Announcement

Collapse
No announcement yet.

SURRENDER (SARANAGATI)

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • SURRENDER (SARANAGATI)

    SURRENDER (SARANAGATI)
    Courtesy:Sri.Krishnamoorthy Gopalaswamy




    Prapatti (or) Saranagathi : Aathma NivEdanam.
    SriVaikuntavAsi. Sri. U.Ve. Mukkur LakshmiNarasimhachariar Swamin,
    Upanyasam excerpts......
    சரணாகதி
    பாரத்வாஜ சம்ஹிதை பல தர்மங்களைக் காட்டுகின்ற ஒரு உயர்ந்த சம்ஹிதை. அதிலே பாரத்வாஜர் சொல்கிறார்:
    "பிரபத்தியைக் காட்டிலும் உயர்ந்த வித்யை இல்லை
    விஷ்ணுவைக் காட்டிலும் உயர்ந்த தெய்வம் இல்லை".
    வித்யைகள் பல உண்டு. அவற்றிலே 32 முக்கியமான வித்யைகள் ஆசார்யர்களால் எடுத்துக் காட்டப் படுகின்றன.
    இவற்றிற்கு பிரம்ம வித்யைகள் என்று பெயர்.
    " அது என்ன பெரிய பிரம்ம வித்யையா?" என்று உலக வழக்கிலே கேட்பது உண்டு.
    ஏனென்றால் பிரம்ம வித்யை என்பது அவ்வளவு கடினமானது. அந்தக் காலத்திலே மகரிஷிகள் இந்த பிரம்ம வித்யைகளை சிரமப் பட்டு பண்ணிக் கொண்டிருந்தார்கள். இந்த அவசர உலகத்திலே நம்மால் அரை மணியில் பண்ணி முடிக்கிற சந்தியா வந்தனத்தையே பண்ண முடியவில்லை. ஆகவே பிரம்ம வித்யைகளைப் பார்த்து நாம் இரு கை கூப்பி வணங்க வேண்டும். நம்மாலே நினைத்துப் பார்க்கக் கூட முடியாத வித்யைகள் அவை.
    பஞ்சாக்னி வித்யை என்று ஒரு வித்யை. நல்ல வெயில் காலத்திலே ஐந்து அக்னிகளுக்கு நடுவே தவம்!.
    நமக்கோ காற்று கொஞ்சம் கம்மியாய் இருந்தாலே முன்னாலே ஒரு மின்விசிறி பின்னாலே ஒரு மின்விசிறி தேவைப் படுகிறது.
    குரலைப் பலப்படுத்திக் காட்ட இரண்டு ஒலிபெருக்கிகள். இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு ப்ரவசனம் பண்ணுவதில் ஒரு கஷ்டமும் இல்லாமல் எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் ப்ரவசனம் பண்ணலாம்.
    ஆனால் பிரம்ம வித்யையில் போய் இறங்கினோமானால், சித்திரை வெயிலில் கார்பஹத்யம் , ஆஹவநீயம், தக்ஷினாக்னி என்று மூன்று ஹோம குண்டங்களில் தீ ஜொலிக்கும். இதற்கு இடையிலே ஒரு காலை மடித்துக் கொண்டு இரு கைகளையும் உயரத் தூக்கித் தகிக்கின்ற சூரிய வெப்பத்திலே நின்று கொண்டு தியானம் பண்ண வேண்டும்.
    அதே மாதிரி மார்கழி மாதக் குளிரில் கழுத்தளவு ஜலத்தில் நின்று கொண்டு உபாசனை பண்ண வேண்டும். அப்படி ஒரு கடினமான நியமங்கள்.
    ஆகவே தான் பிரம்ம வித்யைகளை நோக்கி நாம் நமஸ்காரம் பண்ண வேண்டும்.
