Announcement

Collapse
No announcement yet.

-மகான் பட்டினத்தார்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • -மகான் பட்டினத்தார்

    Sri Agathiar Sanmarka Sangam -ஓங்காரக்குடில்

    கல்லாப் பிழையும், கருதாப் பிழையும், கசிந்துருகி
    நில்லாப் பிழையு நினையாப் பிழையும், நின்னஞ்செழுத்தைச்
    சொல்லாப் பிழையுந், துதியாப் பிழையுந், தொழாப் பிழையும்
    எல்லாப் பிழையும் பொறுத்தருள்வாய் கச்சியேகம்பனே.

    சொல்லால் வருங்குற்றஞ் சிந்தனையால் வருந்தோடஞ்செய்த
    பொல்லாத தீவினை பார்வையிற் பாவங்கள் புண்ணியநூல்
    அல்லாத கேள்வியைக் கேட்டிடுந் தீங்குகள் ஆயவுமற்று
    எல்லாப் பிழையும் பொறுத்தருள் வாய் கச்சியேகம்பனே.
    எல்லாம் அறிந்து படித்தே யிருந்தெமக் குள்ளபடி
    வல்லான் அறிந்துளன் என்றுணராது மதிமயங்கிச்
    சொல்லான் மலைந்துறு சூழ்விதியின்படி துக்கித்துப்பின்
    எல்லாம் சிவன்செயலே என்பார்காண் கச்சியேகம்பனே.
    -மகான் பட்டினத்தார்
Working...
X