Announcement

Collapse
No announcement yet.

PERIYVAL : EXPLANATION ABOUT ASIRVATHAM

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • PERIYVAL : EXPLANATION ABOUT ASIRVATHAM

    From my mail inbox:
    பல வருஷங்களுக்கு முன் செய்தி....
    பெரியவாள் தரிசனம் கொடுத்துக் கொண்டிருந்த சமயத்தில்
    நாலைந்து வித்வான்கள் தரிசனத்துக்கு வந்திருந்தார்கள்.
    பேச்சு வாக்கில் ''நான் நாராயண ,நாராயண் ஏன்று
    ஆசீர்வதிக்கிறேன், சம்சாரிகளான நீங்கள் என்ன சொல்லி
    வாழ்த்துகிறீர்கள்'' என்று கேட்டார்கள்.
    அதற்கு ''தீர்காயுஷ்மான் ஸௌம்ய'' என்று வாழ்த்துகிறோம்
    என்று அந்த பண்டிதர்கள் சொன்னார்கள்.
    ''அதற்கு என்ன அர்த்தம்'?
    ''நீண்ட நாட்கள் சௌக்யமாய் இரு ''என்று அர்த்தம்.
    அங்கிருந்த வித்வாங்களை த் தனித் தனியே கேட்டார்.
    எல்லாரும் அதே பதிலையே சொன்னார்கள்.
    கொஞ்ச நேரம் மௌனமாய் இருந்த பெரியவா''நீங்கள்
    அனைவரும் சொன்ன அர்த்தம் தவறு ''என்றார்.
    பண்டிதர்களுக்கு தூக்கிவாரிப் போட்டது. அத்தனை
    பேரும் சிரோமணி பட்டம் வாங்கியவர்கள்.
    தீர்காயுஷ்மான் பவ ஸௌம்ய என்பதற்கு ஓரளவு
    ஸம்ஸ்க்ருதம் பயின்றவர்களே பதில் பொருள் சொல்லமுடியும்.
    அவ்வளவு எளிமையான சொல்லுக்கு விளக்கம் தப்பு
    என்கிறாரே பெரியவா?
    ''நானே சொல்லி விடட்டுமா?''
    பண்டிதர்கள் பொருள் விளக்கத்துக்குக் காதைத்
    தீட்டிக் கொண்டார்கள்.
    ''இருபத்தேழு யோகங்களின் ஒன்றின் பெயர்
    ஆயுஷ்மான்.பதினொரு கரணங்களில் , பவ
    என்று ஒரு கரணம், வார நாட்களில் ஸௌம்ய
    என்று வாஸரம் வருகிறது, புதன் கிழமை.
    புதன் கிழமையில் ஆயுஷ்மான் யோகமும் பவ கரணமும்
    சேர்ந்து வந்தால் அந்த நாள் ரொம்ப ச்லாக்யமான நாள்
    என்று சொல்வார்கள்.வேகமா விருத்தி ஏற்படும்னு சொல்வா.
    அதனாலே இந்த மூணும் கூடி வந்தால் என்ன பலன் கிடைக்குமோ
    அதெல்லாம் உனக்குக் கிடைக்க வேண்டுமென ஆசிர்வதிக்கிறேன்''
    என்று அர்த்தம் என்றார்.
    அங்கிருந்த சிரோமணிகள் வித்யா வாசஸ்பதிகள்
    கிளிப்பிள்ளை மாதிரி சொன்ன வாக்யத்துக்கு எத்தனை
    அர்த்த புஷ்டியாந விளக்கம் கொடுத்தார் இந்த ஞானப்பிள்ளை!
    ஹர ஹர சங்கரா...
Working...
X