Announcement

Collapse
No announcement yet.

ஸ்ரீ பெரிய திருமொழி-1-5-10

Collapse
X
 
  • Filter
  • Time
  • Show
Clear All
new posts

  • ஸ்ரீ பெரிய திருமொழி-1-5-10

    ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை வியாக்யானம்

    தாராவாரும் வயல் சூழ்ந்த சாளக்கிராமத் தடிகளை
    காரார் புறவின் மங்கை வேந்தன் கலியன் ஒலி செய்த தமிழ் மாலை
    ஆரார் உலகத்தறிவுடையார் அமரர் நன்னாட்டரசு ஆள
    பேர் ஆயிரமும் ஒதுமின்கள் அன்றி யிவையே பிதற்றுமினே ——————–1-5-10-


    ————————————————————————————————————
    வியாக்யானம் –
    தாரா இத்யாதி –
    தாராக்களாலே நிறைந்து இருந்துள்ள வயல் சூழ்ந்த
    ஸ்ரீ சாளக்கிராமத்திலே
    வந்து சந்நிஹிதனானார் ஸ்வாமியை கவி பாடிற்று –
    காரார்-இத்யாதி –
    மேகங்களின் உடைய நிரந்தர சஞ்சாரத்தை உடைத்தான
    பர்யந்த்தத்தை உடைய திரு மங்கைக்கு நிர்வாஹகரான ஆழ்வார்
    ஒலி உடைத்தாம் படியாக சொன்ன சொல் தொடை
    ஆரார் உலகத்தறிவுடையார் –
    லோகத்தில் அறிவு உடையாராய் இருப்பார் –
    அமரர் நன்னாட்டரசு ஆள –
    நித்ய சூரிகள் உடைய நல் நாடு உண்டு -பரம பதம்
    அத்தை
    ஆள்மின்கள் வானகம் -என்கிறபடியே
    தாங்கள் இட்ட வழக்காம் படி நடத்த –
    பேர் ஆயிரமும் ஒதுமின்கள்
    ஆயிரம் திரு நாமங்களையும் வாயாலே சொல்லப் பாரும் கோள் –
    அன்றி யிவையே பிதற்றுமினே —
    அங்கன் இன்றிக்கே
    இவற்றையே அடைவு கெட சொல்லப் பாரும் கோள்
    —————————————————————————————
Working...
X