Announcement

Collapse
No announcement yet.

காயந்திரி மகா மந்திரத்தின் மகத்துவம் - சி

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • காயந்திரி மகா மந்திரத்தின் மகத்துவம் - சி

    பழந்தமிழகத்தில் சாதியில்லை, மதம் இல்லை,
    இயற்கையையே வணங்கினர். மொழி சிறந்து,
    கலைகள் மிளிர்ந்து, நுட்பங்கள்
    உயர்ந்திருந்தன. ஆணும், பெண்ணும்
    சமூகத்தில் சம அங்கமாய் வாழ்ந்திருந்தனர்.

    ஆதியில் இதுவே மெய்யான தமிழர் பண்பாடு
    மற்றும் கலாச்சாரமாய் இருந்தது.
    விந்திய மலைக்கு தெற்கே ஆரியர்கள் மற்றும்
    களப்பிரர்களின் அழுத்தமான சுவடுகள் பதிய
    ஆரம்பித்த பின்னர் அவர்களின் கலாச்சாரம்
    தமிழர்களின் மீது வலுவாக திணிக்கப்
    பட்டது.இன்றைய நமது தமிழும்,
    கலாச்சாரமும் இந்த இரு பிரிவினரின்
    பாதிப்புகளின் எச்சம்தான்.

    தமிழின் நுட்பங்கள் மற்றும் செறிவான
    மொழியியலை தாங்கள் உணர்ந்து கொள்ளும்
    பொருட்டு உருவாக்கப் பட்டதே சமஸ்கிருதம்
    (சம - இணை , கிருதம் - மொழி ) என்கிற
    சர்ச்சையான கருத்து உள்ளது. காலப்
    போக்கில் இவ்வாறு மொழி மாற்றம் செய்யப்
    பட்டவைகளை ஆரியர்கள் தங்களுடையதாகக்
    கூறி அவற்றில் தங்களின் கற்பனாவாத மூட
    நம்பிக்கைகளை உட்புகுத்தி, கடவுளின் பிரதி
    நிதிகளாக தங்களை நிறுவிக் கொள்ளும்
    முகமாக சடங்குகள், வழிபாட்டு
    முறைமைகள், பாவபுண்ணிய தீர்மானங்களை
    தமிழர்களின் மீது திணித்தனர்.

    இன்னும் தெளிவாக சொல்வதாயின்,
    பரிதிமாற்கலைஞரின் ”தமிழ்மொழியின்
    வரலாறு” என்ற நூலின் எட்டாவது பக்கத்து
    வரிகளைத் தருகிறேன்....

    “தமிழரிடத்திருந்த பல அரிய
    விஷயங்களையும் மொழிபெயர்த்துத் தமிழர்
    அறியுமுன்னரே அவற்றைத் தாமறிந்தன
    போலவும், வடமொழியினின்றுமே தமிழிற்கு
    அவை வந்தன போலவும் காட்டினர்"

    இது தொடர்பாக மேலதிக தகவல்
    வேண்டுவோர், புலவர் அறிவுடைநம்பி,
    சிலம்பு நா.செல்வராசு மற்றும்மொழியியல்
    அறிஞரான Avram Noam Chomsky
    ஆகியோரின் நூல்களை வாசித்தறியலாம்.
    இனையத்தில் கூட இது பற்றிய தகவல்கள்
    காணக் கிடைக்கின்றன. இந்த பதிவின் நோக்கம்
    அவற்றையெல்லாம் அலசுவதில்லை.

    தமிழில் இருந்து இவ்வாறு மொழிமாற்றம்
    செய்யப் பட்டவைகளில் ஒன்றுதான் காயத்ரி
    மந்திரம் என்ற கருத்து உள்ளது. காயம் =
    உடல், திரி = உயிர், மந்திரம் = காக்கும்,
    உடலையும் உயிரையும் பேணிக் காக்கும்
    கவசம் காயந்திரி மந்திரம் எனப்படுகிறது.

