Announcement

Collapse
No announcement yet.

Aanmikam

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • Aanmikam

    கடவுளை நம்பினால் நமக்குத் தான் லாபமே ஒழிய, நம்மால் அவருக்கு ஆக வேண்டியது ஏதுமில்லை!!!!.
    ஆன்மிகம் என்பது கடவுளைப் பற்றி வெறுமனே பேசுவதல்ல!!. கடவுள் சிந்தனையில் தன்னையே கரைத்துக் கொள்வதாகும்!!.

  • #2
    Re: Aanmikam

    ருக்மணீ, ஸத்யபாமா முதலிய தேவிகள்:- கண்ணனின் முக்கிய தேவிகளான இவா்களைப் பற்றி ஒன்றும் திருப்பாவையில் வராது.
    ஆயா்மடமகளான நப்பின்னையிடம் கண்ணன் வைத்திருந்த காதலுக்கு ஈடாக இன்னொரு தேவி க்ருஷ்ணாவதாரத்தில் கிடையாது. இதனால் ஆழ்வாா்கள் நாலாயிரத்திலும் நூற்றுக்கணக்கான இடங்களில் நப்பின்னையைப் பேசுவா். மொத்தமாக மூன்று நான்கு இடங்களில் மட்டுமே ருக்மணியைப் பற்றி பேசியுள்ளனா். கண்ணனை நன்கறிந்த ஆழ்வாா்களின் திருவுள்ளப்படி ' நப்பின்னைதான் கண்ணனின் காதலின் மொத்த முழு உருவம் ' என்பதை எடுத்துக் காட்டவே ஸ்ரீ ஆண்டாள் மற்ற தேவியரை ஏதும் ப்ரஸ்தாவிக்காமல் விட்டாள்.
    (ஸ்ரீ ரங்கநாத பாதுகா)

    Comment

    Working...
    X