Announcement

Collapse
No announcement yet.

ஒரு பாசுரத்தில் பத்து அவதாரத்தையும்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஒரு பாசுரத்தில் பத்து அவதாரத்தையும்

    பெரியாழ்வர் தனது ஒரு பாசுரத்தில் பத்து அவதாரத்தையும் கூறி
    உள்ளதை பார்ப்போமா.

    "தேவுடிய மீனமாய் ஏனமாய் அரியாய் குறளாய்
    மூவிருவிலி இராமனாய் கண்ணனாய் கற்கியாய் முடிப்பான் கோவில்
    சேவலோடு பெடைஅன்னம் செங்கமல மலரேறி ஊசலாடி
    பூவணை மேல் துதைந்தெழு செம்பொடியாடி விளையாடும் புனலரங்கமே "

    மீனமாய் - மத்யாவதரம்
    ஆமையாய் - கூர்ம அவதாரம்
    ஏனமாய் - வராஹா அவதாரம்
    குறள் ஆய் - வாமன அவதாரம்
    அரியாய் - நரஸிம்ஹ அவதாரம்
    மூவிருவிலி இராமனாய் - பரசுராமன், தசரதராமன்,பலராமன்
    கண்ணனாய் - கிருஷ்ணா அவதாரம்
    கற்கியாய் - கல்கி அவதாரம்

    அதே போல் சிவனையும் நாராயணனையும் அவர்களின் பல அம்சங்களை கூறும்
    பாசுரம் இங்கே பார்க்கலாம்.

    பெயர் சிவன் நாராயணன்
    வாகனம் எருது கருடன்
    பிரமாணங்கள் ஆகமம் வேதங்கள்
    வசிக்குமிடம் மலை கடல்
    தொழில் அழித்தல் காத்தல்
    ஆயுதம் வேல் சக்கரம்
    வடிவம் நெருப்பு மேகம்
    மேனி ஒருவன் மற்றவனுக்கு உடலாய் இருப்பவன்
    ( சிவனின் அந்தர்யாமியாக )

    இது எந்த பாசுரம் என்று பார்த்தால் பொய்கை ஆழ்வார் அவர்களின் முதல்
    திருவந்தாதி (பாசுரம் ஐந்து )

    அரன் நாரணன் நாமம் ஆன்விடை புள்ளூர்த்தி
    உரைநூல் மறையுறையுங்கோவில் வரைநீர்
    கரும மழிபளிப்புக் கையதுவேல் நேமி
    உருவமெரி கார்மேனி ஒன்று

    இன்னும் தொடரும்.

    அடியேன்,
    நொச்சலூர் சேஷாத்ரி சம்பத்.


    Thanks for choosing this forum for asking your vaideeka, Shastra, Sampradaya doubts,
    please visit frequently and share information anything you think that will be useful for this forum members.
    Encourage your friends to become member of this forum.
    Best Wishes and Best Regards,
    Dr.NVS
Working...
X