ्यसूयति ॥१८- ६७॥
    இத³ம் தே நாதபஸ்காய நாப⁴க்தாய கதா³சந |
    ந சாஸு²ஸ்²ரூஷவே வாச்யம் ந ச மாம் யோऽப்⁴யஸூயதி || 18- 67||
    தே இத³ம் கதா³சந = உனக்கு (சொல்லப் பட்ட) இதை எப்போதும்
    அதபஸ்காய = தவமிலாதோனுக்கும்
    அப⁴க்தாய ச = பக்தியில்லாதோனுக்கும்
    அஸு²ஸ்²ரூஷவே = கேட்க விரும்பாதோனுக்கும்
    ய: மாம் அப்⁴யஸூயதி = என்பால் பொறாமையுடையோனுக்கும்
    ந வாச்யம் = சொல்லாதே
    இதை எப்போதும் தவமிலாதோனுக்கும், பக்தியில்லாதோனுக்கும், கேட்க விரும்பாதோனுக்கும் என்பால் பொறாமையுடையோனுக்கும் சொல்லாதே.
    ________________________________________
    य इमं परमं गुह्यं मद्भक्तेष्वभिधास्यति ।
    भक्तिं मयि परां कृत्वा मामेवैष्यत्यसंशयः ॥१८- ६८॥
    ய இமம் பரமம் கு³ஹ்யம் மத்³ப⁴க்தேஷ்வபி⁴தா⁴ஸ்யதி |
    ப⁴க்திம் மயி பராம் க்ருத்வா மாமேவைஷ்யத்யஸம்ஸ²ய: || 18- 68||
    ய: மயி பராம் ப⁴க்திம் க்ருத்வா = எவன் என்னிடம் உயர்ந்த பக்தி செலுத்தி
    இமம் பரமம் கு³ஹ்யம் = இந்தப் பரம ரகசியத்தை (கீதையை)
    மத்³ப⁴க்தேஷு ய: அபி⁴தா⁴ஸ்யதி = என் பக்தர்களிடையே சொல்லுவோனோ
    மாம் ஏவ ஏஷ்யதி = என்னையே எய்துவான்
    அஸம்ஸ²ய: = ஐயமில்லை
    இந்தப் பரம ரகசியத்தை என் பக்தர்களிடையே சொல்லுவோன், என்னிடத்தே பரம பக்தி செலுத்தி என்னையே எய்துவான். ஐயமில்லை.
    ________________________________________
    न च तस्मान्मनुष्येषु कश्चिन्मे प्रियकृत्तमः ।
    भविता न च मे तस्मादन्यः प्रियतरो भुवि ॥१८- ६९॥
    ந ச தஸ்மாந்மநுஷ்யேஷு கஸ்²சிந்மே ப்ரியக்ருத்தம: |
    ப⁴விதா ந ச மே தஸ்மாத³ந்ய: ப்ரியதரோ பு⁴வி || 18- 69||
    தஸ்மாத் மே ப்ரியக்ருத்தம = அவனைக் காட்டிலும் எனக்கினிமை செய்வோன்
    மநுஷ்யேஷு கஸ்²சித் ச ந = மானிடருள்ளே வேறில்லை
    பு⁴வி தஸ்மாத் மே = உலகத்தில் அவனைக் காட்டிலும் எனக்கு
    ப்ரியதர: அந்ய: = எனக்கு உகந்தவன் வேறு எவனும்
    ந ப⁴விதா = ஆக மாட்டான்
    மானிடருள்ளே அவனைக் காட்டிலும் எனக்கினிமை செய்வோன் வேறில்லை. உலகத்தில் அவனைக் காட்டிலும் எனக்கு உகந்தவன் வேறெவனுமாகான்.