    கூர்ம புராணத்திலே ஒரு கதை. அனுஷ்டானங்கள் எவ்வளவு சிரமமானவை என்பதை எடுத்துக் காட்டும் கதை.
    ஒருத்தர் பஞ்சாக்னி ஹோமம் பண்ணிக் கொண்டு இருக்கிறார். நாரதர் அவரிடம் போய் " ஸ்வாமி! எதற்கு இவ்வளவு சிரமப்பட்டு இதைப் பண்ணுகிறீர்கள்?" என்றார். அவர் சொன்னார் " வேறு எதற்கு ஸ்வாமி? எல்லாம் மோக்ஷார்தத்திற்குத்தான்" என்றார். நாரதர் கேட்டாராம் " நான் ஸ்ரீவைகுந்ததிற்குத்தான் போய்க் கொண்டு இருக்கிறேன். நாராயணனிடம் உமக்கு எப்போது மோக்ஷம் என்று கேட்டு வரட்டுமா?" என்றாராம். " அவசியம் கேட்டு வாருமே" என்றாராம் அந்த ஸ்வாமி.
    அங்கே இருந்து கிளம்பி போகிற வழியில் ஊருக்குள்ளே ஒரு பஜனை கோஷ்டியைப் பார்த்தார். நாம சங்கீர்த்தனம் பண்ணிக் கொண்டு வருகிறார்கள். நடுவிலே ஒருத்தர் கால்களில் சதங்கை கட்டிக் கொண்டு ஆடிப் பாடிக் கொண்டு வருகிறார்.அவரைப் பார்த்து நாரதர் கேட்கிறார் " ஸ்வாமி! எதற்காக இப்படியெல்லாம் பண்ணுகிறீர்?. அதற்கு அவரும் " ஸ்வாமி! மோக்ஷார்த்தத்திற்குத்தான்: என்றார். நாரதரும் " நான் வைகுந்தம் தான் போய்க் கொண்டு இருக்கிறேன். உமக்கு எப்போது மோக்ஷம் என்று நாராயணனைக் கேட்டுக் கொண்டு வரட்டுமா?"என்றார். அவரும் " அவசியம் கேட்டுக் கொண்டு வாரும் " என்று சொல்லி அனுப்பினார்.
    சில காலம் கழிந்து நாரதர் திரும்பி வந்தார்.
    முதலில் பஜனை பாடிக் கொண்டிருந்தவரைத் தான் பார்த்தார். அந்த ஸ்வாமி நாரதரிடம் கேட்டதையே மறந்து போயிருந்தார். அவரிடம் போய் நாரதர் சொன்னார் " ஸ்வாமி! உமக்கு இன்னமும் எழுபது ஜன்மா உள்ளது, அதன் பிறகே மோக்ஷம் என்றார்" நாரதர். அவர் ஒன்னும் கவலைப் பட்டதாகத் தெரியவில்லை. ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் இருந்த அவர் " எனக்கு ஒரு விசனமும் இல்லை. எழுபதென்ன எழுநூறு ஜன்மம் ஆனாலும் பரவாயில்லை. நான் நாம சங்கீர்த்தனம் பண்ணியே எல்லா ஜன்மாக்களையும் கடந்து விடுவேன். எனக்கொன்றும் கஷ்டமேயில்லை" என்று அடித்துச் சொல்லி விட்டாராம்.
    "ஸ்வாமி! எனக்கென்ன குறை, பஜனை பண்ணப் போகிற க்ருஹத்தில் எல்லாம் நல்ல சுண்டக் காய்ச்சின பால் கொடுக்கிறார்கள். பழங்கள் விதம் விதமாகக் கொடுக்கிறார்கள். நான் பக்த குழாங்களுடன் ஆடிப் பாடிக் களித்து இருக்கிறேன். நரகமோ சுவர்கமோ புவியோ எங்கு இருப்பினும் நாம சங்கீர்த்தனம் இருந்தால் போதும் ஸ்வாமி எனக்கு. எத்தனை ஜன்மாவானாலும் ஆனந்தமாகக் கடந்து விடுவேன்" என்றாராம் அவர்.
