Announcement

Collapse
No announcement yet.

குரங்குகள் மலையை நோக்க

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • குரங்குகள் மலையை நோக்க

    குரங்குகள் மலையை நூக்கக் குளித்து தாம் புரண்டிட்டு ஓடித்
    தரங்க நீர் அடிக்கல் உற்ற சலமிலா வணிலம் போலேன்
    மரங்கள் போல் வலிய நெஞ்சம் வஞ்சனேன் நெஞ்சு தன்னால்
    அரங்கனார்கு ஆட்செய்யாதே அளியத்தேன் அயர்க்கின்றேனே –


    மனுஷ்யாதி காரமானவை ஒன்றும் இல்லை யாகில்
    திருவடி திரு அநந்த ஆழ்வான் முதலானவர்களைக் கொள்ளும் அடிமையை
    சாஸ்திர அவஸ்தை இன்றிக்கே இருந்துள்ள
    திர்யக்குகளைக் கொள்ளுவதாக நாம் வந்து அவதரித்த காலத்தில்
    திர்யக் சாமான்யத்தாலே அணில்கள் சுத்த பாவனை யோடே
    பண்ணின சில கிஞ்சித் காரம் உண்டு –
    அது தானும் உண்டோ வென்னில்
    அதுவும் இல்லை என்கிறார் –
Working...
X