    இந்த மூல மந்திரத்தின் மொழிபெயர்ப்பு
    அல்லது இனையான உச்சரிப்புகளைக்
    கொண்டதே தற்போது புழக்கத்தில் இருக்கும்
    காயத்திரி மந்திரம் எனப்படுகிறது. இந்த
    மந்திரம் காலம் காலமாக குருமுகமாக
    மட்டுமே உபதேசிக்கப் பட்டு வந்தது...
    பரவலாக அறியப் படாமல் காயந்திரி மந்திரம்
    மறைந்து போனதற்கு இதுவும் ஒரு
    காரணமாக இருக்கலாம்.

    பழந்தமிழர்கள் ஐந்து வகையான காயந்திரி
    மந்திரங்களை பயன் படுத்தியதாக தெரிகிறது.
    இந்த மந்திரங்களை எவரும் பயன் படுத்தலாம்
    என்கின்றனர். கருவூரார் அருளிய காயந்திரி
    மந்திரத்தினை இங்கே பகிர்ந்து கொள்கிறேன்.

    "ஓம் பூர்வ புலன்கள் சுவை ஆகுக.!
    தத்துவ வித்துக்கள் அரணாகுக.!
    பாரின்கோ தேவர்கள் வசிக்கும் தீ மகிழட்டும்.!
    தீயே யோகப் பரஞ்சோதி ஆகட்டும்.!"
    இதன் உச்சரிப்புகள் நாம் இப்போது
    புழக்கத்தில் வைத்திருக்கும் காயத்ரி
    மந்திரத்தின் ஓசைகளை ஒத்திருப்பதை எவரும்
    அவதானிக்கலாம். இதன் மகத்துவத்தை
    காகபுசுண்டர் பின் வருமாறு கூறுகிறார்

    "மவுனமே இப்படித்தான் செய்யும் பொய்யோ
    வாய்க்குமல்லோ காயந்திரி வலுவே
    செய்யும்
    கெவுனமே மேல்கிளப்பும் தொழிலே தானே
    கேசரத்தில் ஏற்றி வைக்கும் சித்தி தானும்
    மவுனமேயென்று சொன்னார்
    முன்னோரெல்லாம்
    வந்தவர்கள் கண்டு கொண்ட வகையிதாமே
    ரவிதனை மறவாமல் நோக்கி நோக்கி
    காயத்ரி செபஞ்செய்து இருந்து பாரே"
    - காகபுசுண்டர் -

    இந்த காயந்திரியை பயன்படுத்தி எவ்வாறு
    பலனடைவது என்பதைப் பார்ப்போம்..
    காயந்திரி சூரியனை நோக்கி சொல்லப் படும்
    மந்திரம். அதிகாலையில் சூரியன் உதிக்கும்
    முன்னர் சூரியனை பார்த்தபடி நின்று
    கொண்டோ, அல்லது பத்மாசனத்தில்
    அமர்ந்தோ ஆத்ம சுத்தியுடன் நூற்றியெட்டு
    முறை மனதுக்குள் உச்சரித்து ஜபம் செய்ய
    வேண்டும். உடலும்,உதடும் அசையாமல்
    மனதை ஒரு நிலைப் படுத்தி உச்சரிப்பதே
    சிறப்பு.

    இந்த மகா மந்திரத்தினை காலையிலும்,
    மாலையிலும் தொடர்ந்து ஜெபித்து வர
    ஆத்மா தன்னிலையறிந்து, பக்தி, தொண்டு,
    யோகம், தியானம், சமாதி என்கிற ஐந்து உயர்
    நிலைகளும் சித்திக்கும். இதனை காலையும்
    மாலையும் தொடர்ந்து செய்வதே
    சிறந்தது.இந்த மகா மந்திரமே எந்த
    நிலையிலும் அருள்தரக் கூடியது என்றும்,
    இது நம் காயத்துக்கு (உடலுக்கு) திரியாக
    (உயிர்) இருந்து காக்கும் என்று
    கூறியுள்ளனர் சித்தர்கள்.

    இதன் மகத்துவம் உணர்ந்து, நாமும் உயர்ந்து,
    மற்றவர்களையும் உயர்த்திடுவோம்.
Working...
X