Announcement

Collapse
No announcement yet.

SivaSiva

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • SivaSiva

    அப்பன்நீ அம்மைநீ ஐய னும்நீ
    * * அன்புடைய மாமனும் மாமி யும்நீ
    ஒப்புடைய மாதரும் ஒண்பொரு ளும்நீ
    * * ஒருகுலமும் சுற்றமும் ஓரூ ரும்நீ
    துய்ப்பனவும் உய்ப்பனவுந் தோற்று வாய்நீ
    * * துணையாயென் நெஞ்சந் துறப்பிப் பாய்நீ
    இப்பொன்நீ இம்மணிநீ இம்முத் து(ம்)நீ
    * * இறைவன்நீ ஏறூர்ந்த செல்வன் நீயே

  • #2
    Re: SivaSiva

    இத் திருத்தாண்டகம், தமக்கு எல்லாப் பொருளும் இறைவனேயாகக் கொண்டு நின்ற தம் அன்பின் மேலீட்டினை அருளிச் செய்தது.
    அப்பன் - தந்தை. அம்மை - தாய். ஐயன் - தமையன். ``அன்புடைய`` என்றது, இடைநிலை விளக்காய் நின்று, ``அப்பன்`` முதலிய எல்லாவற்றொடும் இயையும். ஒப்புடைய மாதர் - ``பிறப்பே குடிமை`` (தொல் - பொருள். 269) முதலிய எல்லாவற்றாலும் ஒத்த மனைவியார். ``பெண்ணிற் பெருந்தக்கயாவுள`` (குறள். 54) என்றவாறு, ஒப்புடைய மனைவியை எய்துதல் மிக்க புண்ணியத்தானன்றிக் கூடாமையின், அவ்வாறு எய்திய மனைவி என்பார், ``மாதர்`` எனப் பன்மையால் அருளிச் செய்தார். பொருள் - பணம். `அறநெறியான் வந்த பொருள்` என்பார், ``ஒண்பொருள்`` என்று அருளிச்செய்தார்; ``ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு`` (குறள். 760.) என்றார், திருவள்ளுவநாயனாரும். குலம் - கிளை; இதனை, `சாதி` என்ப. அஃது ஆகுபெயராய், `குலத்தவர்` எனப் பொருள் தந்தது. சுற்றம் - மேற்கூறிய அப்பன் முதலியவரோடு நேராகவும், வழிவழியாகவும் தொடர்புபட்டு வருவோர். ``ஓர் ஊர்`` என்றது, `நிலையாக நின்று வாழும் ஊர்` என்றவாறு. துய்ப்பன - நுகர்ச்சிப் பொருள். உய்ப்பன - ஊர்தி வகைகள்; அவற்றை வேறு ஓதினார், பொருளுடையார்க்கு அவை மிக்க பயனையும், பெருமையையும் தருதலின். செல்வம் உடையார் என்பதை விளக்க, `யானை எருத்தம் பொலியக் குடைநிழற் கீழ்ச்...சென்றோர்` (நாலடி.3) என ஊர்தியையே பிறரும் சிறந்தெடுத்துக் கூறினார். `துய்ப்பனவும் உய்ப்பனவுமாய்` என ஆக்கம் வருவிக்க. துணையாய் - உலகியலாய குழியில் வீழாது காக்கும் துணைவனாய் உடன்நின்று. துறப்பித்தல், உலகத்து அப்பன் அம்மை முதலாயினாரினின்று என்க. பொன் முதலிய மூன்றினும் நின்ற இகரச் சுட்டுக்கள், `இவ்வுலகத்தாரைப் பிணிக்கின்ற` என்னும் பொருளுடையன. இம்மூன்று தொடர்களையும், `தோற்றுவாய் நீ` என்பதன் பின்னர்க் கூட்டுக. இறைவன் - கடவுள். ``ஏறு ஊர்ந்த செல்வன்`` என்றது, `என்னை மேற்கதிக்கண் உய்ப்பவன்` என்றபடி, ``அப்பன் நீ`` என்பது முதலிய எல்லாவற்றிற்கும் இயைய. `எனக்கு` என்பதனை முதற்கண் வருவிக்க.

    Comment

    Working...
    X