Announcement

Collapse
No announcement yet.

பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..!

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • பசு மாடு: சுவாரஸ்யமான அரியத் தகவல்கள்..!

    பசு மாட்டின் ஆண் இனம் காளை என்றும் அதன்
    குட்டி கன்று என்றும் அழைக்கப்படுகிறது.
    *பசு மாட்டால் மாடிப்படியை ஏறமுடியும். ஆனால் இறங்க முடியாது. ஏனென்றால் அதன் முழங்கால் சரியாக வளைந்து கொடுக்காது.
    *பசு மாடு முதன் முறை குட்டி ஈன்ற பிறகு தான் பால் கொடுக்கும்.
    *பசு மாடு தனது வாழ்நாளில் கிட்டத்தட்ட 2 – 4 லட்சம்
    லிட்டர் வரை பால் கொடுக்க வல்லது.
    *ஒரு நாளில் 10 – 15 முறை கீழே உட்கார்ந்து எழுந்திருக்கும்.
    *சாதாரணமாக 500 கிலோ எடை உள்ள பசு மாடு ஆண்டுக்கு சுமார் 10 டன் சாணியை கொடுக்கும்.
    *ஒரு நாளில் 6 – 7 மணி நேரம் இரை உண்ணவும் 7 – 8
    மணி நேரம் அதனை அசைபோடவும் பசுவுக்குத் தேவை.
    *அசை போடும் போது நிமிடத் திற்கு சுமார் 40 – 50
    முறை தாடையை அசைக்க வேண் டி வருகிறது. இப்படி ஒரு நாளைக்கு 40 ஆயிரத்திலி ருந்து 50 ஆயிரம் முறை தாடையை அசைக்கிறது.
    *ஒரு பசு மாடு நாள் ஒன்றுக்கு 10 – 12 லிட்டர் சிறு நீரும் 15 – 20 கிலோ சாணியும் வெளியேற்றுகிறது. இன்னும் பெரிய
    மாடாக இருந்தால் இது அதிகமாகும்.
    *பசு மாடு ஒரு நாளில் சுமார் 100 லிட்டர் வரை தண்ணீர் குடிக்க வல்லது.
    *மாடு பற்களால் புல்லைக் கடிப்பதில்லை. நாக்கு மற்றும் ஈற்றால் பிடுங்கிச் சாப்பிடுகின்றது.
    *பசு மாட்டுக்கு ஒரு வயிறுதான் உண்டு. ஆனால்
    அதில் உணவை ஜீரணிப்பதற்காக 4 பகுதிகள் உள்ளன.
    *மாட்டின் கண்கள் முகத்தின் இருபுறமும் அமைந்துள்ளதால் கிட்டத்தட்ட 4 பக்கமும் (360 டிகிரி முழு வட்டம்) ஒரே சமயத்தில் பார்க்க வல்லது.
    *பசு மாட்டின் நுகருணர்வு மிகவும் கூர்மையானது. சுமார் 6 – 8 கி.மீ. தூரத்திலுள்ள பசுமையை நுகர்ந்து கண்டு கொள்ளும்.
    *கறக்கும் பசு மாடு நா ளுக்கு சுமார் 40 – 50 லிட்டர் உமிழ் நீரை சுரந்து ஜீரணத்துக்கு பய ன்படுகிறது..
    பசு மாட்டின் உடல் வெப்ப நிலை 101.5 டிகிரி ஃபாரன்ஹீட்.
    *உலகத்தில் உற்பத்தியாகும் மொத்த பாலில் 90 சதவீதம்
    பசும்பால்.
    *உலகத்திலேயே அதிகமாக பால் சுரந்த பெருமை ஹோல்ஸ்டைன் இனத்தைச் சேர்ந்த மாட்
    டைச் சேரும். அது ஒரு ஆண்டில் சுமார் 26,897 கிலோ லிட்டர் பாலைச் சுரந்தது.
    *ஒரே நாளில் 97 கிலோ பாலைச் சுரந்து உலகசாதனை செய்த மாட்டின்பெயர் உர்பே ஆகும்.
    இது வரை அதிக நாட்கள் வாழ்ந்த மாட்டின் வயது 48
    ஆண்டுகள், 9 மாதங்கள் ஆகும்....!!!




    Parathasarathy Suresh Kanna
Working...
X