    ________________________________________
    अध्येष्यते च य इमं धर्म्यं संवादमावयोः ।
    ज्ञानयज्ञेन तेनाहमिष्टः स्यामिति मे मतिः ॥१८- ७०॥
    அத்⁴யேஷ்யதே ச ய இமம் த⁴ர்ம்யம் ஸம்வாத³மாவயோ: |
    ஜ்ஞாநயஜ்ஞேந தேநாஹமிஷ்ட: ஸ்யாமிதி மே மதி: || 18- 70||
    இமம் ஆவயோ: த⁴ர்ம்யம் ஸம்வாத³ம் = நம்மிருவருள் நடந்த இந்த தர்மமயமான சம்பாஷணையை
    ய: அத்⁴யேஷ்யதே = எவன் கற்றறிகிறானோ
    தேந ச அஹம் = அவனாலும் நான்
    ஜ்ஞாநயஜ்ஞேந இஷ்ட: ஸ்யாம் = ஞான யக்ஞத்தால் திருப்தி பெற்றவனாவேன்
    இதி மே மதி: = இஃதென் கொள்கை
    நம்முடைய இந்தத் தர்மமயமான சம்பாஷணையை எவன் படிப்பானோ, அவன் செய்யும் அந்த ஞான யக்ஞத்தால் நான் திருப்தி பெறுவேன். இஃதென் கொள்கை.
    ________________________________________
    श्रद्धावाननसूयश्च शृणुयादपि यो नरः ।
    सोऽपि मुक्तः शुभाँल्लोकान्प्राप्नुयात्पुण्यकर्मणाम् ॥१८- ७१॥
    ஸ்²ரத்³தா⁴வாநநஸூயஸ்²ச ஸ்²ருணுயாத³பி யோ நர: |
    ஸோऽபி முக்த: ஸு²பா⁴ம்ல்லோகாந்ப்ராப்நுயாத்புண்யகர்மணாம் || 18- 71||
    ய: நர: = எந்த மனிதன்
    ஸ்²ரத்³தா⁴வாந் = நம்பிக்கை உடையவனாக
    அநஸூய: ச = பொறாமை போக்கியவனாக
    ஸ்²ருணுயாத் அபி = கேட்பது மட்டுமே செய்வானெனினும்
    ஸ: அபி முக்த: = அவனும் பாவங்களில் இருந்து விடுபட்டு
    புண்யகர்மணாம் ஸு²பா⁴ந் லோகாந் = புண்ணியம் செய்தவர்கள் அடையும் உலகங்களை
    ப்ராப்நுயாத் = எய்துவான்
    நம்புதல் கொண்டு, பொறாமை போக்கி இதனைக் கேட்பது மட்டுமே செய்வானெனினும், அவனும் விடுதலையடைவான், அப்பால் புண்ணியச் செயலினர் நண்ணு நல்லுலகங்களெய்துவான்.
    ________________________________________
    कच्चिदेतच्छ्रुतं पार्थ त्वयैकाग्रेण चेतसा ।
    कच्चिदज्ञानसंमोहः प्रनष्टस्ते धनंजय ॥१८- ७२॥
    கச்சிதே³தச்ச்²ருதம் பார்த² த்வயைகாக்³ரேண சேதஸா |
    கச்சித³ஜ்ஞாநஸம்மோஹ: ப்ரநஷ்டஸ்தே த⁴நஞ்ஜய || 18- 72||
    பார்த² = பார்த்தா
    ஏதத் த்வயா ஏகாக்³ரேண சேதஸா = உன்னால் ஒருமுகப் படுத்தப் பட்ட மனதோடு
    கச்சித் ஸ்²ருதம் = கேட்கப் பட்டதா?
    த⁴நஞ்ஜய! தே அஜ்ஞாநஸம்மோஹ: = தனஞ்ஜயா, உன் அஞ்ஞான மயக்கம்
    கச்சித் ப்ரநஷ்ட: = அழிந்து விட்டதா?
    பார்த்தா, சித்தத்தை ஏகாந்தமாக்கி இதை நீ கேட்டு வந்தனையா? தனஞ்ஜயா, உன் அஞ்ஞான மயக்கம் அழிந்ததா?
