Announcement

Collapse
No announcement yet.

ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி - விளக்கம்

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி - விளக்கம்

    ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி என்பது ஐந்து
    பெண்ணை பெறுவதைக் குறிப்பதாக பொதுவில்
    கூறுவார்கள். அதாவது ஆடை, ஆபரணங்கள்,
    கல்யாண செலவு, பிரசவம், குழந்தைகள் என்று
    அடுக்கடுக்காய் ஏகப்பட்ட செலவுகள் வந்து
    எத்தனை சொத்துக்கள் இருந்தாலும் அழிந்து
    போகும் . அதனால் தான் அப்படி சொன்னதாக
    கூறுவார்கள் .


    ஆனால் உண்மையில் வேறு ஒரு எண்ணத்தில்
    தான் அந்த பழமொழி நிலவில் இருப்பதாக ஒரு
    முறை திருமுருக கிருபானந்த வாரியார் தனது
    சொற்பொழிவில் குறிப்பிட்டார் .


    1. ஆடம்பரமாய் வாழும் தாய்


    2. பொறுப்பில்லாமல் வாழும் தந்தை


    3. ஒழுக்கமற்ற மனைவி


    4. ஏமாற்றுவதும் , துரோகமும் செய்யக்கூடிய
    உடன் பிறந்தோர்


    5. சொன்ன சொல் கேட்காத - பிடிவாதமுடைய
    பிள்ளைகள்




    ஆகிய ஐந்தும் இருந்தால் அரசனே ஆனாலும் கூட
    அவனது வாழ்க்கை அழிவில் போய் சேரும் என்பது
    தான் உண்மையான பொருள்.


    அதுதான் காலப்போக்கில் ஐந்து பெண் பெற்றால்
    அரசனும் ஆண்டி என்று ஆகி விட்டது .


    என்று வாரியார் குறிப்பிட்டார்.

  • #2
    Re: ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி - விளக்கம்

    Yes Sir, you are right.This is how so many proverbs/advises have corrupted into entirely different things over time.Nice clarification.
    Varadarsjan

    Comment


    • #3
      Re: ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி - விளக்கம்

      Nice explanation sir. Thanks.

      Comment

      Working...
      X