    நாரதர் பஞ்சாக்னியிலே தபஸ் பண்ணிக் கொண்டிருந்த ஸ்வாமியிடம் போனார். அவரோ சாதகப் பட்சி மாதிரி நாரதர் எப்போது வருவார் என்று காத்துக் கொண்டு இருக்கிறார். அவரிடம் போய் நாரதர் சொன்னாராம் " ஸ்வாமி! உமக்கு இன்னமும் ஏழு ஜன்மா உள்ளது". அவர் " ஹா! இன்னமும் ஏழு ஜன்மாவா!" என்று மயங்கி விழுந்து விட்டாராம்.
    ஏனெனில் அவர் பண்ணுகிற வித்யை அவ்வளவு கடினமான வித்யை. ஆகவே சீக்கிரம் மோக்ஷம் கிடைக்காதா என்று பார்த்துக் கொண்டே இருக்கிறார். அப்படிப் பட்டவரிடம் இன்னமும் ஏழு ஜன்மா போறுக்க வேண்டும் என்றதும் அவர் நடு நடுங்கிப் போய் மயங்கி விழுந்து விட்டார்.
    ஆகவே தான் அகிஞ்சனர்களாக, அனந்யகதிகளாக இந்த யுகத்திலே வாழ்ந்து கொண்டிருக்கும் நமக்கு பாரத்வாஜ மகரிஷி சுலபமான வித்யையைச் சொல்லிக் கொடுக்கிறார். அது என்ன என்றால்--- அதுவே பிரபத்தி --பர சமர்ப்பணம், ஆத்ம சமர்ப்பணம், பரண்யாசம். அந்த எம்பெருமானிடத்திலே சரணாகதி அடைவதைத் தவிர வேறு மார்க்கமே இல்லாதவர்கள் நாம். உடனடியாகப் பண்ணி விட வேண்டும். அதைத் தான் பகவான் நம்மிடம் எதிர் பார்க்கிறான்.
    தைத்ரிய உபநிஷத்திலே " அஹம் அன்னம் " அஹம் அன்னம் " என்று வருகிறது. பகவானுக்கு நமது ஆத்மாவை அன்னமாகப் படைக்க வேண்டும் என்பது தான் அதன் பொருள்.
    புளியோதரை, வெண்பொங்கல், தத்யோனம் எல்லாம் பகவானுக்கு நிவேதனம் பண்ணுகிறோம். இவைகளெல்லாம் பகவானிடம் இல்லாத வஸ்துக்களா? அவற்றை நாம் கொடுத்துத் தான் அவன் ஏற்க வேண்டுமா என்ன. இந்த நிவேதனம் என்கிற காரியம் நமக்குத் தெரிய வேண்டும் என்பதற்காகவே இதைப் பண்ணுகிறோம். இதை விடப் பெரிய நிவேதனம் ஒன்றை நாம் பண்ண வேண்டும் -- அது தான் ஆத்ம நிவேதனம். அதை பழக்கிக் கொள்ளவே இந்த நிவேதனத்தை பகவானுக்கு நாம் பண்ண வேண்டும் என்று நம்முடைய ஆசார்யர்கள் இவற்றை ஏற்படுத்தினார்கள்.
    இந்த ஆத்ம நிவேதனத்திற்கு ஐந்து அங்கங்கள்.
    ஆனுகூல்ய சங்கல்பம்
    ப்ராதி கூல்யஸ்ய வர்ஜனம்
    மகா விஸ்வாசம்
    நீயே எனக்கு ரக்ஷகன். நீ என்னை ரக்ஷிக்காவிட்டால் வேறு யார் என்னை ரக்ஷிப்பர்கள் என்று மனமுருகிப் பிரார்த்திப்பது.
    கார்ப்பண்யம்

  • #2
    Re: SURRENDER (SARANAGATI)

    ஸ்வாமின், சரணகத தத்துவம் பக்தியின் சிறப்பு. உச்ச நிலை. பகவான் அருள்வதும்,
    பக்தன் சந்தேகமின்றி பலன் அடைவதும் இதன் சிறப்பு . பக்தர்கள் நம்பிக்கையோடு சரணாகதி அடைந்தால் பலனும் அருளும் நிச்சயம். மிக நல்ல பதிவு .மிக்க நன்றி .
    அன்புடன் ஜி ஜி மூர்த்தி அய்யர்

    Comment

    Working...
    X