Announcement

Collapse
No announcement yet.

ஆதி சங்கரர் - மாத்ருகா பஞ்சகம் ஸ்லோகம் -மா

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஆதி சங்கரர் - மாத்ருகா பஞ்சகம் ஸ்லோகம் -மா

    courtesy: Ramani Ramaswamy.
    கயாவில் ஸ்ரார்த்தம் செய்யும் பொது ஸ்ரார்த்தை நடத்தும் சுவாமி பிண்ட பிரதானம் கொடுப்பதை பற்றி
    ஒரு நீண்ட விளக்கம் கொடுப்பார். குறிப்பாக தாயாருக்கு பிண்ட பிரதானம் கொடுக்கும் போது
    நாம் கர்ப்பத்தில் இருக்கும் போதும் நம்மை வளர்த்து ஆளாக்கும் போதும் தாயாருக்கு எவ்வளவு
    உபாதைகளை கொடுத்தோம் என்பதை பற்றி ஓர் அரை மணி நேரம் விஷ்த்தாராமாக விளக்குவார்.
    அப்போது நம் கண்கள் தன்னையும் அறியாமல் கண்ணீர் உகுக்கும்.

    ஆதி சங்கரர் தனது மாத்ருகா பஞ்சகம் என்ற ஸ்லோகத்தில் தாயை துதிப்பார் பாருங்கள் அப்போது
    அவரது மாத்ரு பக்தி நம் கண்களை குளமாக்கும்
    1.ஆஸ்தாம் தாவதியம் ப்ரஸ¨திஸமயே துர்வாரசூலவ்யதா
    நைருச்யம் தநுசோஷணம் மலமயீ சய்யாச ஸாம்வத்ஸரீ I
    ஏகஸ்யாபி நகர்பபார பரணக்லேசஸ்ய யஸ்ய க்ஷம :
    தாதும் நிஷ்க்ருதிமுந்நதோsபி தநய:தஸ்யை ஜநன்யை நம:
    தடுக்கமுடியாத பிரஸவ வேதனை ஒருபுறமிருக்க, வாய்க்கு ருசி இல்லாதிருத்தல், உடம்பு இளைத்தல்,
    ஒரு வருஷகாலம் மல மூத்ரம் நிறைந்த படுக்கை ஆகியவையான கர்பகாலத்தில் பாரத்தைத்
    தாங்கிக்கொள்ளும் கஷ்டத்தில் ஒன்றையாவது தீர்க்க வளர்ந்த பிள்ளை முடியாதவனாகி விடுகிறானே!
    அக்கஷ்டங்களை தாங்கிக் கொள்ளும் தாயை என்னவென்று செல்ல? அந்த தாய்க்கு நமஸ்காரம்!
    2.குருகுலமுபஸ்ருத்ய ஸ்வப்ன காலே து த்ருஷ்ட்வா
    யதிஸமுசித வேஷம் ப்ராருதோ மாம் த்வமுச்சை :I
    குருகுலமத ஸர்வம் ப்ராருதத்தே ஸமக்ஷம்
    ஸபதி சரணயோஸ்தே மாதரஸ்து ப்ரணாம :II
    ஹே தாயே! c ஒரு சமயம் நான் படிக்கும் குருகுலம் வந்து கனவில், நான் ஸன்யாஸம் பூண்டதாக் கண்டு
    உறக்க அழுதாயே அப்பொழுது குருகுலம் முழுவதும் உன் எதிரில் அழுததே!
    உனது கால்களில் விழுந்து நமஸ்கரிக்கிறேன்!
    3.ந தத்தம் மாதஸ்தே மரணஸமயே தோய மபிவா
    ஸ்வதாவா நோதேயா மரணதிவஸே ச்ராத்தவிதிநா I
    ந ஜப்தோ மாதஸ்தே மரணஸமயே தாரகமநு:
    அகாலே ஸம்ப்ராப்தே மயிகுரு தயாம் மாதரதுலாம் II
    தாயே! c மரிக்கும் தருணத்தில் தண்ணீர்கூட கொடுக்கப் படவில்லை. c மரித்த தினத்தில்
    சிராத்த முறைப்படி ஸ்வதா என்ற ஹவிஸும் கொடுக்க முடியாமலிருந்தது.
    தாயே! உன் மரணவேளையில் தாரக மந்திரம்கூட ஜபிக்கப்படவில்லை.
    காலம் கடந்து வந்துள்ள என்மீது இணையற்ற தயை காட்டவேண்டும் தாயே!
    4.முக்தாமணி ஸ்த்வம் நயனம் மமேதி
    ராஜேதி ஜீவேதி சிரம் ஸுதத்வம் I
    இத்யுக்தவத்யா ஸ்தவ வாசி மாத:
    ததாம்யஹம் தண்டடுலமேஷ சுஷ்கம் II
    என் முத்தல்லவா c ! என் கண் அல்லவா c ! c என் ராஜா, என் குழந்தை
    சிரஞ்சீவியாய் வாழ வேண்டும் என்றெல்லாம் கொஞ்சினாயே தாயே!
    அத்தகைய வாயில் சாரமில்லாத பிடி அரிசியைத்தானே போடுகிறேன் !

