Announcement

Collapse
No announcement yet.

அருணகிரிநாதர் பாடிய போட்டிப்பாடல்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • அருணகிரிநாதர் பாடிய போட்டிப்பாடல்

    வில்லிபுத்தூரார் என்னும் புலவர் நல்ல தமிழ்ப்புலமை கொண்டவர். ஆனால் புலவர்க்கே உரிய ஆணவமும் கொண்டவர்.. அவர் வருவோர் போவோர் எல்லாரையும் வாதத்திற்கு அழைப்பார். அதில...் தோற்பவர் பாடு திண்டாட்டம் தான். தோற்றுவிட்டால் தோற்றவர்களின் காதை தன் கையில் வைத்திருக்கும் காதறுக்கும் துரட்டியால் ஒட்ட அறுத்து விடுவார். புலவர்கள் அவர் முன்னிலையில் செல்ல அஞ்சினர்.
    எந்த வில்லனுக்கும் அதி வில்லன் ஒருவர் இருப்பார் இல்லையா? இருந்தார். வில்லிபூத்தூராரின் ஆணவம் அழியும் காலம் வந்தது.. முருகனைப்பாடும் அருணகிரிநாதர் அந்த ஊருக்கு வந்தார். வில்லி புத்தூரார் அருணகிரிநாதரையும் வாதுக்கழைத்தார்.. அருணகிரிநாதர் ஒரு புது கட்டளை போட்டார். அதாவது இருவர் கையிலும் காதறுக்கும் துரட்டி இருக்கவேண்டும். வில்லிபுத்தூராருக்கு கிலி வந்துவி்ட்டது. வெளிக்காட்டாமல் சம்மதித்து விட்டார்.. போட்டி ஆரம்பமாகியது..
    There was one villiputhurar who debates and defeats poets and chip off the ears; Aruna giri nather a famous Muruga-Bhaktha, eneters into debate and defeats the Villiputhurarar. The poem is as under:
    "திதத்தத்தத் தித்தத் திதிதாதை தாததுத் தித்தத்திதா
    திதத்தத்தத் தித்த திதித்தித்த தேதுத்து தித்திதத்தா
    திதத்தத்தத் தித்தத்தை தாததி தேதுதை தாததத்து
    திதத்தத்தத் தித்தித்தி தீதீ திதிதுதி தீதொத்ததே"
    THITHATTHAT THITHAT THITHITHATHAI THATHUTH
    THITHATTHITHA
    THITHATTHAT THITHA THITHITHTHITHATHA THAETHUTHU THITHITHATHA
    THITHATHATTHAT THITHATHATHAI THAATHATHI THAETHUTHAI THATHATHATHU
    THITHATTHATTHAT THITHTTHITHEE THEEE THEEE THITHITHUTHI THATHOTHTHATTHATHAE
    (ALL PLAYED IN SINGLE LETTER "THA" )
    அருணகிரிநாதர் பாடி முடித்து அதன் பொருள் கேட்டார்.. வில்லி புத்தூரார் விதிர்த்துப்போய் விட்டார்.. எத்தனை பாடலை பாடியிருப்போம். எத்தனை பேரின் காதை அறுத்திருப்போம்.. இப்பாடல் தலையும் புரியவில்லை, காலும் புரியவில்லை.. அவரது ஆணவம் அழிந்தது. தோல்வியில் பாடலுக்கு விளக்கம் கேட்டார்.. அருணகிரிநாதரோ போட்டி விதி்ப்படி காதை அறுக்கவில்லை. மேன்மக்கள் மேன்மக்களே.
    ..
    திதத்தத் தத்தித்த THITHATTHAT THITHAT - "திதத்தத் தத்தித்த" என்னும் தாளமானங்களை, REGULATION OF BEATS
    திதிTHITHI - திருநடனத்தால் காக்கின்ற PROTECTED BY DANCE
    தாதைTHATHAI - பரமசிவனும் PARAMASIVAN
    தாதTHATHU - பிரமனும் BRAHMA
    துத்திTHUTHTHI படப்பொறியினையுடையEMBLEMATC
    தத்திTHATTHI - - பாம்பினுடைய SNAKE
    தாTHA - இடத்தையும் MAT OR PLACE
    திதTHATHA - நிலைபெற்று STATIONED
    தத்து THATHU- ததும்புகின்ற WITH WAVES
    அத்திATHI - சமுத்திரத்தையும்பாயலாகக்கொண்டு SEA BED
    ததிTHATHI - தயிரானதுCURD
    தித்தித்ததேTHITHITHATHAE - தித்திக்கின்றதென்று SWEET
    து THU- உண்ட கண்ணனும் EATING KRISHNA
    துதித்துTHU THITH - துதி செய்து வணங்குகின்றPRAYING WITH RESPECT
    இதத்துITHATHU - பேரின்ப சொரூபியானPARAMATMA
    ஆதி AATHI- முதல்வனே! BRAHMANE
    தத்தத்துTHATHATHU - தந்தத்தையுடைய ELEPHANT TUSK
    அத்தி ATHI- அயிராவதம் என்னும் யானையால் வளர்க்கப்பட்டIRAVATHAM ELEPHANT OF INDRA
    தத்தை THATHAI- கிளி போன்ற தெய்வயானைக்கு PARROT LIKE DEIVA YANAI CONSORT OF LORD MURUGA
    தாதTHATHA - தொண்டனே!SERVANT
    தீதே THEETHAE- தீமையேSINFUL
    துதை THUTHAI- நெருங்கியENGULFED
    தாதுTHATHU - சப்த தாதுக்களால் நிறைந்ததும்7 POISONOUS INGRADIENTS
    அதத்துATHATHU - மரணத்தோடும்DEATH
    உதி UTHI - ஜனனத்தோடும்BIRTH
    தத்தும்THATHUM - பல தத்துக்களோடும்MORE COMPLICATIONS
    அத்துATHU - இசைவுற்றதுமானMADE UP OF
    அத்திATHI - எலும்புகளை மூடியBONES COVERED
    தித்தி THITHI- பையாகிய இவ்வுடல்BAGGY BODY
    தீTHEEE - அக்கினியினால்FIRE
    தீ THEEE- தகிக்கப்படுகின்றBURNING
    திதி THITHI- அந்நாளிலேTHAT DAY
    துதிTHUTHI - உன்னைத் துதிக்கும்PRAYING YOU
    தீ -THEEE புத்தி MY BRAIN
    தொத்ததுTHOTHATHU - உனக்கே அடிமையாகவேண்டும் I MUST SURRENDER TO YOU
    இதனை "ஏகாக்ஷரப் பாடல்" என்று சொல்வார்கள். ஏகம் அக்ஷரம்.... ஓரெழுத்து பாடல்.. அதிசயம் அதிசயிக்கும் அருணகிரி நாதரின் கந்தர் அந்தாதியின் 54 ஆவது பாடல்..

    from my mail inbox. Thanks to IRS.
Working...
X