Announcement

Collapse
No announcement yet.

திருமழிசைப் பிரானின் திருச்சந்தவிருத்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • திருமழிசைப் பிரானின் திருச்சந்தவிருத்

      • "திருமழிசைப் பிரானின் திருச்சந்தவிருத்தம் - 001/120 : யார் நினைக்க வல்லரே ?


    *******************************************************************
    தனியன்கள் :


    தருச்சந்தப் பொழில் தழுவு தாரணியின் துயர்தீர
    திருச்சந்த விருத்தம் செய் திருமழிசைப்பரன் வருமூர்
    சருச்சந்தும் காரகிலும் கமழ் கோங்கும் மணநாறும்
    திருச்சந்தத்துடன் மருவு திருமழிசை வளம்பதியே.


    உலகும் மழிசையும் உள்ளுணர்ந்து தம்மில்
    புலவர் புகழ்க்கோலால் தூக்க - உலகு தன்னை
    வைத்தெடுத்த பக்கத்தும் மாநீர் மழிசையே
    வைத்தெடுத்த பக்கம் வலிது .


    *****************************************************************


    பூ நிலாய ஐந்துமாய்ப் புனற்கண் நின்ற நான்குமாய்
    தீ நிலாய மூன்றுமாய்ச் சிறந்த காலிரண்டுமாய்
    மீ நிலாயதொன்றுமாகி வேறு வேறு தன்மையாய்
    நீ நிலாய வண்ணம் நின்னை யார் நினைக்க வல்லரே ?


    பூ நிலாய ......................... பூமியில் உள்ள
    ஐந்துமாய்ப் ..................... ஐந்து குணங்களுமாயும் ,
    புனற்கண் நின்ற .............. நீரில் உள்ள
    நான்குமாய் ..................... நான்கு குணங்களுமாயும் ,
    தீ நிலாய ......................... நெருப்பில் உள்ள
    மூன்றுமாய்ச் .................... மூன்று குணங்களுமாயும் ,
    சிறந்த கால். .................... பலம் மிக்க காற்றில் உள்ள
    இரண்டுமாய் .................... இரண்டு குணங்களுமாயும் ,
    மீ நிலாயது ...................... ஆகாயத்தில் உள்ள
    ஒன்றுமாகி ...................... ஒரு குணமாகவும் ,
    வேறு வேறு தன்மையாய் .. வேறு வேறு வகையாகவும்
    நீ நிலாய வண்ணம் .......... இருக்கின்ற தன்மை உள்ள
    நின்னை .......................... உன்னை
    யார் ................................ யார்
    நினைக்க வல்லரே ? ....... நினைக்க முடியும் ?



























    --
    V.Sridhar














    Last edited by sridharv1946; 26-02-15, 15:07.
Working...
X