    ________________________________________
    अर्जुन उवाच
    नष्टो मोहः स्मृतिर्लब्धा त्वत्प्रसादान्मयाच्युत ।
    स्थितोऽस्मि गतसन्देहः करिष्ये वचनं तव ॥१८- ७३॥
    அர்ஜுந உவாச
    நஷ்டோ மோஹ: ஸ்ம்ருதிர்லப்³தா⁴ த்வத்ப்ரஸாதா³ந்மயாச்யுத |
    ஸ்தி²தோऽஸ்மி க³தஸந்தே³ஹ: கரிஷ்யே வசநம் தவ || 18- 73||
    அர்ஜுந உவாச அச்யுத! = அர்ஜுனன் சொல்லுகிறான், அச்சுதா
    த்வத்ப்ரஸாதா³த் மோஹ: நஷ்ட: = நின்னருளாலே மயக்கம் அழிந்தது
    மயா ஸ்ம்ருதி: லப்³தா⁴ = நான் நினைவு அடைந்தேன்
    க³தஸந்தே³ஹ: ஸ்தி²த: அஸ்மி = ஐயம் விலகி நிற்கிறேன்
    தவ வசநம் கரிஷ்யே = நீ செய்யச் சொல்வது செய்வேன்
    அர்ஜுனன் சொல்லுகிறான்: மயக்க மழிந்தது நின்னருளாலே, அச்சுதா, நான் நினைவு அடைந்தேன்; ஐயம் விலகி நிற்கிறேன்; நீ செய்யச் சொல்வது செய்வேன்.
    ________________________________________
    संजय उवाच
    इत्यहं वासुदेवस्य पार्थस्य च महात्मनः ।
    संवादमिममश्रौषमद्भुतं रोमहर्षणम् ॥१८- ७४॥
    ஸஞ்ஜய உவாச
    இத்யஹம் வாஸுதே³வஸ்ய பார்த²ஸ்ய ச மஹாத்மந: |
    ஸம்வாத³மிமமஸ்²ரௌஷமத்³பு⁴தம் ரோமஹர்ஷணம் || 18- 74||
    ஸஞ்ஜய உவாச = சஞ்சயன் சொல்லுகிறான்
    இதி அஹம் = இப்படி நான்
    வாஸுதே³வஸ்ய மஹாத்மந: பார்த²ஸ்ய ச = வாசுதேவனுக்கும் மகாத்மாவாகிய பார்த்தனுக்கும்
    இமம் அத்³பு⁴தம் ரோமஹர்ஷணம் = இந்த அற்புதமான, மயிர்கூச்செறியும்
    ஸம்வாத³ம் அஸ்²ரௌஷம் = உரையாடலைக் கேட்டேன்
    சஞ்சயன் சொல்லுகிறான்: இப்படி நான் வாசுதேவனுக்கும் மகாத்மாவாகிய பார்த்தனுக்கும் நிகழ்ந்த அற்புதமான – புளகந் தரக்கூடிய – அந்த சம்பாஷணையைக் கேட்டேன்.
    ________________________________________
    व्यासप्रसादाच्छ्रुतवानेतद्गुह्यमहं परम् ।
    योगं योगेश्वरात्कृष्णात्साक्षात्कथयतः स्वयम् ॥१८- ७५॥
    வ்யாஸப்ரஸாதா³ச்ச்²ருதவாநேதத்³கு³ஹ்யமஹம் பரம் |
    யோக³ம் யோகே³ஸ்²வராத்க்ருஷ்ணாத்ஸாக்ஷாத்கத²யத: ஸ்வயம் || 18- 75||
    யோகே³ஸ்²வராத் க்ருஷ்ணாத் = யோகக் கடவுளாகிய கண்ணனிடமிருந்து
    பரம் கு³ஹ்யம் = பரம ரகசியமான
    ஏதத் யோக³ம் ஸ்வயம் = இந்த யோகத்தை தான்
    ஸாக்ஷாத் கத²யத: = நேராகவே சொல்லும்போது
    அஹம் வ்யாஸப்ரஸாதா³த் = நான் வியாசனருளால்
    ஸ்²ருதவாந் = கேட்டேன்
    யோகக் கடவுளாகிய கண்ணன் இந்தப் பரம ரகசியமான யோகத்தைத் தான் நேராகவே சொல்லும்போது நான் அதை வியாசனருளால் கேட்டேன்.