    5.அம்பேதி தாதேதி சிவேதி தஸமின்
    ப்ரஸ¨திகாலே யதவோச உச்சை :I
    க்ருஷ்ணேதி கோவிந்த ஹரே முகுந்தே -
    த்யஹோ ஜநந்யை ரசிதோsயமஞ்ஜலி :II
    அன்று ப்ரஸவ காலத்தில் 'அம்மா' அப்பா, சிவ என்று உறக்க கத்தினாயல்லவா தாயே!
    இன்று நான் கிருஷ்ணா, கோவிந்தா, ஹரே முகுந்தா என்று கூறி அஞ்சலி செய்கிறேன்.
    தாயை போல் ஒரு தெய்வம் இல்லை .
    என் அன்பிற்கினிய நண்பர்களே ! தாயில் சிறந்த கோயில் இல்லை.
    நமக்கு கண்கண்ட தெய்வமான தாயை போற்றுங்கள்.
    நீவிர் எல்லா வளமும் பெறுவீர்.

    Edited by NVS to insert the video:
    See Below video, which is taken at the time of Gaya Shradham performed by NVS

    To perform Gaya shradham in a well manner, you can arrange everything from here over phone:
    Just Call Sriman Thambu Swamy Shastrigal 09956513388 and tell as "NVS mama referred "
    Give all your details, he will arrange everything including a cab to pick-up your group from Luknow / Ayodhya / Varanasi or else.
    This is for your information.
    NVS
    Last edited by bmbcAdmin; 06-04-15, 21:14. Reason: to insert video clip

  • #2
    Re: ஆதி சங்கரர் - மாத்ருகா பஞ்சகம் ஸ்லோகம் -ம&#3006

    நூற்றுக்கு நூறு சத்தியம் சார், மூன்று வருஷங்களுக்கு முன்பு நான் என் சம்பூர்ண காசி யாத்திரை செய்தபோது கயா ஸ்ரார்தத்தின் போது நீங்கள் மேலே கூறியபடி என்கண்கள் குளமாயிற்று.[ Ref. my post Sampoorna kaasi yatra]
    பதினாறு பிண்டங்களை அம்மாவுக்கு மாத்திரம் ஏன் என்பது விளங்கியது.
    ஹிந்துவாக பிறந்த ஒவ்வொருவரும் தம் ஆயுட்காலத்தில் ஒருமுறையாவது கயா ஸ்ரார்தம் செய்யவேண்டும்.நம்மை இவ்வுலகில் ஜனிக்கச்செய்த அந்த அம்மாவுக்கு நாம் கட்டாயம் அங்கு பிண்டங்கள் அளித்தே ஆகவேண்டும். அடுத்த தலைமுறைக்கு நிச்சயம் இதை Forward செய்யவேண்டும்.
    பெற்றோரை ஒதுக்கும் சிலர் மனதில் சற்றாவது ஈரம் தோன்றும்.
    மிக்க நன்றி,ஸ்ரீ ஐயர்அவர்களே.

    Comment

    Working...
    X