    ________________________________________
    राजन्संस्मृत्य संस्मृत्य संवादमिममद्भुतम् ।
    केशवार्जुनयोः पुण्यं हृष्यामि च मुहुर्मुहुः ॥१८- ७६॥
    ராஜந்ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய ஸம்வாத³மிமமத்³பு⁴தம் |
    கேஸ²வார்ஜுநயோ: புண்யம் ஹ்ருஷ்யாமி ச முஹுர்முஹு: || 18- 76||
    ராஜந் = அரசனே
    கேஸ²வார்ஜுநயோ: = கேசவ அர்ஜுனரின்
    அத்³பு⁴தம் புண்யம் ச இமம் ஸம்வாத³ம் = வியப்புக்குரிய இந்த புண்ய சம்பாஷணையை
    ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய = நினைத்து நினைத்து
    முஹுர்முஹு: = மீண்டும் மீண்டும்
    ஹ்ருஷ்யாமி = மகிழ்கிறேன்
    அரசனே, கேசவார்ஜுனரின் வியப்புக்குரிய இந்த புண்ய சம்பாஷணையை நினைத்து நினைத்து நான், மீட்டு மீட்டும் களிப்பெய்துகிறேன்.
    ________________________________________
    तच्च संस्मृत्य संस्मृत्य रूपमत्यद्भुतं हरेः ।
    विस्मयो मे महान् राजन्हृष्यामि च पुनः पुनः ॥१८- ७७॥
    தச்ச ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய ரூபமத்யத்³பு⁴தம் ஹரே: |
    விஸ்மயோ மே மஹாந் ராஜந்ஹ்ருஷ்யாமி ச புந: புந: || 18- 77||
    ராஜந் = அரசனே!
    ஹரே: அதி அத்³பு⁴தம் = ஹரியின் மிகவும் அற்புதமான
    தத் ரூபம் ச = அந்த ரூபத்தை
    ஸம்ஸ்ம்ருத்ய ஸம்ஸ்ம்ருத்ய = நினைத்து நினைத்து
    மே மஹாந் விஸ்மய: = எனக்குப் பெரிய ஆச்சரியமுண்டாகிறது
    ச புந: புந: ஹ்ருஷ்யாமி = மீட்டு மீட்டும் களிப்படைகிறேன்
    அரசனே, ஹரியின் மிகவும் அற்புதமான அந்த ரூபத்தை நினைத்து நினைத்து எனக்குப் பெரிய ஆச்சரியமுண்டாகிறது; மீட்டு மீட்டும் களிப்படைகிறேன்.
    ________________________________________
    यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः ।
    तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा नीतिर्मतिर्मम ॥१८- ७८॥
    யத்ர யோகே³ஸ்²வர: க்ருஷ்ணோ யத்ர பார்தோ² த⁴நுர்த⁴ர: |
    தத்ர ஸ்ரீர்விஜயோ பூ⁴திர்த்⁴ருவா நீதிர்மதிர்மம || 18- 78||
    யத்ர யோகே³ஸ்²வர: க்ருஷ்ண: = எங்கு யோகக் கடவுள் கண்ணனும்
    யத்ர த⁴நுர்த⁴ர: பார்த²: = எங்கு வில்லினை யேந்திய விஜயன் தன்னோடும் இருக்கிறார்களோ
    தத்ர ஸ்ரீ: விஜய: பூ⁴தி: = அங்கு திருவும் ஆக்கமும் வெற்றியும் ஐஸ்வர்யமும்
    த்⁴ருவா நீதி = நிலை தவறாத நீதியும் (இருக்கும்)
    மம மதி: = என் உறுதியான கருத்து (இது)
    கண்ணன் யோகக் கடவுள், எங்குளன், வில்லினை யேந்திய விஜயன் தன்னோடும்? அங்கு திருவும் ஆக்கமும் வெற்றியும் நிலை தவறாத நீதியும் நிற்கும்; இஃதென் மதம்.

    ________________________________________


    ________________________________________
    ॐ तत्सदिति श्रीमद् भगवद्गीतासूपनिषत्सु ब्रह्मविद्यायां योगशास्त्रे
    श्रिकृष्णार्जुन सम्वादे मोक्षसन्नियासयोगो नामष्टादशोऽध्याय: || 18 ||
    ஓம் தத் ஸத் – பிரம்ம வித்யை, யோக சாஸ்திரம், உபநிஷத்து எனப்படும்
    ஸ்ரீமத் பகவத் கீதையாகிய ஸ்ரீ கிருஷ்ணனுக்கும் அர்ஜுனனுக்கும் இடையே நிகழ்ந்த
    உரையாடலில் ‘மோக்ஷ ஸந்நியாச யோகம்’ எனப் பெயர் படைத்த
    பதினெட்டாம் அத்தியாயம் நிறைவுற்றது.
Working...
X